சித்தர்கள் அருளிய அகமருந்துகள் மற்றும் புற மருந்துகள் யாவும் மூன்று அடிப்படை மூலங்களில் இருந்தே உருவாக்கப் படுகின்றன. அவை மூலிகைகள், தாதுபொருள்கள்(உப்பு, உலோகங்கள்), உயிரிகள் (பறவைகள், விலங்குகள், வண்டுகள்).
இந்த வரிசையில் இன்றைய பதிவில் 17 முதல் 24 வரையிலான புறமருந்துகள் அல்லது வெளி மருந்துகள் பற்றி பார்ப்போம்.
17. நீர் - இரணங்களைக் கழுவுவதற்கு பாஷாணச் சரக்குகள் சேர்த்துக் கலந்த மருந்து கிருமி நாசினி.
18. வர்த்தி - பாஷாண சரக்குகளை அரைத்தோ அல்லது மருந்துகளிலோ துணியை நனைத்து திரியாகச் சுருட்டி புரையோடியுள்ள ரணங்களில் வைப்பது.
19. சுட்டிகை - மரம், ஊசி முதலியவைகளில் கொளுத்தி சூடாக்கி நோயுள்ள இடங்களில் இழுப்பது.
21. பசை - குங்கிலியம் முதலியவைகளில் மெழுகு அல்லது நெய்யுடன் சேர்த்து உருக்கி பசை போல வைத்துக் கொள்வது.
22. களி - உண்ணும் களி போன்ற பக்குவத்தில் சரக்குகளைச் சேர்த்து கிண்டிக் கொண்டு வெளியில் பூசுவது.
23. பொடி - ரணங்களில் தூவுவதற்கு செய்து கொள்கின்ற சரக்குகளின் தூள்.
24. முறிச்சல் - கை, கால் முதலிய உறுப்புகளில் ஏதாவது பிறழ்ந்து சரியான நிலைமை மாறி இருக்கும் பொழுது சரி செய்வது.
நாளைய பதிவில் மீதமிருக்கும் புறமருந்துகளைப் பற்றி பார்ப்போம்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment
2 comments:
nice post
Welcome to you. i saw this website today. it is well. keep on this process.
Post a Comment