நண்பர்கள் பலர் தங்களூடைய நட்சத்திரத்திற்கு என்ன பலன் என அறிய ஆவலாய் இருப்பதாய் மின்னஞ்சல் வழியேயும், நேற்றைய பதிவில் பின்னூட்டமாகவும் தங்களின் ஆவலை வெளியிட்டிருந்தனர். இந்த சாத்திர பலன்கள் தனிப்பட்டவர்களுக்கானது இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டுகிறேன். சித்த மருத்துவத்தில் சகுன சாத்திரம் என்பது குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் வரும் நோயாளியின் நோய்த் தன்மையை கண்டறிவதற்காக பயன்பட்டது.
இன்றைய பதிவில் மிருகசீரிடம் மற்றும் ஆதிரை நட்த்திரங்கள் நடைபெறும் நாட்களில் நோயுற்றிருப்பவர்களுக்கான பலன்களை பார்ப்போம். இந்த தகவல்கள் புலிப்பாணி சித்தர் அருளிய "புலிப்பாணி வைத்தியசாரம்" என்கிற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டவை.
முத்தான மான்றலையின் முதற்காலப்பா
முப்பது நாளான பின்பு தீரும்பாரு
சித்தான ரெண்டாங்கா லிருபத்தெட்டு
திரமான மூன்றாங்கால் பதினைந்தாமே.
ஆமேதான் நாலாங்கால் முப்பத்தைந்து
ஆடைவான ஆதிரைநாள் முதற்கா லொன்பான்
தாமேதான் ரெண்டாங்கால் மரணமாகும்
தயவாக மூன்றாங்கால் நாள்தான் பத்து
வாமேதான் நாலாங்கா லிருபத்தைந்து
- புலிப்பாணி சித்தர்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தின் முதற்பாதத்தில் நோயுற்றிருந்தால் அந்த நோய் முப்பது நாட்கள் கடந்த பின்னர் நலமாகுமாம்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் நோயுற்றிருந்தால் அந்த நோய் இருபத்தியெட்டு நாட்களில் நலமாகுமாம்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தின்மூன்றாவது பாதத்தில் நோயுற்றிருந்தால் அந்த நோய் பதினைந்து நாட்களில் நலமாகுமாம்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தின்நான்காம் பாதத்தில் நோயுற்றிருந்தால் அந்த நோய் முப்பத்தைந்து நாட்களில் குணமாகுமாம்.
ஆதிரை நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் நோயுற்றிருந்தால் அந்த நோய் ஒன்பது நாட்களில் குணமாகுமாம்.
ஆதிரை நட்சத்திரத்தின் இரண்டாம் பாத்தில் உண்டானால் மரணமும் சம்பவிக்குமாம்.
ஆதிரை நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் நோயுற்றிருந்தால் அந்த நோய் பத்து நாட்களில் நலமாகுமாம்.
ஆதிரை நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் நோயுற்றிருந்தால் அந்த நோய் இருபத்தி ஐந்து நாட்களிலும் நலமாகுமாம்.
அடுத்த பதிவில் புனர்பூசம் மற்றும் பூசம் நட்சத்திரங்களுக்கான பலன்களைப் பற்றி பார்ப்போம்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment



4 comments:
பயனுள்ள தகவல்! நன்றி
நல்ல பகிர்வு...
தங்களின் பகிர்வுகள் என் dashboard-ல் வருவதில்லை... என்னவென்று பார்க்க வேண்டும்... அது இருக்கட்டும்...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/6.html) சென்று பார்க்கவும்...
நன்றி...
Please tell me , Did Tamil has value in Ramayana and Mahabaratha ? and why Veda Viasa ignored Tamil people in these two great epic of India?
எளிமையான வரிகளில் ...
Post a Comment