அகத்தியர் அருளிய ஆசனங்களின் வரிசையில் இன்று வஜ்ராசனம் மற்றும் புஜங்காசனம் பற்றி பார்ப்போம்.
வஜ்ராசனம்
வஜ்ரம் என்றால் வைரம் அல்லது வலிமை என பொருள் கொள்ளலாம். நமது உடலிற்கு வயிரம் போல் உறுதி தரும் ஆசனம் என்பதால் இப் பெயர் பெறுகிறது. இதனை அகத்தியர் பின் வருமாறு விளக்குகிறார்.
சாரப்பா வஜ்ஜிர ஆசனத்தைக்கேளு
சங்கையுடன் பரடுமேல் பரடுபோட்டு
சேரப்பா புட்டத்தில் குதிகால்வைத்து
செம்மையுடன் தானிருக்கத் திறந்தானாமே.
முதலில் உடலை தளர்த்தி கால்களை நீட்டிவாறு அமர வேண்டும். பிறகு ஒரு காலை மடித்து அந்த குதிகால் புட்டப் பகுதியைத் தொடுவதுபோல அமர வேண்டும். அதே போலவே மற்றொரு காலையும் மடித்துக் கொள்ள வேண்டும்.குதிகால்களை ஒரு பீடம் போலக் கருதி, புட்டத்தை அதன் மீது பதித்து அமர்ந்து கொள்ள வேண்டும்.
முதுகுத் தண்டு வளையாத விதத்தில் நேராக அமர்ந்த பின்னர், கைகள் இரண்டையும் முழங்கால்கள் மீது வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது மூச்சை இயல்பான ஓட்டத்தில் வைத்திருக்க வேண்டும்.சில வினாடிகள் இந்த நிலையிலிருந்து பிறகு கால்களை விலக்கிப் பழைய நிலைக்கு வர வேண்டும்.
இந்த ஆசனம் முழங்கால்களின் மூட்டுகள் நன்றாக அசைந்து மென்மையாகச் செயற்படுவதற்கு இது உதவுகிறது.திரும்பத் திரும்ப இந்த ஆசனத்தைச் செய்யும் போது முழங்கால்கள் நல்ல உரம் பெற்ற நிலையில் கீல்வாயு போன்ற குறைபாடுகள் ஏற்படாமல் இருக்கின்றன.பிறப்பு உறுப்புகளுக்கு கூடுதலாக குருதி பாய்கிறது. சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
புஜங்காசனம்
புஜங்கம் என்றால் பாம்பு. இந்த ஆசனத்தில் இருக்கும் பொழுது பார்ப்பதற்கு பாம்பு படம் எடுத்தாற் போல் தெரியும். இந்த ஆசனம் பற்றி அகத்தியர் பின் வருமாறு விளக்குகிறார்.
நாமப்பா புஜங்கமென்ற ஆசனத்தைக்கேளு
நாட்டமுடன் இருகாலும்நீட்டி கைகளூன்றி
ஓமப்பா தலையுடன்உந்திவரை உயர்த்திக்கொண்டால்
உத்தமனே புஜங்கமென்ற வுறுதிபாரே.
குப்புறப்படுத்து கைகளை உடலுடன் ஒட்டியவாறு வைத்துக் கொள்ளவேண்டும். படுத்தவாறே கைகளை உயர்த்தி தோள்பட்டை அருகே ஊன்றிக் கொள்ள வேண்டும். பின்னர் மெல்ல தலையை உயர்த்தவும். வயிறு முதல் கால் வரை தரையில் ஒட்டியவாறு வைத்துக் கொள்ள வேண்டும். முடிந்த அளவு கழுத்துக்குக் கீழும், தோள்களுக்கு மத்தியிலுள்ள முதுகுத் தண்டையும் இயன்ற அளவு வளைக்க முயலவும். முழங்கால்கள் ஒட்டியே இருக்க வேண்டும்.
இந்த நிலையில் 3 முதல் 5 நிமிடம் வரை இருந்த பின்னர் வயிறு, மார்பு, தலை என ஒவ்வொரு நிலையாக மீண்டும் முதல் நிலைக்கு மெல்ல வரவும்.இந்த ஆசனத்தை பழகிடும் போது முதுகெலும்பு, தோள்பட்டை, அடிவயிறு பலப்படும். மார்பு நன்றாக விரிவடையும். ஊளைச்சதை கரைந்து உடல் எடை குறைக்கலாம்.. முதுகெலும்பின் வளையும் தன்மை அதிகரித்து இளமை காக்கப்படும். குண்டலினி சக்தியும் விழிப்படையும்.
மேலும் முதுகுத் தண்டு, மலச்சிக்கல் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும், கல்லீரல், கணையம், மண்ணீரல் போன்ற உறுப்புகளை தூண்டி சிறப்பாக செயல்பட வைக்க இந்த ஆசனம் உதவுகிறது.
குறிப்பு : தனது வேலைகளுக்கு இடையே எனது வேண்டுகோளை ஏற்று சிரமம் பாராது தொடருக்குத் தேவையான ஆசனங்களின் செயல்முறை படங்களை தந்துதவிய நண்பர் திரு. தினேஷ் ராம் அவர்களுக்கு நன்றி.
தொடரும்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment
13 comments:
தொடரும் பதிவுகளுக்கு நன்றிகள்.
THIS ASANA can be done immediately even after EATING said the master not sachin tendulkar YOGA master!
4000 followers என்ற அரிதான சாதனையை கடந்த சகோதரிக்கு வாழ்த்துக்கள்!
சித்தர்களின் மகத்துவம் பற்றி மக்கள் மேலும் அறிந்துகொள்ள தொடர்ந்து எழுதுங்கள்!
இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்..!
ஆசனம் பகிர்வுக்கு நன்றி தோழி .
hjj
aasangalin vilakkangal koodudhal padangaludan irunthal nandraha irukkm
even great guruus and great mothers are making to rape for revenges and dharma and karma
இது மாதரி நல்ல உருப்படியான தகவல்கள் போடுங்க!!!!
its really interesting , can u please explain me about the gray hair problem and hair fall problem ?
its really interesting and want to know the gray hair problem solution . can u explain me ?
super .............very useful..........
nice........
Post a Comment