இரசவாதத்தில் பயன்படும் யந்திரங்களின் வரிசையில் இன்று மெழுகு தைல யந்திரம் மற்றும் தூப யந்திரம் பற்றி பார்ப்போம்.
மெழுகு தைல யந்திரம்
கழுத்து நீண்டு வாய் குறுகி இருக்கும் பெரிய பானையாக தெரிவு செய்ய வேண்டும். குறைந்தது 20 லிட்டர் கொள்ளளவு இருத்தல் அவசியம். இதன் வாயில் சொருகி வைக்கும் அளவுக்கு 8 லிட்டர் கொள்ளளவில் சிறிய பானை ஒன்றையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு படத்தில் காட்டப் பட்டதைப் போல பெரிய பானையினுடைய ஒரு பக்கத்தில் 20 செ.மீ அளவுக்கு சிறு துவாரம் செய்து கொண்டு, சிறிய பானையின் ஒரு பக்கமும் இதே போல ஒரு துவாரம் செய்து கொள்ளவும். சிறிய பானையின் துவாரம் கீழ் நோக்கி இருக்கும் படியாகவும் பெரிய பானையின் துவாரம் மேல் நோக்கி இருக்கும் படியாகவும் அமைத்து இரண்டுபானைகளின் வாய் பகுதிகளை ஒன்றுடன் ஒன்று சொருகி ஒரு நூலைக் கொண்டு கட்டிக் கொள்ள வேண்டும். பிறகு இதன் மீது ஏழு சிலை மண் செய்து உலர்த்தி விட வேண்டும்.
ஒரு எரியும் அடுப்பின் மீது பெரிய பானயின் துளை இல்லாத பகுதியை வைத்து விட்டால் சிறிய பானையின் துளை உள்ள பகுதி கீழ் நோக்கி இருக்கும். இப்போது சிறிய பானையின் துளைக்கு நேர் கீழாக ஒரு பாத்திரத்தை வைக்க வேண்டும். அடுத்து பெரிய பாத்திரத்தின் மேல் பக்கத் துளை வழியாக தைலம் இறக்க வேண்டிய மருந்துப் பொருள்களை ஊற்றி அந்தத் துளையை சிறு ஓட்டால் மூடி சாணத்தைக் கொண்டு பூசி விட வேண்டும்.
இப்போது அடுப்பில் இருக்கும் தீயின் வெப்பத்தினால் பெரிய பானையில் போடப்பட்டிருக்கும் பொருள்கள் தைலமாக சிறிய பானையில் இறங்க ஆரம்பிக்கும். சிறிய பானையின் கீழ்ப்பக்க துளை வழியாக தைலம் தரையில் வைக்கப்பட்டு இருக்கும் பாத்திரத்தில் இறங்கும். வெப்பம் அதிகரிக்கும் சமயத்தில் சிறிய பானை சேதம் ஆகாமல் இருக்கவும் தைலம் எளிதாக பாத்திரத்தில் இறங்கவும் சிறிய பானையின் மேல் ஒரு ஈரத்துணியை பரப்பி விட வேண்டும். ஈரம் காயக்காய மீண்டும் தண்ணீரைத் துணியின் மீது தெளித்து, தைலம் இறக்கி முடியும் வரை துணியினை ஈரமாகவே வைத்துக் கொள்ள வேண்டும்.
இதுவே மெழுகு தைல யந்திரம் எனப்படும்.
தூப யந்திரம்
ஒரு வாயகன்ற மண் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு அதில் புகை போடும் சாம்பிராணி அல்லது பூலாங்கிழங்கு அல்லது மருந்துப் பொருள் இதில் ஏதாவது ஒன்றினைப் பாத்திரத்தின் பாதியளவிற்குப் போட்டுக் கொள்ள வேண்டும்.
பிறகு பாத்திரத்தின் வாயினை மெல்லிய துணியின் உதவி கொண்டு ஏடு கட்ட வேண்டும். அந்தத் துணியின் மீது பக்குவம் செய்யப் பட வேண்டிய மருந்துப் பொருள்களை வைத்து இன்னொரு சட்டியால் மூடிவிட வேண்டும். இந்த இரண்டு சட்டிகளின் வாயையும் மண் பூசி சீலை செய்து அடுப்பில் ஏற்றி தீயை அதிகப் படுத்த வேண்டும்.
கீழ் பானையில் இருக்கும் புகை உண்டாக்கும் பொருள்களால் உருவாகும் ஆவியின் உதவியால் துணியில் வைத்து இருக்கின்ற பலசரக்கு பக்குவம் அடையும். இதற்கு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் பறங்கி ரசாயணம் தயாரித்தலைக் கூறலாம்.
நாளைய பதிவில் செந்தூரம் தயாரிக்கும் யந்திரம், வாலுகா யந்திரம், திராவக வாலை யந்திரம் பற்றி பார்ப்போம்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment





6 comments:
ரசவாதத்தில் பயன்படும் இயந்திரங்களை நன்கு தெளிவாக விவரிப்பதற்கு மிக்க நன்றி . .
aariyatha ariya thakaval thozi!!!
ஆச்சிரியமான தகவல் சகோ ..!
wwonderfull articles
Thanks
melugu taila endiram - fractional distillation has been used by siddars ! so indigenous technique
Post a Comment