எளிய கற்ப வகைகளை தொகுத்துப் பகிரும் முயற்சியில் இன்று விடத்தலை கற்பம் பற்றி பார்ப்போம்.விடத்தலை என்பது மரவகையைச் சேர்ந்த மூலிகை.இதனை சனியின் அம்சமாகவும் குறிப்பிடுவர். விடத்தலை மரத்தின் பட்டையை வைத்து கற்பம் செய்திடும் முறை ஒன்று யாகோபு சித்தர் அருளிய "யாகோபு வைத்தியசிந்தாமணி" என்ற நூலில் காணக் கிடைக்கிறது. அந்த தகவல்களை இன்றைய பதிவில் பார்ப்போம்.
வாருகேள் விடத்தலையின் பட்டைவாங்கி
மகிழ்வாகக் காயவைத்துப் பலமும்நாலு
தேருகேள் வன்னியத்தின் பதங்கந்தன்னைச்
செயமாக யிடைசமமாய்ச் சேர்த்துமல்லிச்
சாறுவிட்டுக் கடிகையைந்து அரைத்துக்காய்ந்து
சமமாகக் கருந்தேன்வார்த் துண்டை செய்து
பேருகேள் சிமிழ்வைத்துக் காலைமாலை
பேணியிதை யுண்டுவரப் பெருமைகேளே.
உண்டிடவே மண்டலந்தா னந்திசந்தி
உறுதிபெறச் சடைறுகித் தங்கம்போலாம்
கண்டவுடன் விந்திருகி மணிபோலாகும்
கடல்புக்கும் பித்தமறும் கபத்தைப்போக்கும்
பண்டுபோல் நீயிருக்கக் கற்பமாகும்
பத்திவரு முத்திதரும் பலிக்குஞ்சித்தி
கொண்டுவா அண்டரென மதிப்பாருன்னைக்
கொடியவினை களைப்போக்குங் கூறினோமே.
விடத்தலையின் பட்டையை நன்றாகக் காய வைத்து, அதில் நான்கு பலம் எடுத்துக்கொள்ள வேண்டுமாம். இதனுடன் சம அளவாக லிங்கப்பதங்கம் சேர்த்து மல்லிச்சாறு விட்டு ஒரு கடிகை நேரம் அரைத்த பின்னர் அதனை காய வைத்து அதனுடன் கருந்தேன் (கொம்புத்தேன்) சேர்த்து உண்டைகளாக செய்து சிமிழில் அடைத்து பத்திரப் படுத்திக் கொள்ள வேண்டுமாம்.
பின்னர் அதனை அந்தி சந்தி என இரு வேளையும் ஒவ்வொரு உண்டை வீதம் ஒரு மண்டலத்திற்கு உண்ண வேண்டுமாம். இப்படி உண்டு வர உடல் இறுகித் தங்கம் போல் ஆகுமென்கிறார். விந்து இறுகிமணி போல ஆகுமாம் அத்துடன் பித்தம், கபம் ஆகியவை நீங்கிவிடுமாம். கொடிய வினைகள் நீங்கி பக்தியும் முக்தியும் கைவரப் பெறுவதுடன் காயசித்தியும் உண்டாகும் என்கிறார்.
குறிப்பு : ஒரு பலம் என்பது சற்றேறக் குறைய 35 கிராம். ஒரு கடிகை என்பது 24 நிமிடம். மேலே சொன்ன மூலிகை சரக்குகள், நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கிறது.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..
Post a Comment
12 comments:
good
thank you for your information.tholi akka
These karpams are for men or ladies can also proceed taking in? Some say it is for men only. Pls clarify. Thank you!
malli saru allavu?
Great Blog my friend, congratulations from:
http://leyendas-de-oriente.blogspot.com/
Aumai :)
Dear Dolli,
for the past year i was trying to find out sathurakalli. in various places.
can you send the photocopy od the plant
athu enna lina pathangaham?
thanks thozhi
nanri thozhi
thanks thozhi
தாங்கள் ஒரு அவதாரப்பிரவி
Post a Comment