திதிகளுக்கான பலன்கள் வரிசையில் இன்று பஞ்சமி மற்றும் சஷ்டி திதிகளில் பிறந்தவர்களுக்கான பலன்களைப் பற்றி பார்ப்போம். இந்த தகவல்கல் யாவும் அகத்தியர் அருளிய "சோதிட காவியம்" என்னும் நூலில் இருந்து திரட்டப் பட்டவை.
பஞ்சமி திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்...
பாரெனவே பஞ்சமியில் ஜெனனமானோன்
பகரொணா துக்கசா கரணு மாவான்
கூரெனவே சகலகலை வேதம் யாவும்
கொப்பெனவே பார்க்கமன மிகவே யுள்ளான்
நேரெனவே காண்பதற்கு நுட்ப தேகி
நேரிழைமார் தங்களின்மேல் விருப்ப முள்ளான்
காரெனவே காசினியி லின்னோன் தானும்
காமியென வேயிருப்பான் கண்டு சொல்லே.
- அகத்தியர்
பஞ்சமி திதியில் பிறந்தவர்கள் துயரத்தில் மூழ்கியவர்களாகவும், வேதாகமங்களை ஆராய்ச்சி பண்ணுபவர்களாகவும், நுட்ப தேகமுடையவர்களாகவும், பெண்களின் மீது விருப்பமுடையவர்களாகவும், மண்ணாசை கொண்டவர்களாகவும் இருப்பார்கள் என்கிறார்.
சஷ்டி திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்...
சொல்லவே சஷ்டிதனில் ஜெனன மானோன்
சோர்வாக வேயிருப்பான் மெலிந்த தேகன்
புல்லவே பிரபுவெனப் புகழத் தானும்
புவியெங்குங் கீர்த்தியது கொள்வான் மேலாய்
வெல்லவே பிரபுகள் தங்களாலே
வேணதோ ரூபகாரம் வந்து கூடும்
அல்லவே முன்கோபி யாகத்தானும்
அகிலமிசை வாழ்வெனை லுரைகுவாயே
சஷ்டி திதியில் பிறந்தவர்கள் சோர்வுடைய மெலிந்த தேகத்தை உடையவர்களாகவும், யாவரும் போற்றும் புகழ் உடையவர்களாகவும், பிரபுக்களின் உதவிகளைப் பெற்றுக் கொள்ளக்கூடியவர்களாகவும், முன்கோபியாகவும் இருப்பார்கள் என்கிறார்.
நாளைய பதிவில் சப்தமி மற்றும் அட்டமி திதியில் பிறந்தவர்களுக்கான பலன்களைப் பற்றி பார்ப்போம்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment
3 comments:
nice mam
அறியாத விடயம் மடம்.....
ARUMAI THOZHI THANGAL MUYARCHI MELUM THODARA ELLAM VALLA BAIRAVAR ARUL KIDAIKKATTUM. BAIRAVAR SAMBANTHAMAGA NALLAKURIPPUGAL TAHRA VENDUGIREN
Post a Comment