கடந்த எட்டு பதிவுகளின் ஊடாக பதினைந்து திதிகளைப் பற்றியும் அவற்றிற்கான அகத்தியரின் பலன்களையும் பார்த்தோம். இந்த தொடரின் நெடுகே இரண்டு நண்பர்கள் மின்னஞ்சல் ஊடே எழுப்பிய கேள்விகளுக்கான எனது புரிதலை இன்று பகிர விரும்புகிறேன். திதி என்பதோ, அல்லது திதிகளின் பெயர்களோ தமிழ் வார்த்தைகள் இல்லை. அவை யாவும் வடமொழியைச் சேர்ந்தவை. அவற்றையே அகத்தியர் தனது பாடல்களில் பயன்படுத்தியிருக்கிறார்.
திதி என்ற சொல்லுக்கு நிகரான தமிழ்பதம் "நிலவின் பிறை தினம்" என பொருள் கொள்ளலாம்.ஒவ்வொரு நாளும் நிலவின் பிறையை பொருத்தே திதிகளுக்கான பெயர்கள் வழங்கப் பட்டன. ஒவ்வொரு திதிக்குமான வடமொழி பெயருக்கு நிகரான தமிழ் பெயர்கள் என்னிடத்தில் இருக்கிறது. ஆனால் அவை எங்கிருந்து எடுக்கப் பட்டன என்பதற்கான தகவல் அதில் இல்லை.
அவை முறையே...
பிரதமை - ஒருமை
துதியை - இருமை
திரிதியை - மும்மை
சதுர்த்தி - நான்மை
பஞ்சமி - ஐம்மை
சஷ்டி - அறுமை
சப்தமி - எழுமை
அஷ்டமி - எண்மை
நவமி - தொண்மை
தசமி - பதின்மை
ஏகாதசி - பதிற்றொருமை
துவாதசி - பதிற்றிருமை
திரையோதசி - பதின்மும்மை
சதுர்த்தசி - பதினான்மை
பவுர்ணமி - நிறைமதி
அமாவாசை - மறைமதி
என்பனவாகும்.
மேலும் பஞ்சாங்கத்தில் குறிப்பிடப் படும் திதிகளின் பண்புகளுக்கும், சித்தர்கள் கூறிடும் பண்புகளுக்குமான வித்தியாசங்கள் ஆய்வுக்குரியவை. வழக்கத்தில் உள்ள பஞ்சாங்கத்திற்கும், சித்தர்கள் அருளிய பஞ்சாங்கத்திற்குமான ஒரு சிறிய வேறுபாட்டினை மட்டும் இங்கே குறிப்பிட்டுக் காட்டிட விரும்புகிறேன்.
பஞ்சாங்கத்தில் பதினைந்து திதிகளும் ஐந்து விதிகளுக்கு உட்பட்டவை. அவை முறையே "நத்தை திதி", "பத்ரை திதி", "சபை திதி", "இருத்தை திதி", "பூரணை திதி" என அழைக்கப் படுகிறது. இவை ஒவ்வொன்றும் மூன்று திதிகளை உள்ளடக்கியது.இதன் படியே பொதுப் பலன்கள் கூறப்படுகிறதுஅது பற்றி விளக்கப் புகுந்தால் இந்த வலைத் தளத்தின் நோக்கம் திசை மாறிவிடும் என்பதால் இத்துடன் இந்த தொடரை நிறைவு செய்கிறேன்.
வேண்டுகோள்: நண்பர்களே, சித்தர்கள் இராச்சியம் வலைப்பதிவின் தகவல்கள் பிறமொழி நண்பர்களின் வாசிப்புக்காக வேண்டி ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்படுவதை தாங்கள் அறிவீர்கள். அந்த வரிசையில் இன்று நூறாவது பதிவு மொழிபெயர்க்கப் பட்டு வலையேற்றப் பட்டிருக்கிறது. தமிழறியாத நண்பர்களிடம் இந்த இணைப்பை பகிர்வதன் மூலம் நம் முன்னோர்களின் ஆக்கங்களை உலகறிய செய்திட வேண்டுகிறேன்.
வேண்டுகோள்: நண்பர்களே, சித்தர்கள் இராச்சியம் வலைப்பதிவின் தகவல்கள் பிறமொழி நண்பர்களின் வாசிப்புக்காக வேண்டி ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்படுவதை தாங்கள் அறிவீர்கள். அந்த வரிசையில் இன்று நூறாவது பதிவு மொழிபெயர்க்கப் பட்டு வலையேற்றப் பட்டிருக்கிறது. தமிழறியாத நண்பர்களிடம் இந்த இணைப்பை பகிர்வதன் மூலம் நம் முன்னோர்களின் ஆக்கங்களை உலகறிய செய்திட வேண்டுகிறேன்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment



7 comments:
வாழுதுகள் . . .
superb post
very good tholi
congratulations
You are doing a wonderful job.Keep it up.Long live.
தங்கள் தமிழ் நன்றாக உள்ளது
நன்று
Post a Comment