திரிகடுகம் உடலையும், உயிரையும் காக்கும் எளிய அருமருந்து. நமது முன்னோர்களின் வாழ்வில் இந்த மருந்து இரண்டற கலந்திருந்தது. கால ஓட்டத்தில் நாம் மறந்துவிட்ட நமது மேலான அடையாளங்களில் இதுவும் ஒன்று. இதன் காரணமாகவே திரிகடுகம் தொடர்பான தகவல்களை இரண்டாவது வாரமாகவும் தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.
சுக்கு மிளகு திப்பிலி என்கிற மூன்று மூலகங்களை சூரணமாகவும், பல்வேறு வகையிலும் மருந்தாக பயன்படும் தகவலை நேற்றைய பதிவில் பார்த்தோம். அந்த வகையில் திரிகடுகத்தைக் கொண்டு உடலை பேணும் கற்பம் ஒன்றினை தயாரிக்கும் முறையினை இன்று பார்ப்போம். இந்த காயகற்பம் தயாரிக்கும் முறை கருவூரார் அருளிய "கருவூரார் வாதகாவியம்" என்னும் நூலில் காணக் கிடைக்கிறது.
இந்த கற்பத்தை "திரிகடுக கற்பம்" என்கிறார் கருவூரார்.
அற்புதமா தாகவொரு - மருந்து
அறைகிறேன் இன்னதென்று தெரிந்து கொள்ளும்
கற்பமொன்று விள்ளுகிறேன் - நல்ல
கற்றாழைஞ் சொறெடுத்து விஸ்தாரமாய் வெருகடி
திரிகடுகு பொடிபண்ணி - வெருகடி
தீர்க்கமுடன் கற்றாழஞ் சோற்றுடனே
பிரட்டியே தின்றுவரக் - காயம்
பிலக்குமப்பா நரை திரைமாறும்
சித்தருக்குச் சித்தனப்பா - பர
தேசியர்க்குப் பர தேசிகனாம்
ஞானிக்கு ஞானியப்பா - அஞ்
ஞானிக்கஞ் ஞானியாய்த் தோணுமப்பா
இல்லத்துக் கில்லனுமாய்க் - கோடிவய
திருப்பான் பதினாறு வயதது போல்
கற்றாழை சோற்றில் வெருகடி* அளவு எடுத்து அதனுடன் திரிகடுக சூரணத்தை வெருகடி* அளவு சேர்த்து நன்றாக பிரட்டிக் உண்ண வேண்டுமாம். இப்படி சாப்பிட்டு வர நரைதிரை மாறி உடலும் உறுதியாகுமாம். மேலும் அத்தகையவர்கள் சித்தருக்கு சித்த்னாகவும், பரதேசிகளுகு பரதேசியாகவும், ஞானிகளுக்கு ஞானியாகவும், இல்லறத்தாருக்கு இல்லறத்தானாக சிறந்து பலகாலம் பதினாறுவயது போல் வாழலாம் என்கிறார்.
எல்லாம் சரிதான், எத்தனை நாட்கள்? எந்த வேளையில் உண்பது?
இதுவொரு வருடங் கொண்டால் - இவனுக்
கிப்பிறவி போகப்பிற் பிறவியில்லை
தேவலோகம் நாகலோகம் - முழுதும்
தேவ னிவனென்றே செப்பலாகும்
நேராகவே தோன்றும் - மல
நீர்விட்ட இடங்களில் வர்ணம்பேதிக்கும்
அமிர்தம் ரசத்தைக்கட்டும் - அவன்
அவனியிற் பேர்பெற்ற சித்தனப்பா
இந்த கற்பத்தினை காலை அல்லது மாலை வேளையில் தொடர்ந்து ஒருவருடம் உண்ண வேண்டுமாம். அப்படி உண்பதால் இனி பிறப்பே இருக்க மாட்டாது என்கிறார். இந்த காயகற்பம் உண்டவர்கள் உலகில் பெயர் பெற்ற சித்தனாக இருப்பார்கள் என்கிறார்.
நாளைய பதிவில் திரிகடுக லேகியம் பற்றிய தகவலை பார்ப்போம்.
* வெருகடி = வெருகு என்பது காட்டுப் பூனையை குறிக்கும். வெருகடி என்பது பூனை தன் காலில் உள்ள பெருவிரல் உள்ளிட்ட மூன்று விரல்களினால் எடுக்கு மண்ணின் அளவு. பழந்தமிழர் அளவை குறியீடுகளில் வெருகடியும் ஒன்று.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..
Post a Comment
8 comments:
தோழி, இதற்கு ஏதேனும் பத்தியம் கோரபட்டுள்ளனவா?
Pathiyam? similar to other kayakarpam,as you said?... or not needed?
Hi Thozhi,
please update வெருகடி with other scales below..
http://www.siththarkal.com/2010/07/blog-post_09.html
-Saravanan
VERUKADI- purinthukolla mudiyavillai. alavai therinthukolla ullankayil iruppathupol oru padam inaikalaame.
sri.....
etharku pathiyam undah tholzi...
Ayya, Pulitha Neer yanral yana yaan athanai kurupitaa nalil kaya vaika vandum.
சித்தா மூலிகை மருந்துகள் எங்கு கிடைக்கும் ,ப்ளீஸ் எனக்கு சொல்லுங்கள்
சித்தா மூலிகை மருந்துகள் எங்கு கிடைக்கும் ,ப்ளீஸ் எனக்கு சொல்லுங்கள்
Post a Comment