சித்தர்களின் ஜாலவித்தை வரிசையில் போகர், தன்வந்திரி, அகத்தியர் ஆகியோர் அருளிய வித்தைகளை இதுவரை பார்த்தோம். அந்த வரிசையில் இன்று புலிப்பாணி சித்தர் அருளிய ஜாலவித்தை ஒன்றைப் பற்றி பார்ப்போம். இவை யாவும் தகவல் பகிர்வுகளே, இவற்றின் உண்மைத் தன்மை ஆய்வுக்கு உரியது.
இனி, புலிப்பாணி சித்தர் தனது "புலிப்பாணி ஜாலம்" என்னும் நூலில் அருளிய நெருப்பின் மீது நடக்கும் வித்தையை பார்ப்போம்.
மதானப்பா மணித்தக்காளி சாறுகூட
மைந்தனே உத்தாமணியின் சாறுகூட்டி
வானப்பா வசலையின் சாறுசேர்த்து
வளமாக மத்தித்து வைத்துக் கொண்டு
தானப்பா கைகாலில் தடவிக் கொண்டு
தன்மையாய்த் தணல்மிதிக்கத் தணலும் நீர்போல்
ஏனப்பா இவ்விதமே செய்தா யானால்
இதமாகத் தணலதுவுந் தயங்குந் தானே
- புலிப்பாணி.
மணத்தக்காளி, உத்தாமணி, வசலை ஆகிய மூன்றின் சாறுகளை தனித் தனியே எடுத்து அவற்றை ஒன்றாக கலந்து கொள்ள வேண்டுமாம். இந்த சாறு கலவையை கை, காலில் பூசிக் கொண்டு நெருப்பில் நடந்தால் நெருப்பின் உஷ்ணம் கால்களைப் பாதிக்காது என்கிறார். மேலும் நெருப்பானது தண்ணீர் போல் இருக்குமாம்.
சுவாரசியமான தகவல்தானே, ஆர்வமுள்ளவர்கள் பரிட்சித்துப் பார்க்கலாம்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...











