மூல நோய்க்கு தேரையர் அருளிய தீர்வு -5

Author: தோழி / Labels: , ,

மூல நோய்கள் நீங்க தேரையர் அருளிய மற்றொரு மருத்துவ முறையினை இன்றைய பதிவில் பார்ப்போம். இந்த தகவல் தேரையர் வைத்திய சாரம் என்னும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.

கேளப்பாக் குளப்பாசிக் கிழங்கு வாங்கி
கண்டகண்ட மாயரிந்து பலமாரைந்து
பேணப்பா பலகாயம் சபசுநெய் விட்டு
புரட்டியே வேகவைத்து பலமொன்றாக
தோணப்பா கெசமுகனைப் பூசை பண்ணி
தொந்தித்து அரைத்துத் தினமே கொள்ளு
வாணப்பா ரெத்தஞ்சீழ் வெளியுள் மூலம்
ஒழிந்துபோம் முளைமூலம் நயந்து பாரே.

- தேரையர்.

முப்பது பலம் கொட்டிக் கிழங்கை கொண்டு வந்து அதனை துண்டு துண்டுகளாக அரிந்து ஒரு சட்டியில் போட்டு, அது மூழ்கும் அளவு பசுவின் நெய் ஊற்றிக் கொள்ள வேண்டுமாம். பின்னர் அதனை அடுப்பில் ஏற்றி பக்குவமாக எரிக்க வேண்டுமாம். எரிக்கும் போது கிழங்கினை கிளறி விட்டு நன்கு பிரட்டி வேக வைத்து எடுத்து சேமித்துக் கொள்ளவேண்டுமாம். பின்னர் அதனை நன்கு அரைத்து தினமும் உண்ண வேண்டும் என்கிறார். இவ்வாறு உண்பதனால் இரத்த மூலம், சீழ் மூலம், உள் மூலம், வெளி மூலம், முளை மூலம் ஆகிய நோய்கள் குணமாகும் என்கிறார். இதற்கு பத்தியம் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இத்துடன் மூல நோய் குறித்த நெடுந்தொடர் நிறைவுற்றது.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..




Post a Comment

6 comments:

jana said...

அன்புள்ள தோழி அவர்களுக்கு !

வணக்கம்

நல்ல தகவல் வாழ்த்துக்கள் !

கொட்டிகிழங்கு என்பது என்ன ? பனங்கிலங்கா

இராஜராஜேஸ்வரி said...

இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

S.Puvi said...

தொடர்தகவலுக்கு நன்றிகள்

avva kala said...

நல்ல தகவல்

ANTHUVAN RONALD said...

அருமையான தகவல்கள் மிக்க நன்றி

ANTHUVAN RONALD said...

அருமையான தகவல் நன்றி

Post a Comment