பெரும்பாலும் தவறான உணவு பழக்க வழக்கம் மற்றும் வாழ்க்கை முறையினாலுமே மூல நோய் வருகிறது. அரிதாக சிலருக்கு பரம்பரையாக வருவதும் உண்டு. எனவே முறையான உணவு பழக்க வழக்கங்களையும், பதட்டமில்லாத வாழ்க்கை முறையினை அமைத்துக் கொண்டால் இந்த நோயினை எளிதில் தவிர்க்க முடியும்.
மலத்தோடு இரத்தம் கலந்து வருவதே இந்த நோயின் முதற்கட்ட அறிகுறியாகும். இந்த ரத்தப் போக்கு உடனடியாக நின்று விடும் என்பதால் பலரும் இதனை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.அடுத்த கட்டமாக ஆசன வாயில் இருந்து இரத்த கசிவும், நோய் முற்றிய நிலையில் இரத்தப் போக்கும் உண்டாகும். எனவே ஆரம்ப நிலையில் மருத்துவரை அணுகினால் மருந்துகள் மூலம் இந்த பிரச்சினைக்கு எளிதில் தீர்வு காணலாம்.
அலோபதி மருத்துவம் மூல நோயை “உள் மூலம்”, “வெளி மூலம்” என இரு பெரும் பிரிவுகளாய் பகுத்து கூறுகிறது. ஆசன வாயைச் சுற்றிய பகுதியில் உருவாகும் மூலம் வெளி மூலம் எனப்படும். குதத்தின் உட்புற சுவர்களில் உருவாகும் மூலம் உள் மூலம் எனப்படுகிறது. கீழே உள்ள படம் இந்த இரண்டு வகை மூலம் பற்றி விளக்குகிறது.
உள் மூலமானது பாதிப்புகளைப் பொறுத்து நான்கு நிலைகளாய் குறிப்பிடுகின்றன.
முதல் நிலையில் மலத்தோடு இரத்தப் போக்கு மட்டும் இருக்கும்.
இரண்டாம் நிலையில் இரத்தப் போக்குடன் குதத்தின் உட்புற சுவரில் புடைப்புகள் தோன்றி வளர ஆரம்பித்து இருக்கும்
மூன்றாம் நிலையில் மலம் கழிக்கும் போது இந்த புடைப்பு ஆசன வாய்க்கு வெளியே வந்து பின்னர் உள்ளிழுத்துக் கொள்ளும்.
நான்காம் நிலை மூலத்தின் முற்றிய நிலையாகும். இந்த நிலையில் மலம் கழிக்கும் போது வெளியே வரும் மூலம் உள்ளிழுக்காமல் வெளியே தொங்கிக் கொண்டேயிருக்கும்.
வெளி மூலம் என்பது ஆசன வாயின் வெளிப்புறச் சுவர்களில் உருவாகும். இது மிகவும் வலி மிகுந்ததாக இருக்கும்.
மேலும் விவரங்களுடன் நாளைய பதிவில் சந்திக்கிறேன்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..
Post a Comment




3 comments:
தகவலுக்கு மிக்க நன்றி!
பயன் உள்ள மருத்துவ பதிவு .
நன்றி தோழி .
நல்ல தகவல்
Post a Comment