நமது முன்னோர்கள் வகுத்த சோதிட இயல் கோள்களின் நகர்வை அடிப்படையாகக் கொண்டது. ஒன்பது கோள்கள், அவற்றுள் பன்னிரெண்டு ராசிகள், அதன் ஊடே 27 நட்சத்திரங்கள், ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் நான்கு பாதங்கள் என பிரிக்கப் பட்டு அதனூடே பலா பலன்கள் கூறப் பட்டிருக்கின்றன.
சித்த மருத்துவத்தைப் பொறுத்தவரையில் நோயாளியை மருத்துவரிடம் கொண்டு வரும் நேரம், அல்லது நோயாளியின் இடத்துக்கு மருத்துவரை அழைத்துப் போக ஆட்கள் வரும் நேரத்தை வைத்து நோயின் தன்மையை கணித்து அதற்கு தக்க சிகிச்சையை அளிக்க இந்த சகுன சாத்திரம் உதவியிருக்கிறது. இதைப் பற்றி புலிப்பாணி சித்தர் தனது "புலிப்பாணி வைத்திய சாரம்" நூலில் அருளிய தகவல்களையே இனி வரும் நாட்களில் காண இருக்கிறோம். இன்றைய பதிவில் அசுவினி மற்றும் பரணி நட்சத்திரங்கள் நடக்கும் காலத்தில் ஒருவர் நோய் வாய்ப் பட்டிருந்தால் அதன் பலன் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி பார்ப்போம்.
தானென்ற அசுபதிநாள் முதற்காலப்பா
தயவான ஒன்பதுநாள் சுரமே தீரும்
தேனென்ற ரெண்டாங்கால் கொல்லுமப்பா
திரமான பத்தாநாள் மரணமாவான்
கோனென்ற மூன்றாங்கால் பதினைந்தாகும்
குணமாக நாலாங்கால் மரணஞ் செய்யும்
வானென்ற பரணிதனில் முதற்கால் மூன்று
வளமான ரெண்டாங்கா லேழாமென்னே.
என்னவே மூன்றாங்கால் பதினைந்தாகும்
எளிதில்லா நாலாங்கால் பதினைந்தாகும்
- புலிப்பாணி சித்தர்.
அசுவினி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் ஒருவருக்கு நோய் உண்டாகி இருந்தால் ஒன்பது நாட்களில் அந்த சுரம் நீங்கி விடுமாம்.
அசுவினி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் ஒருவருக்கு நோய் உண்டானால் பத்தாவது நாளில் அவருக்கு மரணம் உண்டாகுமாம்.
அசுவினி நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் ஒருவருக்கு நோய் உண்டானால் பதினைந்து நாட்களில் அந்த நோய் குணமாகுமாம்.
நான்காம் பாதத்தில் ஒருவருக்கு நோய் உண்டானால் அவருக்கு மரணம் சம்பவிக்குமாம்.
அசுவினி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் ஒருவருக்கு நோய் உண்டானால் பத்தாவது நாளில் அவருக்கு மரணம் உண்டாகுமாம்.
அசுவினி நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் ஒருவருக்கு நோய் உண்டானால் பதினைந்து நாட்களில் அந்த நோய் குணமாகுமாம்.
நான்காம் பாதத்தில் ஒருவருக்கு நோய் உண்டானால் அவருக்கு மரணம் சம்பவிக்குமாம்.
பரணி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் ஒருவருக்கு நோய் உண்டானால் அது மூன்று நாட்களில் குணமாகுமாம்.
இரண்டாம் பாதத்தில் நோய் உண்டானால் அது ஏழு நாட்களில் குணமாகுமாம். பரணியின்
மூன்றாம் பாதம் நோய் கண்டால் பதினைந்து நாட்களில் குணமாகுமாம்.
நான்காம் பாதமானால் பதினைந்து நாளில் நலமாகுமாம்.
இரண்டாம் பாதத்தில் நோய் உண்டானால் அது ஏழு நாட்களில் குணமாகுமாம். பரணியின்
மூன்றாம் பாதம் நோய் கண்டால் பதினைந்து நாட்களில் குணமாகுமாம்.
நான்காம் பாதமானால் பதினைந்து நாளில் நலமாகுமாம்.
நாளைய பதிவில் கிருத்திகை / கார்த்திகை மற்றும் ரோகிணி நட்சத்திர பலன்களைப் பற்றி பார்ப்போம்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



