நம்முடன் பேசிக்கொண்டிருக்கும் ஒருவர் திடீரென பேசிக்கொண்டிருக்கும் போதே மாயமாய் மறைந்து விட்டால் எப்படி இருக்கும்.... இப்படி ஒரு சம்பவத்தை நம்மால் கற்பனை செய்ய முடியாது. ஆயினும் நமது புராணக் கதைகளில் சட்டென மறைதல் போன்ற பல குறிப்புகளை காண முடிகிறது.
சித்தரியலிலும் நினைத்த மாத்திரத்தில் நமது உருவத்தை மறைத்துக் கொள்ள சில உபாயங்களை சித்தர்கள் பயன் படுத்திவந்தனர். இது பற்றிய தகவல்களை முன்னரும் பகிர்ந்திருக்கிறேன். அந்த வகையில் இன்றைய பதிவில் கருவூரார் அருளிய உருவத்தை மறைத்துக் கொள்ள உதவிடும் மை ஒன்றைப் பற்றி பார்ப்போம்.
இந்த மை பற்றிய விவரங்கள் கருவூரார் அருளிய "கருவூரார் பலதிரட்டு" என்னும் நூலில் விவரிக்கப்பட்டிருக்கிறது. அந்த பாடல் பின்வருமாறு..
ஆமப்பா வெண்ணெயிலே தேனைத்தேய்த்து
ஆதளையின் பால்கூட்டி அடவாய்த்தேய்த்து
ஓமப்பா திலகமிடத் தன்னைக்காணார்
ஓங்கிநின்ற உருமாற்றம் ஒருவர்காணார்
போமப்பா வெண்டிசையுங் கால்வேகங்கொண்டு
பூமிதனில் மறைந்ததெல்லாம் பொலிவாய்க் காண்பார்
வேமப்பா அண்டரண்டம் வழலைபட்டால்
வேதாந்தப் பஞ்சகர்த்தா ளெனச்சொன்னாரே.
- கருவூரார்.
வெண்ணெயுடன் தேன், ஆதளை மூலிகையின் பால், இவைகளை சம அளவில் ஒன்று சேர்த்து நன்கு கடையவேண்டுமாம். அப்போது அவை மை போலாகி இருக்கும் அவற்றை எடுத்து சேமித்துக் கொள்ள வேண்டுமாம்.
உருவத்தை மறைக்க வேண்டிய சந்தர்ப்பம் வரும் போது, சேமிப்பில் இருந்து மையை எடுத்து திலகமாக இட்டுக் கொள்ள உருவம் மறைந்துவிடுமாம். அப்போது யாராலும் உருவத்தைக் காணமுடியாது என்கிறார்.
அத்துடன் எட்டுத் திசைகளிலும் காற்றின் வேகத்துடன் சென்றுவரும் சக்தியும் கிடைக்குமாம். மேலும் பூமியில் கண்ணுக்குத் தென்படாது மறைந்துள்ள அனைத்துப் பொருட்களையும் தெளிவாகப் பார்க்க முடியும் என்கிறார். இதன் சாத்திய அசாத்தியங்கள் ஆய்வுக்கு உட்பட்டவை.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..
Post a Comment



36 comments:
அறியாத தகவல்...
நன்றி… தொடர வாழ்த்துக்கள்...
new information
ஆதளை what is this? please explain.
அருமையான பதிவு அவசியமான பதிவு அதர்வன வேதத்தில் இதற்க்கு முக்கிய பங்கு உண்டு
wow!
நிறைய ஆச்சர்யமான தகவல்களை தொடர்ந்து தரும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்! நன்றி!
இன்று என் தளத்தில்!
சென்ரியுவாய் திருக்குறள்
எம்புள்ளைய படிக்கவைங்க!
உடைகிறது தே.மு.தி.க
http://thalirssb.blogspot.in
what is athalai
pl give botanical name plese
srini
ஆச்சிரியமான தகவல்!
காட்டாமணக்கு = ஆதளை ... I guess i am correct ...
very Good impressive information,
Very impressive News !
கதைகளா அல்லது உண்மை நிகழ்வுகளா இது நம்ப முடியவில்லையே. அந்த மூலிகை பற்றி படம் இருந்தால் நலமாக இருக்கும். நல்ல தகவல். வாழ்த்துக்கள்.
ஆதளை மூலிகை எங்கு கிடைக்கும் தோழி ?
அமானுஷ்ய தகவல்களை வெளியிட்டு வரும் தங்களுக்கு நன்றி.
மாயமாய் மறைந்திட்ட பிறகு மீண்டும் சமநிலைப் பெற என்ன செய்ய வேண்டும்
ஆதளை மூலிகை என்பது என்ன ?
Maraintha Pin Meendum Kanniku Pulappaduvathu Eppadi Thozhi?
Maraintha Pin Meendum Kannuku Pulappaduvathu Eppadi Thozhi?
ஆதளை என்பது என்ன மூலிகை என்று சொல்லுங்கள்.
அதிசயமான தகவல். இதில் ஒரு பிரச்சனை என்னவென்றால்,தற்காலத்தில் திருடர்களுக்கு 100 வீதம் சாதகமானது தோழி. ஏனென்றால் இப்பொழுது திருடர்கள் அதிகமாகிவிட்டார்கள்
மாயமாய் மறைந்தபின் மீண்டுன் உண்மை (மனித உருவத்திற்கு) நிலைக்கு திரும்பி வருவதற்கு என்ன செய்ய வேண்டும்...
ethai seidhuparkiren.
arumai
aathalai enbathu enna thozhi?
இந்த கருவூரார் படலை திரும்ப படிக்கும்போது எனக்கு ஒரு உண்மை புலப்படுகின்றது.
இந்த மையினை திலகம் வைக்கும்போது ஆக்கினை என்ற சக்கரம் தூண்டிவிடப்படும்.
அப்படி தூண்டினால் தியான நிலையில் தன்னை அறியமாட்டார். தியான நிலையில் தாம் அறிந்ததை பிறர் காணமாட்டார்.
அப்படி ஆக்கினை சக்கரத்தில் மனம் ஆழ்ந்து செல்ல செல்ல மனம் காற்றோடு கலந்து செல்லும். அது மட்டும் அல்லாது
பூமியில் உள்ள அணைத்து உயிரினங்களின் தோற்றம் பற்றிய உண்மை தெளிவாக தெரியும் என்பதைத்தான் சித்தர்கள்
மறை பொருளாய் கூறியுள்ளனர்.
நன்றி
அழகிரி
ஆதளை -> ஆமணக்கு / காட்டுஆமனக்கு
@Netrikkan
பொதுவாக சித்தர்கள் ஆன்மாவும் குறிப்பதால்
நீங்கள் கூறியது சரியாக இருபது போல் உணர்கிறேன்.
vendukol ondru... ella muraigalilum adhil kuripudum porulin alavugal kuripital nandraga irukum...
nan seithu parthen.failure agi vittathu.
http://www.grannytherapy.com/tam/category/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/
"adavai" is what?
வெண்ணெயுடன் -> It is not ordinary butter from cows milk or buffalo.
There is seperate process to create it.
-sara
மறைந்த உருவத்தை எப்படி திரும்பப் பெறுவது
திலகத்தை அளித்தால் மீண்டு பழைய நிலைமைக்கு திரும்பலாம்
thilagaththai aliththal mindum palaya nilamaikku maralam
திலகத்தை அளித்தால் மீண்டு பழைய நிலைமைக்கு திரும்பலாம்
Really Good Sir
இந்த நூல் எங்கு கிடைகிறது தோழி?
Post a Comment