ஆயகலைகள் எனப்படும் அறுபத்தி நாலு கலைகளில் பன்னிரெண்டாவதாய் "சகுன சாஸ்திரம்" குறிப்பிடப் படுகிறது. சகுன சாஸ்திரம் என்பது நம்முடைய சுற்றுச் சூழல், வானிலை, கோள்களின் அமைப்பு, பறவைகளின் ஒலி, விலங்குகளின் செயல்பாடுகள் போன்றவைகளை முன்னிறுத்தி சொல்லப் படுவது.
சகுனம் பார்க்கும் வழக்கம் பழந்தமிழகத்தில் நடைமுறையில் இருந்தற்கான சான்றுகள் பழந்தமிழ் இலக்கியங்களில் காணக் கிடைக்கின்றன. வெளியூர் பயணங்கள், சுப காரியங்களை துவக்குவது, தொழில் துவங்குவது, மருத்துவம் பார்ப்பது, போருக்கு கிளம்புவது என வாழ்வின் பல்வேறு செயல் பாடுகளில் சகுனம் பார்க்கும் வழக்கம் தொன்று தொட்டு இன்றளவும் தொடர்ந்து வருகிறது.
சித்த மருத்துவத்தைப் பொறுத்த வரை சகுன சாத்திரம் என்பது இருவகைப்படும் ஒன்று நோயாளியை மருத்துவரிடம் அழைத்து வரும் நேரம் மற்றும் அப்போதைய சூழ்நிலை விபரங்களை கொண்டு நோயை அல்லது நோயின் தன்மையை கணிப்பது. மற்றது நோயாளியின் இருப்பிடத்திற்கு மருத்துவரை அழைக்க வருபவரின் நடவடிக்கைகள்,அவர் வந்த சூழ்நிலை போன்றவற்றை வைத்து நோயின் தன்மை மற்றும் நோயாளியின் நிலையை கணிப்பது.
சித்தர் பெருமக்களும் இத்தகைய தகவல்களை அருளியிருக்கின்றனர். அந்த வகையில் புலிப்பாணி சித்தர் அருளிய "புலிப்பாணி வைத்தியசாரம்" என்னும் நூலில் காணக் கிடைக்கும் தகவல்களையே இந்த தொடரில் நாம் பார்க்க இருக்கிறோம். இவை அசுவதி துவங்கி ரேவதி வரையிலான இருபத்தி ஏழு நட்சத்திரங்களும், அவற்றின் பாதங்களும் நடைபெறும் நேரத்தில் ஒருவர் நோய்வாய் பட்டிருந்தால் அந்த நோய் பற்றிய தெளிவும், தீர்வும் அருளப் பட்டிருக்கிறது.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் அருளப் பட்ட இந்த தகவல்கள் நமக்கு ஆச்சர்யமாகவும், அபத்தமாகவும் தென்படலாம். ஆனால் இவற்றின் பின்னால் இருக்கும் காரண காரியங்கள் நாம் அறியாதவை, ஆய்வுக்குட்பட்டவை. எனவே இனி வரும் நாட்களில் இந்த தொடரில் பகிரப்படும் தகவல்களை வழமை போல ஒரு தகவல் பகிர்வாக மட்டுமே அணுகிட வேண்டுகிறேன்.
சோதிடம் பற்றிய ஆரம்பத் தெளிவு இல்லாதவர்கள், தயவு செய்து இது தொடர்பாய் நான் முன்னரே எழுதியிருக்கும் பதிவுகளை வாசித்து விட வேண்டுகிறேன். இந்த இணைப்பில் சோதிடம் தொடர்பான பதிவுகளை வாசிக்கலாம்.
நாளைய பதிவில் முதல் இரண்டு நட்சத்திரங்களான அசுவினி மற்று பரணி நட்சத்திரங்களில் நோய்வாய்ப் பட்டவர்கள் பற்றிய தெளிவுகளை பார்ப்போம்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..
Post a Comment



10 comments:
நாளைய பதிவினை ஆவலோடு எதிர் நோக்கும் உங்கள் நண்பன் தியாகி தமிழ்மணி
நாளைய பதிவினை ஆவலோடு எதிர் நோக்கும் உங்கள் நண்பன் தியாகி தமிழ்மணி
நாளைய பதிவினை எதிர் நோக்கும் நண்பன் தியாகி தமிழ்மணி
நாளைய பதிவினை எதிர் நோக்குகிறேன்
நாளைய பதிவினை எதிர் நோக்குகிறேன்
மிக நல்ல முயற்சி! அறிய ஆர்வமாக உள்ளேன்! நன்றி!
Nandru. Ippodhu amaanushyam endru ungalai polavae vaeru oruvar pala vishayangal ezhudugirar. Profile paarthu details kandu pidikka mudiyavillai. Naal fungal padhivu nagal aakkappadavillai.
மிக அருமையான தகவல். நன்றி தோழி ..
எங்களுக்கு நல்ல சகுனம் தான் !
நன்றி
Post a Comment