சித்தர்களை பொறுத்த வரையில் குருநாதர் மட்டுமே தூய்மையானவர், உயர்வானவர், முழுமையானவர். அவரை தவிர்த்த மற்ற எல்லாமே மேம்படுத்த வேண்டியவை என்கிற தீவிரமே அவர்களை தேடலை நோக்கி உந்தியது. தாங்கள் அணுகும் ஒவ்வொரு கூறிலும் உள்ள குறைகளை களைந்து மேம்படுத்திடவே அவர்கள் முனைந்தனர் என்றால் மிகையில்லை. இதனை சாப நிவர்த்தி என அழைத்தனர். சித்தரியலில் இது தனியொரு பிரிவாகவே இருக்கிறது. இந்த சாபநிவர்த்தியின் பட்டியல் சிறிய பொருட்களில் துவங்கி மனிதர்கள் வரை நீளுகிறது.
இரசவாதம் மற்றும் மருத்துவத்தில் மூலிகை சாபநிவர்த்தி என்பது ஒரு பெரும் பிரிவு. தேவையான மூலிகையை பூமியில் இருந்து பறிப்பதற்கு முன்னர் செய்திட வேண்டிய முன் தயாரிப்புகளை சாபநிவர்த்தி எனலாம். காட்டில் மூலிகைகளை தேடும் பொழுது குறிப்பிட்ட மூலிகையினை சுற்றி வளர்ந்து இருக்கும் பிற செடிகளை கவனிக்க வேண்டுமாம். பிற செடிகளின் தன்மை மற்றும் பண்புகளை கருத்தில் கொண்டே தேவையான மூலிகையினை பறிக்க வேண்டும் என கூறியிருக்கின்றனர். இவை இரண்டு வகைப்படும், மருத்துவ தேவைகளுக்கு சாப நிவர்த்தி செய்வது, குறிப்பிட்ட மூலிகையை ஒரு குறித்த செயலை செய்யவதற்கு தயார் செய்யும் சாப நிவர்த்தி முறை ஆகும். சாப நிவர்த்தி செய்யாது பயன்படுத்தினால் அவை பலனளிக்காது என வலியுறுத்திக் கூறுகின்றனர்.
எதிலும் விதிவிலக்கு இருக்கும்தானே, ஆம்!, ஒரே ஒரு மூலிகை மட்டும் சாபநிவர்த்தி செய்யாமல் பயன்படுத்தலாமாம். அதைப் பற்றியதே இன்றைய பதிவு.
அது என்ன மூலிகை?
இந்த மூலிகை பற்றிய விவரம் கருவூரார் அருளிய "கருவூரார் பலதிரட்டு" என்னும் நூலில் விவரிக்கப்பட்டிருக்கிறது. அந்த பாடல் பின்வருமாறு..
சத்தியமாய்ச் சொல்லுகிறேன் நத்தைச்சூரி
தாரணிக்குள் சாபமில்லை பெரியோர் கொள்வார்
சித்தியென்ற எட்டுமிதற் குள்ளேயாச்சு
செகமெல்லாம் இதன் பெருமை திறமோ காணார்
சுத்தியென்ற சூரிதனைத் தினமுங் கொண்டால்
சொல்லவொண்ணா ஆச்சரியம் இறுகுந்தேகம்
சுத்தியென்ற அருக்கனிலே காப்புகட்டிச்
சொல்லடா மந்திரத்தைச் சூட்டுறேனே.
சூட்டுகிறேன் ஓம்வச்சிர ரூபிசூரி
சூரி மகாவீரி சுவாகா வென்று
நாட்டுகிறேன் சமூலமே பிடுங்கிவந்து
நன்றாகச் சூரணம்செய் சீனிநேரே
ஊட்டுகிறேன் கலந்துமண் டலந்தாந்தின்னு
ஒரு நூறு இருபதுமோ வொருநாளும்
மாட்டுகிறேன் பத்திரத்தை வாயிலிட்டு
மைந்தனே மலைகளெல்லாம் நோருக்கலாமே.
நொறுக்கலாம் விரையெடுத்துத் தினமும் கொண்டால்
நூறூழி அளவுவரை இருக்கலாகும்
நோருக்கலாம் எந்தெந்தத் தொழில்கள்தானும்
நோக்காதே மற்றுமொரு கற்பமேனும்
நொறுக்கலாஞ் சத்துருவும் வியாதிதானும்
நுணுக்கமே உலகத்தோர் காணாரப்பா
நொறுக்கலாம் இம்மூலி சிரசில் வைக்க
நோக்காதே தேவதைகள் போற்றும்பாரே.
உலகத்தில் மூலிகை எல்லாவற்றிற்கும் சாபம் உண்டு ஆனால் "நத்தைச் சூரி" என்கிற மூலிகைக்கு மட்டும் சாபம் இல்லை. அதனை அறிந்தவர்கள் இந்த மூலிகையை அப்படியே பயன்படுத்துவார்கள் என்கிறார் மேலும் உலகத்தில் இதன் பெருமை அதிகம் என்றும் சொல்கிறார்.
நத்தைச் சூரியைத் தினமும் உட்கொண்டால் உடல் இறுகுமாம். ஞாயிற்றுக்கிழமையில் நத்தைச் சூரியை பிடுங்க வேண்டுமாம் அப்படி பிடுங்கும் போது "ஓம் வச்சிர ரூபி சூரி சூரி மகாவீரி சுவாகா" என்று மந்திரத்தைச் செபித்துச் பிடுங்கி வந்து உலர்த்தி நன்றாகச் சூரணம் செய்து அதற்கு சமன் அளவாக சீனி சேர்த்து ஒரு மண்டலம் உண்டால் அதிக வலிமை உண்டாகும் என்கிறார்.நத்தைச் சூரி இலையை வாயில் மென்று அதக்கிக் கொண்டால் மலையை நொறுக்கும் வலிமை உண்டாகுமாம்.
நத்தைச் சூரி விதையை எடுத்துத் தினமும் சாப்பிட்டு வர நீண்ட நெடுங்காலம் வாழலாம் என்கிறார். அத்துடன் அனைத்துச் சித்துக்களும் உண்டாகுமாம். வேறு எந்த கற்ப மருந்துகள் தேவைப்படாது,வியாதிகளும், எதிரிகளும் நெருங்காது வாழலாம் என்கிறார்.இவ்வாறான நுணுக்கமான தகவல்களை உலக மக்கள் அறிய மாட்டார்கள். என்று சொல்லும் இவர், நத்தைச் சூரியைத் தலையில் வைத்துக் கொள்ள தேவதைகளும் போற்றுவார்கள் என்கிறார்.
ஆச்சர்யமான தகவல்கள்தானே!
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment



22 comments:
ஆச்சர்யம் தான் , ஆனால் எங்கு தேடுவதோ ?
இப்படி எல்லாம் இருக்கிறதா...?
நன்றி..
திண்டுக்கல் தனபாலன்
where to get this herb.nice mam.
சொருப மணி காமதேனுமணி போகமணி சந்தானமணி ......போன்ற இரசமணியை எவ்வாறு கட்டுவது?
நீங்கள் பதிவில் பகிர்ந்து கொண்ட இரசமணி இரசலிங்கம் செய்ய எவ்வளவு பணம் செலவானது?
very nice information.thank you.
நத்தைச் சூரி பற்றி என் தந்தை கூறக் கேள்விப்பட்டிருக்கிறேன்! அதன் முக்கியத்துவம் பற்றிய தங்கள் விளக்கம் அருமை!
sister can u tell me correct name of botanical of nathi choori (spermacoce hispida linn or borreria hispida) when i search for that is showing this two plants pls can u help me?
Thank you sister
shiva
u have that plant photo? pls load that it can help me
Thank you
shiva
ithuku paththiyam thevayaa?
Naththai suri photo in below link
http://www.grannytherapy.com/tam/2011/10/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95-8/%E0%AE%A8%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-5/
nathai soori yin ariviyal peyar
"SPERMACOCE HISPIDA"
google image la photo irukku
please show this page for more herbal plants science name
www.tamildictionary.50webs.com/herbs/
nine articles
keep it up
it is very useful for society
siddargal topics are nice
plz send update articles to my e-mail
கேள்விபடாத ஒன்று . நன்றி
http://siddham.in/naththaichuri-spermacoce-hispida
தோழி ,
இன்று தான் தங்களின் பதிவின் வாயிலாக நத்தை சூரி பற்றி அறிந்தேன்.மிக்க நன்றி.
chennai, parry's la nathai sury vidhai nattu marundhu kadala kidaichirruku - Thozhikku miga miga nandrigal = Ravi , chennai
Guruvarulal enakku kaya sitthu undagumanal , thozhikkum miga nandrigal - Guruvaruludan nathai sury vidhai vupayogagikka pogiren - ravi, chennai
Here is the image of Naththaichuri herbal.
Naththaichuri Image
-saravanan
Make Ringtones
நிச்சயமாக இது ஒரு அபூர்வமான பதிவு நட்பே! கலக்குங்கள்!
Thank you very much john simon,
I have got confirmation by your image....
Thanks
saravanan.S
MY NAME G.KARUPPASAMY, KOVILPATTI.
jebasamy@gmail.com
I WANT NATHAI SOORI IMAGES AND FULL DEATAILS. PLEASE INFORM TO ME.
PARISANAVETHI MOOLIGAI MAKING GOLD!
A.Sathish
enakku naththaichuri mooligai thevai padugirathu. athu yenge kidaikum endru solla mudiyuma....
phone number 7639532225
e mail id: imsathish.shadi@gmail.com
plz....
Post a Comment