நமது உடலில் இயற்கையாக சுரக்கும் இன்சுலின் என்கிற ஹார்மோனின் அளவு குறையும் போது, நாம் உட்கொள்ளும் உணவில் உள்ள குளுக்கோஸ் இரத்தத்தில் தேங்க ஆரம்பித்து விடும். இதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. இதையே நீரிழிவு என்கிறோம். அடிப்படையில் இது ஒரு உடல் குறைபாடே தவிர பலரும் நினைப்பதைப் போல நோய் இல்லை.
தொடர்ச்சியான உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு, மருந்துகளை எடுத்துக் கொள்வதன் மூலம் இந்த குறைபாட்டினை கட்டுக்குள் வைத்திருக்கலாம். நிரந்தர தீர்வு என்று எதுவும் இதுவரை அறியப் படவில்லை. இத்தகைய நீரிழிவு பற்றி நமது சித்தர் பெருமக்களும் கூறியிருக்கின்றனர்.
யாகோபு தனது “யாகோபு வைத்திய சிந்தாமணி” நூலில் இந்த நீரழிவிற்கு ஒரு தீர்வினை காணமுடிகிறது.
வன்னியிலை யுடனேதா னத்திப்பிஞ்சும்
வகையாக நிழலுலர்த்திச் சூரணித்து
நன்னயமா யெருமைப்பால் தன்னிற்போட
நலமான பாலதுவுந் தோய்ந்து போகும்
சொன்னதிதை நல்லெண்ணெய் தன்னிற்சேர்த்து
சுகமாக மூவிரண்டு நாள்தான் கொள்ள
முன்னுரைத்த நீரிழிவு சலரோகங்கள்
முழுதுமே போகுமென்று மொழிந்தவாறே.
- யாகோபு.
வன்னிமரத்தின் இலை, அத்திப் பிஞ்சு இவை இரண்டையும் நிழலில் உலர்த்திப் பொடித்து சூரணமாகச் செய்துகொள்ள வேண்டுமாம். பின்னர் அந்த சூரணத்தை எருமைப் பாலில் போட்டால் பால் துவைந்து போய் விடுமாம். துவைந்த அந்தப் பாலுடன் நல்லெண்ணெய் சேர்த்து ஆறுநாள் உட்கொள்ள நீரிழிவு சலரோகங்கள் யாவும் போகும் என்கிறார். இந்த மருந்திற்கு பத்தியங்கள் எதுவும் சொல்லப்படவில்லை.
இதன் சாத்திய, அசாத்தியங்கள் ஆய்வுக்கு உட்பட்டவை என்பதால், தேர்ந்த சித்த மருத்துவரின் ஆலோசனையை நாடுவது அவசியம்.
இது ஒரு தகவல் பகிர்வு மாத்திரமே!, தகவல்கள் ஆய்வுக்குட்பட்டவை!!
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..
Post a Comment



8 comments:
விரைவில் இந்த ஆய்வு மேலும் தொடரட்டும்....
இதுவரை பேசப்படாத குருபரம்பரை பற்றிய பல புதிய தகவல்களை ஒரு புதிய தொடராக எழுதத் தொடங்கியிருக்கிறோம். வாருங்கள், உங்கள் ஆலோசனைகளை சொல்லுங்கள்.
அன்பு தோழி மந்திரம் சித்தியாவதை எப்படி தெரிந்து கொள்வது
if any budy knows good sidha doctors .can you please tel me . because i need this ...
@திண்டுக்கல் தனபாலன்
yogies gave those notes at free of costs. however, those commercial bodies who get it, charge for it much more. and also the victim is, they patent it with their names.
yogies gave those notes at free of cost. however, the commercial bodies charge for it more. moreover, they patent it with their names. :(
@Scorpio Ramesh
use it. then u will know.
tontiyai kuraippatu yeppadi aangalukkum pengalukkun aalosanai kuurunggal.tq
Post a Comment