மூல நோய்கள் நீங்க தேரையர் அருளிய பல வழிமுறைகளில் எளிய வைத்திய முறை ஒன்றினை இன்றைய பதிவில் பார்ப்போம்.இந்த தகவல் தேரையர் அருளிய “தேரையர் வைத்திய சாரம்” என்னும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.
போச்சடா அவ்விருட்சி வெளியில் வாங்கி
பொடியாகச் செய்தொரு சட்டியிலே
பாச்சடா பலகாயம் பசுவின் நெய்தான்
பக்குவமாய் விட்டெரித்துப் புரட்டிக் கொண்டு
மூச்சடா அறைநாலைந் துண்டை செய்து
முனைந்தந்தி சந்தியீரண் டுண்டை கொள்ளு
மாச்சடா ரெத்தஞ்சீழ் வெளியுள் மூலம்
மகத்தான முளைமூலம் வாங்கக் கேளே.
- தேரையர்.
விச்சிப் பூவை சேகரித்து, அதனை நன்கு சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். நறுக்கிய விச்சிப் பூவினை ஒரு சட்டியில் போட்டு அது மூழ்கிடும் அளவு தூய்மையான பசுவின் நெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். பின்னர் சட்டியை அடுப்பில் ஏற்றி பக்குவமாக எரிக்க வேண்டும்.
பக்குவமாய் எரித்த பின்னர் கலவையை நன்கு பிரட்டி நாலைந்து உருண்டைகளாகச் செய்து கொள்ள வேண்டுமாம். பின்னர் காலை மாலை என இரண்டு உருண்டைகள் வீதம் உண்ண வேண்டும் என்கிறார். இவ்வாறு உண்பதனால் இரத்த மூலம், சீழ் மூலம், உள் மூலம், வெளி மூலம், முளை மூலம் ஆகிய நோய்கள் குணமாகும் என்கிறார்.
இதற்கு பத்தியம் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
குறிப்பு : விச்சிப்பூவிற்கு மலையஞ்சிவந்தி என்றொரு பெயரும் உண்டு.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..
Post a Comment



1 comments:
அன்புள்ள தோழி அவர்களுக்கு !
வணக்கம்
நல்ல தகவல் வாழ்த்துக்கள் !
Post a Comment