தற்கால அறிவியல் ஆய்வேடுகளுக்கு சற்றும் குறையாத தரத்தில், அகத்தியர் தனது நூலில் அட்டைகளின் வகைப்பாட்டியலை விவரித்திருக்கிறார். இந்த தகவல்களை நாம் எந்த அளவு மேம்படுத்தி செயலாக்கத்தில் வைத்திருக்கிறோமா என்பது கேள்விக்கும், விவாதத்திற்கும் உரியது.
அகத்தியரின் நயனவிதி 500ல் அட்டைகள் மூன்று பெரும் பிரிவுகளாய் பிரித்துக் கூறப் பட்டிருக்கிறது அவை முறையே
1 - தீய அட்டைகள்
2 - சாதாரண அட்டைகள்
3 - நல்ல அட்டைகள்
என்பதாகும். இனி இவற்றை கொஞ்சம் விளக்கமாக பார்ப்போம்.
1 - தீய அட்டைகள்
ஆகா வட்டை யது கேளாய்
அலவன் தவளை நீர்ப்பாம்பு
மேகா சலத்தில் பிறந்தனவும்
வேண்டா சருகிற பிறந்தனவும்
போகாச் சுனையில் பிறந்தனவும்
பொல்லா வட்டையிவையென்றே
பாகார் மொழிகொள் பைந்தொடியே
பாரா யட்டை வகுப்பினையே.
இவை தவளை, நீர்ப்பாம்பு, பதனழிந்த இலைகள், புற்கள் நிறைந்துள்ள குளங்கள், குழிகள் ஆகிய இடங்களில் இருக்கும். அத்துடன் இவை இவை கருத்த நிறத்துடனும் கருஞ்செம்மை நிறத்துடனும் வான வில்லைப் போல பல நிறத்தையும் உடையனவாகவும் காணப்படுமாம்.
2 - சாதாரண அட்டைகள்
இவை பொன்னிறத்தில் சற்றுக் கருமைநிறம் சேர்ந்த நிறத்துடனிருக்கும்.
3 - நல்ல அட்டைகள்
நன்னட்டை தனக்குள்ள அழகான லட்சணத்தைத்
திட்ட முடன் நடுவேசெப்பக்கேள் – குடடிக்குப்
பாலமுத மென்னுமொழி பாவைநல் லாயுருக்கள்
நாலுவகை யுண்டென்றே நாட்டு.
வெள்ளைநிற மொன்று மிகுநீலந் தானொன்று
கள்ளமிலாப் பொன்மை கருப்பொன்று – எள்ளியதாம்
வாசமிகும் பூங்குழலீர் மற்று மிவைகளெலாந்
தேசகுண மாமென்று செப்பு.
அழுகா சலத்தில் பிறந்தவுரு
அறவே மேனி சரசரக்கும்
மெழுகா நிலை சீர்ச்சுனையிலுறு
உருவை யொழிய அடைகாக்குங்
கழியா நீரில் பிறந்தவுருக்
கழுநீ ரான நிறமதுபோல்
ஒழியா வயிறு சிவந்திருக்கும்
உண்மை யிதுவென் றுணர் வாயே.
நீர் ஊற்றுக்களிலும் அருவிகளிலும் மணலின் கீழ் மறைவாகவுமிருக்கும். இதன் வயிற்றுப் பக்கம் பெரும்பகுதிசெங்கழுநீர்ப் பூவின் நிறத்தை ஒத்திருக்கும்.
நல்ல அட்டை நான்கு வகைகளாய் பிரித்துக் கூறுகிறார் அவை..
1. முதற் பிரிவில் சேர்ந்தவை வெண்மையும் சற்றுப் பொன் நிறமும் பெற்றிருக்கும்.2. இரண்டாம் பிரிவிற் சேர்ந்தவை செங்கழுநீர்ப்பூ நிறத்தைப் பெற்றிருக்கும்.3. முன்றாம் பிரிவிற் சேர்ந்தவை பவளத்தின் நிறத்தையும் அரிசி நிறத்தையு பெற்றிருக்கும்.4. நான்காமவை பச்சை நிறமும் எலுமிச்சைபழ நிறமும் பெற்றிருக்கும்.
நாளைய பதிவில் அட்டைகளில் ஆண்,பெண் வேறுபாடுகளை கண்டறிவது மற்றும் சிகிச்சைக்கு தகுதியான அட்டையை தேர்ந்தெடுப்பது எப்படி என்பதைப் பற்றி பார்ப்போம்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment



2 comments:
interesting post
amazing info. Yes, This is far beyond current technology. Unfortunatly we missed a great treasure. You are really doing a great service to Tamil and Tamil people.
I am not having Tamil font support in my mobile. So i could type only in English.
Post a Comment