அகத்தியர் அருளிய ஆசனங்களின் வரிசையில் இன்று பத்ராசனம் மற்றும் பாதஹஸ்தாசனம் பற்றிய தகவல்களை பார்ப்போம்.
பத்ரம் என்றால் அனுகூலம். இதனை பழகுவோர் உடலுக்கு அனுகூலமான பலன்களை தரும் ஆசனம் என பொருள் கொள்ளலாம். இந்த ஆசனம் பற்றி அகத்தியர் பின் வருமாறு விளக்குகிறார்.
பதிவாக வஜ்ஜிரதிலிருந்து காலைரெண்டும்
காரப்பா நன்றாகதானகட்டி பிரகாலிலமர்ந்து
கண்ணறிந்து தானோக்க ஆசனமுமாச்சு
வஜ்ராசனத்தில் அமர்ந்து முடிந்தளவு கால்களை அகட்டி கைகளை முன் பக்கம் ஊன்றி, அப்படியே குதிகால்களில் அமர்ந்து கால் விரல்களை உயர்த்திக் கொள்ளவும்.சில வினாடிகள் இந்த நிலையிலிருந்து பிறகு கால் விரல்களை தளர்த்தி பழைய நிலைக்கு வர வேண்டும்.
கால் விரல்கள், தொடைகள், கால்கள், கால்மூட்டுகள் வலுப்பெறும். மனம் ஒருமுகப்படுவதற்கு உதவும். தியானம் பழக ஏற்ற ஆசனம். மூட்டுவாதத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும். முதல் சக்கரமான மூலாதார சக்கரத்தை இந்த ஆசனம் தூண்டி விடும்.
பூணடா பாதஹஸ்தா சனத்தைக்கேளு
பூரணமாய் நின்றுநீயும் பாதம்நோக்கி
தாமப்பா குனிந்துநீயும் பாதம்பற்றி
தானிருக்க பாதஹஸ்தா சனமுமாச்சு.
நேராக நிமிர்ந்து நின்று கைகளை உயர தூக்கவும். மூச்சை மெல்ல வெளியிட்டவாறே குனிந்து கால் பாதத்தை தொடவும். பின் மெல்ல தலையை காலுடன் ஒட்டியவாறு சேர்த்து வைக்கவும்.இந்த நிலையில் முடிந்த அளவு இருந்த பின் மூச்சை மெல்ல வெளியேற்றியவாறே தலையை நிமிர்த்தவும்.
தலைக்கு ரத்தம் பாய்வதால் சிரசாசனம் செய்த பலனை இந்த ஆசனம் கொடுக்கும். கை, கால், இடுப்பு, முதுகு என அனைத்து உறுப்புகளும் இதனால் வலுப்பெறும். முக்கியமாக முதுகெலும்பிற்குள் இருக்கும் சுஷூம்ணா நாடியை இந்த ஆசனம் வலுப்படுத்தும். உடல் முழுவதுமான ரத்த ஓட்டம் மேம்படுத்தப்படுகிறது.
குறிப்பு : தனது வேலைகளுக்கு இடையே எனது வேண்டுகோளை ஏற்று சிரமம் பாராது தொடருக்குத் தேவையான ஆசனங்களின் செயல்முறை படங்களை தந்துதவிய நண்பர் திரு. தினேஷ் ராம் அவர்களுக்கு நன்றி.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment





3 comments:
அனைத்து ஆசனங்களையும் புகைப்படத்தோடு தெளிவாக விளக்குதல் அருமை.. தொடருங்கள்!
PUJANKASANAM is one of the step in surya namashkaram!
சிறப்பான விளக்கங்கள்! தேவையான இடங்களில் புகைப்படங்கள் சேர்த்து விளக்கியமை அருமை!
இன்று என் தளத்தில்
ஓல்டு ஜோக்ஸ் 2
http://thalirssb.blogspot.in/2012/09/2.html
Post a Comment