திரிகடுக நெய் தயாரிக்கும் முறை பற்றி இன்றைய பதிவில் பார்ப்போம். இந்த தகவல் அகத்தியர் அருளிய "அகத்தியர் வைத்திய காவியம்" என்னும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது. அந்தப் பாடல் பின்வருமாறு...
பாரமுடன் திரிகடுகு நெய்யைமைந்தா
பாடுகிறேன் திரிகடுகு திரிபலையோ டாறே.
ஆறுடனே கொடிவேலி வேரின்பட்டை
ஆறிய நிலவாமணக்கன் வேரும்
வீறுடைய மரமஞ்சள் பொற்கொன்றைக்காயும்
வெற்றிபுரி அதிவிடையங் கடுகுரோணி
வாறுகேள் மஞ்சள் மரமஞ்சள் பின்னும்
வட்டத்திருப்பி மலைதாங்கிவேரும்வகைக்கு மைந்தா
மீறாமல் விராகன் மூன்றரை யாத்தூக்கி
விரைந்தாட்டி நாழிநெய்யிற் கலக்கிக் காய்ச்சே.
காய்ச்சு முன்னே கள்ளிப்பால் உழக்குவிட்டுக்
கருத்தாக வடித்துநீ மடிக்கச்சொல்லு
வீச்சான குன்மமுதல் குட்டந் தீரும்
வெண்குட்டம் பாண்டு விசக்கடியுந் தீரும்
வாச்சிருந்த சூலைபோம்உன் மத்தம்போம்
- அகத்தியர்.
திரிகடுகு என்கிற சுக்கு, மிளகு, திப்பிலி, திரிபலை என்கிற நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் என்கிற இந்த ஆறு பொருட்களுடன் கொடிவேலி வேரின் பட்டை, ஆமணக்கு வேர், மரமஞ்சள், பொன்கொன்றைக் காய், அதிவிடை, கடுகுரோகிணி, மஞ்சள், மலைதாங்கி வேர் ஆகியவற்றை வகைக்கு மூன்றரை விராகன் வீதம் எடுத்து சுத்தம் செய்து கல்வத்தில் இட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டுமாம். பின்னர் இந்த கலவையுடன் ஒரு நாழி அளவு நெய்யும், கள்ளிப்பால் ஒரு உழக்கும் சேர்த்து அடுப்பில் இட்டு நன்கு காய்ச்சி வடித்து சேமித்துக் கொள்ளவேண்டும் என்கிறார். இதுவே திரிகடுக நெய்.
இந்த நெய்யால் குன்மம் முதல் குட்டம் வரையும், வெண்குட்டம், பாண்டு , சூலை, உன்மத்தம் ஆகிய நோய்கள் குணமாவதுடன் விஷக் கடிக்கும் சிறந்த மருந்து என்கிறார் அகத்தியர்.
திரிகடுக தொடர் நாளையுடன் நிறைவடையும்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..
Post a Comment



3 comments:
hai
hai
hai
Post a Comment