கோமுகம் என்றால் பசுவின் முகம். இந்த ஆசனத்தில் இருக்கும் பொழுது பார்த்தால் பசுவின் முகம் போல் தெரியும் என்பதால் இந்த பெயர் பெறுகிறது.
"அகத்தியர் பரிபூரணம்" என்னும் நூலில் இந்த்க ஆசனத்தைப் பற்றி அகத்தியர் பின்வருமாறு விளக்குகிறார்.
அங்கமுடன் முழங்கால்மேல் முழங்கால்போட்டு
தாமப்பா பாதம்ரெண்டில் கையையூணித்
தானிருக்க கோமுகா சனமதாச்சு
தரையில் அமர்ந்து காலை நீட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் இடதுக் காலை மடக்கி வலதுக் காலின் அடியில் விட்டு வலதுப் பக்க புட்டத்தோடு ஒட்டியவாறு வைக்க வேண்டும். வலதுக் காலை மடக்கி இடதுக் காலின் மேல் கொண்டு வந்து இடதுப் பக்க புட்டத்தோடு ஒட்டியவாறு வைக்க வேண்டும்.
மெதுவாக மூச்சினை உள்ளிழுத்தவாறு வலதுக் கையைத் தூக்கி முதுகின் பின்புறமாக மடக்கிக் கொள்ள வேண்டும். இடதுக் கையை கீழ் வாட்டமாக மடித்து வலதுக் கை விரல்களை கொக்கி போல் பிடித்துக் கொள்ளவும் (அப்படிக் கைகளை பிடிக்க முடியாதவர்கள் பழகும் வரை தற்காலிகமாக துணியை இரண்டு கைகளுக்கும் நடுவில் பயன்படுத்தலாம்)
இந்த நிலையில் அமர்ந்து பின்னர் மூச்சை மெல்ல வெளியேற்றவும். பின் கை மற்றும் கால்களை மாற்றி ஆசனத்தை பழகலாம். துவக்கத்தில் ஒரு நிமிடம் தொடங்கி நாளடைவில் ஐந்து நிமிடம் வரை பழகலாம்.
கைகள், விரல்கள், மணிக்கட்டு, தோள்பட்டை, முதுகு, அடி வயிறு அனைத்தும் பலப்படும். நுரையீரல் விரிவடைதால் உள்ளிழுக்கப்படும் பிராணவாயு முழுமையாக உபயோகிக்கப்படுகிறது. கால்களில் ஏற்படும் தசை பிடிப்பு மற்றும் மூட்டுகளில் ஏற்படும் வாயு பிடிப்புகளில் இருந்து நிவாரண அளிக்கிறது
சவாசனம்
உயிரற்ற அல்லது உணர்வற்ற பிணம் போல உடலை தளர்த்த உதவும் ஆசனம் என்பதால் இந்தப் பெயர் பெறுகிறது. எத்தனை ஆசனங்கள் பழகினாலும் கடைசியாக செய்ய வேண்டிய ஆசனம் என்கிற வகையில் இந்த ஆசனம் முக்கியத்துவம் பெறுகிறது. சவாசனம் செய்தால் மட்டுமே மற்ற ஆசனங்கள் செய்த பலன் உடலுக்கு கிட்டும்.
பேணிமனங் கொண்டபடி படுக்கனன்று
பூணவே ஒன்பதுக்கும் விபரஞ்சொன்னேன்
பூரணமா யிருந்துநீயும் மேன்மைகாணே.
விரிப்பில் மல்லாந்து படுத்துக் கொண்டு கால்களைச் சேர்த்து வைத்துக் கொள்ளவும். கைகளைப் பக்கவாட்டில் நீட்டி படத்தில் காட்டியபடி வைத்துக் கொள்ளவும். கண்களை தளர்வாக மூடிக்கொள்ளவும். இந்த நிலையில் பாதம் துவங்கி மூட்டு, தொடை, இடுப்பு, வயிறு, மார்பு, கழுத்து,முகம் இவைகள் ஒரு நேர்கோட்டில் இருத்தல் அவசியம்.
உடலை எத்தனை தளர்த்த முடியுமோ அத்தனை தளர்த்தி அதாவது இறந்து போனவரின் உடல் எவ்வாறு அதுபோல உடலைசலனமின்றி 3 முதல் 5 நிமிடம் வரை இருக்க வேண்டும். இந்த சமயத்தில் மூச்சு மெலிதாகவும், சீராகவும் இருத்தல் அவசியம். மனதை வெறுமையாக்கி சிந்தனை எதுவும் இல்லாமல் வைத்திருக்க பழகவேண்டும்.
இந்த ஆசனம் உடல் களைப்பையும், மனச் சஞ்சலத்தையும் போக்கப் பயன்படுகிறது. தசைகள் புத்துணர்வு பெறும். ஆசனங்கள் செய்யும்போது சோர்வு ஏற்பட்டால் இடையிடையே சவாசனம் செய்யலாம். மனோசக்தி வளரும். உடல் நாடி நரம்புகள் நமது ஆளுகைக்கு வந்துவிடும். மனம் ஒருமைப்படுத்தப்படும்.
குறிப்பு : தனது வேலைகளுக்கு இடையே எனது வேண்டுகோளை ஏற்று சிரமம் பாராது தொடருக்குத் தேவையான ஆசனங்களின் செயல்முறை படங்களை தந்துதவிய நண்பர் திரு. தினேஷ் ராம் அவர்களுக்கு நன்றி.
இத்துடன் ஆசனங்கள் பற்றிய தொடர் நிறைவடைகிறது. அடுத்த பதிவில் வேறொரு தகவலுடன் சந்திக்கிறேன்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment





11 comments:
இந்த தொடர் பதிவு பல ஆசனங்களின் பயன்களையும் அந்த ஆசனங்களை எப்படி செய்ய வேண்டும் என்பதை படங்களோடு அருமையாக விளக்கிசென்றது!
nice
Vanakam thankalen patheukal annithu arumi.
Thank to god ur Service Super
Thanks for your information
Nice job.I have a notion on reading a couple of books published here.Pardon me if I sound stupid. But I wanted to let you know.Maybe you already know.Just a thought. Some of these books are cursed(cursing the person revealing them) by their authors that they should not be revealed to everybody. I saw this in their last sloka. So...Maybe... As I said, I might be taking in things too much, still wanted to let you know what I learnt.
See slokam 216 in Agathiyar Poorana Soothiram. For confirmation of what I have said in my previous post to you.
Thank you for your information Thozi...
Respected Thozhi,
we read your blog regularly.It is very useful for us.we know the details of sidhdhars only by your blog.it is very useful for us.we also expect more details about nandheeswar and kagapujandar sidhdhars from you.
yours truely,
Tholargal
Thank you for your post. It is very rare to get these kind of information and I have been very fortunate to visit your site. May Guru bless you with knowledge, health and wealth.
Thank you very much for publishing this website. It is very rare to find these kind of information and I am fortunate to visit and read these at your site. I pray to Gurudev to give you and your team knowledge, health and wealth.
Post a Comment