மூல நோய்கான தீர்வுகள் வரிசையில் இன்று வித்தியாசமான ஒரு தீர்வினை பார்க்க இருக்கிறோம். இந்த தகவல் தேரையர் அருளிய “தேரையர் வைத்திய சாரம்” என்னும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.
பாரப்பா நத்தையொடுத் தானெடுத்து வந்து
பழையதோர் பாண்டத்துள் ளடைத்துக் கேளு
தீரப்பா வாய்மூடி அடுப்பி லேற்றி
தீமூட்டி ஆவிமே லெழும்பும் போது
யேரப்பா இருகால் பலகை போட்டு
யிருத்திமேற் துளையதி லாசனத்தை வைத்து
நேரப்பா வேதுபிடி நாளீரைந்து
ரெத்தசீழ் மூலமுளை மூலம் போச்சே.
- தேரையர்.
நத்தையின் மேல் ஓடு ஒன்றினைக் கொண்டு வந்தது பழைய பாத்திரத்தில் போட்டு மேல் மூடி இட்டு அடுப்பில் ஏற்றி எரிக்க வேண்டுமாம். நன்கு எரிந்து, பாத்திரத்தில் இருந்து ஆவி வெளியே வரும் போது மூடியை நீக்கி விட்டு பாத்திரத்தின் மீது இரண்டு பலகையை இடைவெளி விட்டு வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது அந்த இடைவெளியின் வழியே வரும் ஆவியானது ஆசன வாயில் படும் படி உட்கார வேண்டுமாம்.
ஆசனவாயில் நத்தை ஓட்டின் ஆவியை பிடிக்கும் இதனை வேது பிடித்தல் என்றும் சொல்வர். இவ்வாறு தொடர்ந்து பத்து நாட்கள் ஆசனவாயில் ஆவி பிடித்து வந்தால் இரத்த மூலம், சீழ் மூலம், முளை மூலம் போன்றவைகள் குணமாகும் என்கிறார்.
ஆச்சர்யமான தகவல்தானே!
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..
Post a Comment



3 comments:
அன்புள்ள தோழி அவர்களுக்கு !
வணக்கம்
ஆச்சரியமான தகவல் வாழ்த்துக்கள் !
ஆச்சர்யமான தகவல்தான்! நன்றி!
நல்ல தகவல்.....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.....
நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
Post a Comment