சித்த மருத்துவத்தைப் பொறுத்த வரை சகுன சாத்திரம் என்பது இருவகைப்படும் என்றும் அதன் மூலம் நோயாளியின் நிலையை கணிப்பது பற்றிய தகவல்களை இந்த தொடரின் ஊடே பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
அதன் தொடர்ச்சியாய் இன்றைய பதிவில் பூரம், உத்திரம், அஸ்தம், சித்திரை மற்றும் சுவாதி நட்சத்திரங்கள் நடக்கும் நாட்களில் ஒருவர் நோய்வாய் பட்டிருந்தால் அதற்கான தெளிவுகள் மற்றும் தீர்வுகள் எத்தகையதாய் இருக்கும் என்பதை பார்ப்போம்.
இந்த தகவல்கள் புலிப்பாணி சித்தர் அருளிய "புலிப்பாணி வைத்தியசாரம்" என்னும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டவை.
குணம்பூர முதற்கால்தான் சாவுமாகும்
தேனான ரெண்டாங்கா லிருபத்தைந்தில்
சிறப்பான மூன்றாங்கா லிருபத்தாறே.
ஆறான நாலாங்கா லெண்பத் தொன்றாம்
அடைவான வுத்திரந்தான் முதற்காலெட்டு
வீறான ரெண்டாங்கால் முப்பதாகும்
விதமான மூன்றாங்கா லைம்பத்திரண்டாந்
தீரான நாலாங்கால் மரணமாகும்
திறமான அஸ்தமுதற்கால் தானெட்டு
கூறான ரெண்டாங்கால் பதினைந்தாகும்
குணமாக மூன்றாங்கா லிருபத்தெட்டே
எட்டான நாலாங்கா லெண்பத்தி ரெண்டு
எளிதான சித்திரையு முதற்கா லொன்பால்
நெட்டான ரெண்டாங்கால் பதினைந்தாகும்
நேரான மூன்றாங்கால் பன்னிரெண்டு
கிட்டான நாலாங்கால் நாற்பத்தொன்று
கெதியான சோதி முதற்கா லீராறு
குட்டான ரெண்டாங்கால் மரணஞ் செய்யுஞ்
குணமான மூன்றாங்கா லெண்பத்தெட்டே
எட்டான நாலாங்காற் பன்னி ரண்டு
- புலிப்பாணி சித்தர்.
பூரம் நட்சத்திரத்தின் முதற்பாத்தில் உண்டானால் மரணம் சம்பவிக்குமாம்.
பூரம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதமானால் இருபத்தைந்து நாட்களில் குணமாகுமாம்.
பூரம் நட்சத்திரத்தின் மூன்றாம் பாதமானால் இருபத்தாறு நாட்களில் குணமாகுமாம்.
பூரம் நட்சத்திரத்தின் நான்காம் பாதமானால் எண்பத்தியோரு நாட்களில் நலமாகுமாம்.
உத்திரம் நட்சத்திரத்தின் முதற் பாதத்தில் நோய் உண்டானால் எட்டு நாட்களில் குணமாகுமாம்.
உத்திரம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதமானால் முப்பது நாட்களில் குணமாகுமாம்.
உத்திரம் நட்சத்திரத்தின்மூன்றாம் பாதமானால் ஐம்பத்திரண்டு நாட்களில் குணமாகுமாம்.
உத்திரம் நட்சத்திரத்தின் நான்காம் பாதமானால் மரணம் சம்பவிக்குமாம்.
அஸ்த நட்சத்திரத்தின் முதற் பாதத்தில் நோய் உண்டானால் எட்டு நாட்களில் குணமாகுமாம்.
அஸ்த நட்சத்திரத்தின் இரண்டாம் பாதமானால் பதினைந்து நாட்களில் குணமாகுமாம்.
அஸ்த நட்சத்திரத்தின் மூன்றாம் பாதமானால் இருபத்தெட்டு நாட்களிலும் குணமாகுமாம்.
அஸ்த நட்சத்திரத்தின் நான்காம் பாதமானால் எண்பத்திரண்டு நாட்களில் குணமாகுமாம்.
சித்திரை நட்சத்திரத்தின் முதற் பாகத்தில் நோய் கண்டால் ஒன்பது நாட்களில் குணமாகுமாம்.
சித்திரை நட்சத்திரத்தின் இரண்டாம் பாதமானால் பதினைந்து நாட்களில் குணமாகுமாம்.
சித்திரை நட்சத்திரத்தின் மூன்றாம் பாதமானால் பன்னிரண்டு நாட்களில் குணமாகுமாம்.
சித்திரை நட்சத்திரத்தின் நான்காம் பாதமானால் நாற்பத்தியொரு நாட்களில் நலமாகுமாம்.
சுவாதி நட்சத்திரத்தின் முதற் பாதத்தில் நோய் கண்டால் பன்னிரண்டு நாட்களில் குணமாகுமாம்.
சுவாதி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதமானால் மரணம் சம்பவிக்குமாம்.
சுவாதி நட்சத்திரத்தின்மூன்றாம் பாதமானால் எண்பத்தி எட்டு நாளில் குணமாகுமாம்.
சுவாதி நட்சத்திரத்தின் நான்காம் பாதமானால் பன்னிரண்டு நாட்களில் நலமாகுமாம்.
Post a Comment
0 comments:
Post a Comment