வசியம், மோகனம், தம்பனம், உச்சாடனம், ஆக்ருசணம், பேதனம், வித்துவேடணம், மாரணம் என்பவை மாந்திரிகத்தின் எட்டு நிலைகள் எனவும், அவை ஒவ்வொன்றும் மக்களுக்கு எந்தந்த விதத்தில் தீர்வுகளை முன் வைத்திருக்கின்றன என்பது பற்றியும் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இன்று உச்சாடன கலையின் பயன்பாட்டினை பற்றி பார்ப்போம்.
மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் உருவாக்கப் படும் ஒலி அதிர்வுகளைக் கொண்டு தங்களின் உடலையும், சுற்றத்தையும் பாதுகாப்பாக வைத்திருக்கும் ஒரு உத்தியே உச்சாடன கலை. இந்த கலையை பயன்படுத்தி மக்களுக்கு எத்தகைய தீர்வுகளை அளிக்க முடியும் என்பதை அகத்தியர் தனது "அகத்தியர் 12000" என்னும் நூலில் பின் வருமாறு விளக்குகிறார்.
போமப்பா வெள்ளீயந் தகடுசெய்து
புத்தியுடன் மசிவநய வென்று மாறி
ஆறாத நோய்களுக்கு அளித்தாயானால்
தாமப்பா நோய்கள் எல்லாம் உச்சாடிக்கும்
தன்மையுடன் கண்டதெல்லாம் உச்சாடிக்கும்
நாமப்பா கருவித்தை அதிதவித்தை
நாட்டினோம் பன்னிரண்டு நூற்றில்தானே.
வெள்ளீயத்தாலான தகடு ஒன்றினை எடுத்து அதில் நமசிவய என்ற சிவ மந்திர எழுத்துக்களை மாற்றி "மசிவநய" என்று எழுதிக் கொள்ள வேண்டுமாம். பின்னர் அந்த வெள்ளீயத் தகட்டை இரு கைகளில் ஏந்தியபடி கிழக்குமுகமாய் அமர்ந்து உச்சாடன மூலமந்திரத்தினை 1008 தடவைகள் தொடர்ச்சியாக செபிக்க வேண்டுமாம்.
இவ்வாறு செபித்து முடிந்ததும் தீர்வும், தேவையும் உள்ளவர்களுக்கு இந்த யந்திரத்தினை கட்டிவிட வேண்டுமாம். அதன் பின் அவர்களைப் பீடித்த நோய்கள் எல்லாம் உச்சாடிக்குமாம். அத்துட்ன் அவர் பார்ப்பது எல்லாம் உச்சடிக்கும் என்கிறார்.
உச்சாடனம் மூல மந்திரம் - ஓம் வயநமசி ஸ்ரீயும் அரிஓம் ஐயும் சுவாகா.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..
Post a Comment



4 comments:
nice
மிகவும் அருமை தோழி
thozhi neeggal karpamuligaigalai patri koorum pothu avatrin padangalaiyum veliyittal nanraga irrukum . thangalin sevavai tamil makkaluku thevai vazga valamudan. jana
uchadana moola mantra is om vayanamasi or masivanaya
Post a Comment