சதுர்த்தசி திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்....
திரியவே சதுர்த்தசியில் ஜெனனமானோன்
தேசத்தில் தீமையது செய்வோனாவான்
அரியவே பிறர்பொருளை யபகரிப்பான்
அடுத்தவிட மெங்கையுமே கலகஞ்செய்வான்
பிரியவே பிறர்களை தூஷணமே செய்வான்
பேச்சிக்கு முன்னாகக் கோபங்கொள்வான்
சூரியவே குரோதமது வுடையோனாகி
குவலயத்தீ லுருப்பதெனக் கூறிடாயே.
சதுர்த்தசி திதியில் பிறந்தவர்கள் மற்றவர்களுக்கு தீங்கு செய்பவர்களாகவும், பிறருடைய பொருளை அபகரிப்பவர்களாகவும். அடுத்தவர்களிடம் கலகஞ் செய்பவர்களாகவும், பிறர் மீது அவதூறு செய்பவர்களாகவும். அதிக முன்கோபமுடையவர்களாகவும், குரோத மனமுடையவர்களாகவும் இருப்பார்களாம்.
பௌர்ணமி திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்...
கூறவே பௌர்ணமியில் ஜெனனமானோன்
குணமுளான் புத்தியுள்ளான் பொருமையுள்ளான்
நேறவே வாக்கதுவும் பிசக மாட்டான்
நேர்மையுடன் யென்னாளுந் தயாளமுள்ளான்
அன்றேல் களங்கமது யுற்றோனாகும்
உக்கிரமுள்ள தெய்வத்தைப் பூசை செய்வான்
பீறவே மந்திரத்தால் பலரைத்தானும்
மேதினியில் கெடுப்பனென மகிழுவாயே.
பௌர்ணமி திதியில் பிறந்தவர்கள் நல்ல குணமுள்ளவர்களாகவும், புத்தியுள்ளவர்களாகவும், பொருமையுள்ளவர்களாகவும், வாக்குப் பிசகாதவர்களாகவும், நேர்மையும் தயாளகுணமும் கொண்டவர்களாகவும் இருப்பார்களாம். இந்த குணநலன்கள் இல்லை என்றால் எதிர்மறையாக களங்கம் கொண்டவர்களாகவும், உக்கிர தெய்வத்தை பூசைசெய்பவர்களாகவும், மந்திரத்தால் பலரை கெடுப்பவர்களாக இருப்பார்கள் என்கிறார்.
இத்துடன் திதிகளுக்கான பலன்கள் நிறைவடைந்தன. இந்த தகவல்கள் இறுதியானவையோ என்றோ அல்லது உறுதியானவையோ என்றோ அறுதியிட்டு கூறிடும் தகுதி எனக்கு இல்லை. எனவே இந்த தகவல்களை ஒரு தகவல் பகிர்வாக மட்டுமே அணுகிட வேண்டுகிறேன்.
நாளைய பதிவில் திதிகள் பற்றிய சில சுவாரசியமான உபரி தகவல்களுடன் சந்திக்கிறேன்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment
11 comments:
very nice mam
nice
நல்ல பயன் உள்ள பதிவு - நன்றி.
மேலும் வரும் ஞாயிறு நாக பஞ்சமி - கோவில் சென்று வழிபடுவோம்
nandri
arumai
சிறப்பான பதிவு...
பகிர்வுக்கு நன்றி...
தொடருங்கள்... வாழ்த்துக்கள்...
ammavasai thithyil piranthavargalin palan kidaikkapperuma thozhi ?. nandri
ammavasai enga sir kanam. nan ammavasai born
Tithe, pallanunmaiyavaa, jathagam, rasikattam, navaamsam, ivaai galin, pallangal enna vagum
Please reply my mail id
ருது பலன் பற்றி சிறிது கூறுங்களேன்
Post a Comment