கடந்த ஒன்பது பதிவுகளின் ஊடே சித்த மருத்துவத்தில் சகுன சாத்திரம் எவ்வாறு பயன்பட்டது என்பதைப் பற்றியும், 22 நட்சத்திரங்களின் பலன்களைப் பற்றியும் பார்த்தோம். பலருக்கும் இந்த தொடர் சலிப்பூட்டுவதாகவும், அலுப்பினை தருதாகவும் இருந்திருக்குமென நினைக்கிறேன். நம் முன்னோர்கள் விட்டுச் சென்றிருக்கும் இம் மாதிரி தகவல்கள் குறிப்பிட்ட சிலரைத் தாண்டி மற்றவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. இவற்றின் நம்பகத் தன்மை குறித்து நமக்குள் கேள்விகள் எழுந்தாலும் இவற்றை முற்றாக புறக்கணித்து விட முடியாது. இதன் பின்னாலிருக்கும் கூறுகள் ஆய்வுக்கும், விவாதத்திற்கும் உட்பட்டவை.
இன்றைய பதிவில் மீதமிருக்கும் ஐந்து நட்சத்திரங்களுக்கான பலன்களையும், எந்தெந்த கிழமைக்கு என்னென்ன நட்சத்திரம் ஆகாது என்பதைப் பற்றிய புலிப்பாணிச் சித்தரின் தெளிவுகளை பார்ப்போம்.
விதமான அவிட்டமுதல் கால்தானொன்பான்
நீச்சப்பா ரெண்டாங்கால் பதினைந்தாகும்
நிசமான மூன்றாங்கால் முப்பத்திரண்டே
இரண்டான நாலாங்கால் முப்பத்தொன்பான்
நிசமான சதய முதற்கால் தானேழு
வண்டான ரெண்டாங்கால் பத்தாம்பாரு
வளமான மூன்றாங்கால் நாள்தானாலு
திண்டான நாலாங்கால் நாள்தா னைந்து
திறமான பூரட்டாதி முதற்கால் சாவு
கொண்டான ரெண்டாங்கால் பதினாறாகும்
குணமான மூன்றாங்கா லெண்பத்தொன்றே
ஒன்றான நாலாங்கால் நாற்பத்தொன்று
ஒளிவுத்திரட்டாதி முதற்கா லேழு
நன்றான விரண்டாங்கால் பதினெட்டாகும்
நலமான மூன்றாங்கா லேழாம்பாரு
குன்றான நாலாங்கா லிருபத்தெட்டாம்
குணமான ரேவியு முதற்கால் சாவு
அண்டான ரெண்டாங்கால் பதினொன்றப்பா
அடைவான மூன்றாங்கால் பதினெட்டாம்
ஆமேதான் நாலாங்கால் லிருபத்தாறு
அடைவான மரணமென்ன நாள்தான் சொல்வேன்
- புலிப்பாணிச் சித்தர்.
அவிட்டம் நட்சத்திரத்தின் முதற் பாதத்தில் நோய் கண்டால் ஒன்பது நாட்களில் குணமாகும்.
அவிட்டம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் நோய் கண்டால் பதினைந்து நாட்களில் குணமாகும்.
அவிட்டம் நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் நோய் கண்டால் முப்பத்தியிரண்டு நாட்களில் குணமாகுமாம்.
அவிட்டம் நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் நோய் கண்டால் முப்பத்தொன்பது நாட்களில் குணமாகுமாம்.
சதயம் நட்சத்திரத்தின் முதற் பாதத்தில் நோய் கண்டால் ஏழு நாட்களில் குணமாகும்.
சதயம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் நோய் கண்டால் பத்து நாட்களில் குணமாகும்.
சதயம் நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் நோய் கண்டால் நான்கு நாட்களில் குணமாகும்.
சதயம் நட்சத்திரத்தின் நாலாம் பாதத்தில் நோய் கண்டால் ஐந்து நாட்களிலும் நலமாகுமாம்.
பூரட்டாதி நட்சத்திரத்தின் முதற் பாதத்தில் நோய் கண்டால் மரணம் சம்பவிக்குமாம்.
பூரட்டாதி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் நோய் கண்டால் பதினாறு நாட்களில் குணமாகும்.
பூரட்டாதி நட்சத்திரத்தின் முண்றாம் பாதத்தில் நோய் கண்டால் எண்பத்தொரு நாட்களிலும் நலமாகுமாம்.
பூரட்டாதி நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் நோய் கண்டால் நாற்பத்தியொரு நாட்களிலும் குணமாகுமாம்.
உத்திரட்டாதி நட்சத்திரத்தின் முதற் பாதத்தில் நோய் கண்டால் ஏழு நாட்களில் குணமாகுமாம்.
உத்திரட்டாதி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் நோய் கண்டால் பதினெட்டு நாட்களில் குணமாகும்.
உத்திரட்டாதி நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் நோய் கண்டால் ஏழு நாட்களில் குணமாகும்.
உத்திரட்டாதி நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் நோய் கண்டால் இருபத்தெட்டு நாட்களிலும் குணமாகுமாம்.
ரேவதி நட்சத்திரத்தின் முதற் பாதத்தில் நோய் கண்டால் மரணம் சம்பவிக்குமாம்.
ரேவதி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் நோய் கண்டால் பதினோறு நாட்களில் குணமாகும்.
ரேவதி நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் நோய் கண்டால் பதினெட்டு நாட்களில் நலமாகுமாம்.
ரேவதி நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் நோய் கண்டால் இருபத்தி ஆறு நாட்களில் நலமாகுமாம்.
இனி ஒவ்வொரு கிழமைக்கும் ஆகாத நாட்களை பற்றிய புலிப்பாணிச் சித்தரின் தெளிவை பார்ப்போம்.
வாமேநீ அருக்கனாள் பரணியாகா
வளமான திங்கட் சித்திரையு மாகா
தாமேநீ செவ்வாய்க்கு முத்திராடந்
தயவான புதனுக்கு மஸ்தமாகா
நாமேநீ குருநாள்தான் கேட்டையாகா
நலமான புகர்நாள் பூராடந் தீதே.
தீதான சனிநாள் ரேவதியுமான
தீங்குவரு மிந்நாளில் நோய்கள் கண்டால்
வாதான நமனுக்கே அறுதியாகும்
வந்தநோய் தீராது கொல்லுங் கொல்லுந்
தானான வயித்தியரே நூலைப் பார்த்துத்
தயவாக வைத்தியங்கள் செய்யவேணும்
கோனான போகருட கடாட்சத்தாலே
கொற்றவனே புலிப்பாணி சொன்னேன் பாரே
- புலிப்பாணிச் சித்தர்.
ஞாயிற்றுக் கிழமை பரணி நட்சத்திரம் ஆகாது.
திங்கட்கிழமை சித்திரை நட்சத்திரம் ஆகாது.
செவ்வாய்கிழமை உத்திராட நட்சத்திரம் ஆகாது.
புதன்கிழமை அஸ்த நட்சத்திரம் ஆகாது.
வியாழக்கிழமை கேட்டை நட்சத்திரம் ஆகாது.
வெள்ளிக் கிழமை பூராடம் நட்சத்திரமும் ஆகாது.
சனிக்கிழமையில் ரேவதி நட்சத்திரம் ஆகாது.
இந்த கெட்ட நாட்களில் நோய்கள் உண்டானால் எமன் நெருங்கும் நாளாகும் என்கிறார். இந்த தகவல்களை குருநாதர் போகருடைய கடாட்சத்தினால் புலிப்பாணியாகிய தான் கூறுகிறேன் என்கிறார்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment
9 comments:
Nalla oru pathivu.
மிக அபூர்வமான தகவல்களை தேடி பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!
Dear Thozhi, A small question on this post.
As said above, How to find the time of appearance of deseases. You know we knows only when its affects seviourly. But the point of appearance determines the impact and duration of cure as well. Throw some lights on how to determine the right time of appearance.
Thanks
can you please send me the pulipani jothidam 300 soft copy to my mail id.
Many Thanks
Arumaiyana surukkamaana padhivugalai. Vaazhthukkal.
நன்றி. நல்ல தகவல்.
சீக்கிரம் அடுத்த சீரிஸ் ஆரம்பிங்க
முன்னோர்களின் அனுபவமிக்க சொல்லை முற்றாக ஒதுக்கிவிட முடியாது ,அனுபவத்திலும் நக்ஷத்திரங்கள் தன பலனை மிகசரியாகவே செய்கிறது .நன்றி .வை.சங்கரன்
தோழி ,
தங்களின் ,கடின உழைப்பினால் ,தொகுத்த பதிவுகளை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
இந்த தகவல்கள் கிடைப்பது மிக அரிது.
how can i getting the body growth?
no one sitthar say any thing tablets? wiil u please tell me
Post a Comment