நோயாளிகள் மருத்துவரிடம் வரும் நேரத்தைக் கொண்டு நோயின் தீவிரம் அதன் தன்மையை கணிக்கும் முறை சித்த மருத்துவத்தில் இருப்பதைப் பற்றி கடந்த வாரத்தின் பதிவுகளின் ஊடே பார்த்தோம். அதன் தொடர்ச்சியாய் இன்று புனர்பூசம், பூசம், ஆயிலியம், மகம் ஆகிய நட்சத்திரங்கள் நடைபெறும் நாட்களுக்கான பலன்களை பார்ப்போம்.
இந்த தகவல்கள் யாவும் புலிப்ப்பாணிச் சித்தர் அருளிய "புலிப்பாணி வைத்தியசாரம்" என்னும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டவை.
ஆமப்பா நாலாங்கால் மரணஞ் செய்யும்
ஆடைவான பூசமப்பா முதற்காலேழு
சேமப்பா ரெண்டாங்கால் பனிரண்டாகும்
சுகமான மூன்றாங்கா லொன்பதாகும்
காமப்பா நாலாங்க லிருபத்தேழு
கனிவான வாயிலிய முதற்கா லொன்பான்
வாமப்பா ரெண்டாங்கால் இருபதாகும்
வளமான மூன்றாங்கால் தொண்ணூறுதானே.
தானான நாலாங்கால் முப்பத்தொன்பான்
தயவான மகமுதற்கால் மரணஞ் செய்யும்
வானான ரெண்டாங்கால் முப்பதாகும்
வளமான மூன்றாங்கால் எண்பத்தைந்து
கூனான நாலாங்கால் நாள் தானைந்து
- புலிப்ப்பாணிச் சித்தர்.
புனர்பூசம் நட்சத்திரத்தின் முதற்பாதத்தில் நோய் கண்டிருந்தால் அந்த நோயானது ஏழு நாட்களில் குணமாகுமாம்.
புனர்பூசம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் நோய் கண்டிருந்தால் அந்த நோயானது பத்து நாட்களில் குணமாகுமாம்.
புனர்பூசம் நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் நோய் கண்டிருந்தால் அந்த நோயானது பதினெட்டு நாட்களில் குணமாகுமாம்.
புனர்பூசம் நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் நோய் கண்டிருந்தால் மரணம் சம்பவிக்குமாம்.
பூசம் நட்சத்திரத்தின் முதற் பாதத்தில் நோய் உண்டானால் ஏழு நாட்களில் குணமாகுமாம்.
பூசம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் நோய் உண்டானால் பன்னிரண்டு நாட்களில் குணமாகுமாம்.
பூசம் நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் நோய் உண்டானால் எண்பது நாட்களில் குணமாகுமாம்.
பூசம் நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் நோய் உண்டானால் இருபத்தேழு நாட்களிலும் குணமாகுமாம்.
ஆயிலியம் நட்சத்திரத்தின் முதற் பாத்தில் நோய் ஏற்பட்டால் ஒன்பது நாட்களில் நலம் கிடைக்குமாம்.
ஆயிலியம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் நோய் ஏற்பட்டால் இருபது நாட்களில் நலம் கிடைக்குமாம்.
ஆயிலியம் நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் நோய் ஏற்பட்டால் தொண்ணூறு நாட்களில் நலம் கிடைக்குமாம்.
ஆயிலியம் நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் நோய் ஏற்பட்டால் முப்பதொன்பது நாட்களில் குணமாகிவிடுமாம்.
மகம் நட்சத்திரத்தின் முதற் பாதத்தில் நோய் கண்டால் மரணம் உண்டாகுமாம்.
இரண்டாம் பாதத்தில் நோய் கண்டால் முப்பது நாட்களில் குணமாகுமாம்.
மூன்றாம் பாதத்தில் நோய் கண்டால் அது குணமாக எண்பத்தைந்து நாட்கள் ஆகுமாம்.
நாலாம் பாதத்தில் நோய் கண்டால் அந்த நோய் ஐந்து நாட்களிலும் குணமாகுமாம்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment



1 comments:
1234,paatham, paarppathu eppdi pls tholi
Post a Comment