சித்தர்களின் மருத்துவத்தில் மருந்துகளானது அகமருந்து, புறமருந்து என இரு பெரும் பிரிவுகளை கொண்டது. இவற்றில் இதுவரை அகமருந்துகள் 32 பற்றிய தகவல்களை பார்த்தோம். அந்த வரிசையில் இந்த வாரத்தின் நெடுகே புறமருந்துகள் பற்றிய விவரங்களினை பார்ப்போம். அகமருந்துகளை வாய் வழியே உட் கொள்வது என்றால் புற மருந்தானது உடலின் மேற்பரப்பில் பயன்படுத்தி சிகிச்சை அளிப்பதாகும். உடலின் மீதான வீக்கம், வலி, கட்டிகள், புண்கள், காயங்கள், விஷக்கடி என பல்வேறு வகையான நோவுகளுக்கு புறமருந்து பயன்படுத்தப் படுகிறது.
அகமருந்துகளைப் போலவே புறமருந்துகள் 32 ஆகும். அவை முறையே.....
1.கட்டு, 2.பற்று, 3.ஒற்றடம், 4.பூச்சு, 5.வேது, 6.பொட்டணம், 7.தொக்கணம், 8.புகை, 9.மை, 10.பொடிதிமிர்தல், 11.கலிக்கம், 12.நசியம், 13.ஊதல், 14.நாசிகாபரணம், 15.களிம்பு, 16.சீலை, 17.நீர், 18.வர்த்தி, 19.சுட்டிகை, 20.சலாகை, 21.பசை, 22.களி, 23.பொடி, 24.முறிச்சல், 25.கீறல், 26.காரம், 27.அட்டை விடல், 28.அறுவை, 29.கொம்பு வைத்துக் கட்டல், 30.உறிஞ்சல், 31.குருதி வாங்கல், 32.பீச்சு.
இன்றைய பதிவில் முதல் எட்டு வகையான புறமருந்துகளைப் பற்றி பார்ப்போம்.
1.கட்டு - இலைகளையோ, பட்டைகளையோ இடித்து அல்லது வேக வைத்து கட்டு கட்டுவது.
2.பற்று - பட்டைச்சோறு அல்லது அரைத்த விழுதை சுட வைத்தோ, சுட வைக்காமலோ நோயுள்ள இடங்களில் அப்புவது.
3.ஒற்றடம் - சுண்ணாம்புக் காரை, தவிடு, செங்கல் பொடி, மணல், சில இலைகள் முதலியவைகளில் ஏதாவது ஒன்றை வறுத்து துணியில முடித்து நோயுள்ள இடங்களில் ஒற்றுவது.
4.பூச்சு - கொதிக்க வைத்த இலைச்சாறுகளையோ, நெய்களையோ நோயுள்ள இடங்களில் பூசுவது.
5.வேது - நொச்சித்தழை போன்றவற்றை வெந்நீரில் போட்டு அதில் உண்டாகும் ஆவியைப் பிடிப்பது.
6.பொட்டணம் - சில சரக்குகளை இடித்து சிறு முடிச்சுக்கட்டி நெய் விதைகளில் ஒன்றை வைத்து நனைத்து அந்த முடிச்சை நோயுள்ள இடங்களில் ஒற்றடமாகக் கொடுப்பது.
7.தொக்கணம் - உடல் வலியை நீக்கப் பிடித்து விடுவது. வெறும் கையால் பிடித்து விடுவது, நெய் வகைகளைப் பூசிப் பிடிப்பது என இருவகைப்படும்.
8.புகை - மயலிறகு, சீரகம், விலங்குகளின் குளம்புகள், மாடு எருமைக்கொம்பு, நல்ல பாம்பின் சட்டை, பன்றி மலம் முதலியவைகளை இடித்து நெருப்பிலிட்டு உண்டாக்குவது.
நாளைய பதிவில் அடுத்த எட்டு புறமருந்துகளைப் பற்றி பார்ப்போம்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment



3 comments:
புகை மருத்துவம் கொஞ்சம் விகாரமாக உள்ளது. தற்போது இந்த புகை மருத்துவம் வழக்கில் உள்ளதா சகோதரி.
இறைவன் என்றும் உங்களுடன்.
விவேகன்
nice post
any medicines available in sitharkal ragasiyam for related to hair falling????? if any please inform us
Post a Comment