ஜீவசமாதி குறித்த விவரங்கள் பலருக்கு புதிய தகவலாய் இருந்திருப்பதை பின்னூட்டங்கள் மற்றும் தனி அஞ்சல்களின் வாயிலாக அறிய முடிந்தது. இந்த தகவல்கள் யாவும் காலகாலமாய் ஏடுகளிலும், நூலகங்களில் தூங்கிக் கொண்டிருக்கும் தகவல்களே, இதை பகிர்வதில் எனக்கென பெருமை எதுவுமில்லை.இப்படி ஒரு வாய்ப்பினை எனக்கு அருளிய எல்லாம் வல்ல குருவுக்கே அத்தனை புகழும் சேரும்.
இந்து மரபியலில் ஜீவசமாதியின் முக்கியத்துவம் தெளிவாக வரையறுத்து கூறப் பட்டிருக்கிறது. எனினும் ஜீவசமாதி என்பது குறிப்பிட்ட எந்த ஒரு மதத்திற்குமானது இல்லை. தமிழகத்தில் இஸ்லாம் மற்றும் கிருத்துவ ஞானியரின் அடக்கத் தலங்கள் புகழ்பெற்ற வணக்கத் தலமாய் இருப்பதை இதற்கு உதராணமாய் காட்டிட முடியும். ஞானத்தின் உச்ச நிலை எய்திய ஒருவரை இன்ன மதத்தவர் என அடையாளம் காட்டிக் கொண்டிருக்கத் தேவை இல்லை என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.
ஞானியரின் ஜீவசமாதியில் ஒரு விளக்கேற்றி வைத்து, மனதை ஒரு முகப் படுத்தி தியானத்தில் அமர்ந்திருந்தாலே அவர்களின் அருளுக்கு பாத்தியமாக முடியும். ஆனால் தற்காலத்தில் இவை எல்லாம் புறக்கணிக்கப் பட்டு வழிபாடுகள், ஆராதனைகள் என சடங்குகள் சார்ந்த ஒரு வைபவமாக மாற்றப் பட்டுவிட்டது வருந்தத் தக்கது.
எமது நாட்டிலும் கூட பல ஞானியரின் ஜீவசமாதிகள் அமைந்திருக்கின்றன. கடந்த காலத்தின் அசாதாரண நிகழ்வுகளினாலும், தற்போதைய அரசியல் சூழலினாலும் அவற்றில் பல அழிந்ந்தும், பராமரிப்பு அற்றும் போய்விட்டன. எஞ்சிய ஒரு சில ஜீவசமாதிகள் அருளாளர்களினால் போற்றிப் பாதுகாக்கப் பட்டு வருகிறது. அத்தகைய ஜீவசமாதி ஒன்றின் படத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
ஞானியரின் அடக்கத்தலங்கள் குறித்த தகவலை முன்னரே இங்கு பதிந்திருக்கிறேன். தகவல் வேண்டுவோர் இந்த இணைப்பில் சென்று வாசிக்கலாம்..
இவை தவிர இணையத்தில் பலரும் ஜீவசமாதிகள் குறித்த குறிப்புகளை பகிர்ந்திருக்கின்றனர். ஆர்வமுள்ளோர் பின்வரும் இணைப்புகளை பயன் படுத்திக் கொள்ள வேண்டுகிறேன். இவை தொடர்புடையவர்களின் அனுமதியின்றி தகவலை பகிரும் நோக்கத்துடன் இங்கே பகிரப் படுகிறது. யாரேனும் ஆட்சேபம் தெரிவித்தால் அந்த இணைப்புகளை நீக்கிவிட தயாராக இருக்கிறேன்.
http://www.aanmigakkadal.com/2011/12/w.html
http://psssrf.org.in/usfullastro/tamilastrobooks.aspx?id=89807
http://tamilthamarai.com/devotion-news/2191-kurulinga-swami-chennai.html
நாளைய பதிவில் சித்தர்கள் இராச்சியம் வலைப் பதிவு பற்றிய ஒரு முக்கிய தகவலுடன் சந்திக்கிறேன்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment



7 comments:
ஜீவசமாதியையை பற்றி நிறைய தகவலை தெரிந்துகொண்டேன் தங்களது தொடர் பதிவில், மிக்க நன்றி பகிர்வுக்கு ..!
தகவல்கள் பகிர்ந்தமைக்கு நன்றி தோழி...
அன்பு தோழி,
பூரண ஆரோகியத்துடண் திரும்பியது மகிழிச்சி.
தயவு கூர்ந்து மூச்சு கலை பற்றி எழுதவும்.
தோழன்
வெங்கட்.
தொடருக்கு மிக்க நன்றி ....
Hi Thozhi,
http://omsakthionline.com/?katturai=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D&publish=500
நெய்வேலிக்கு அருகில் விருத்தாசலம் இருக்கிறது. இங்கே பாம்பாட்டிச் சித்தர் ஜீவ சமாதி இருக்கிறது. திருவாரூர், நாகை சாலைக்கு அருகில் எட்டுக்குடி ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில் தல விருட்சத்தின் அருகில் வால்மீகி ஜீவசமாதியும், இதனருகில் சிக்கல் சிங்கார வேலன் சன்னதியில் ஸ்ரீ போகநாதரும், வசிஷ்டரும் மற்றும் பல சித்தர்களும் அருளாட்சி செய்கிறார்கள்.
Ithil poganathar jeve samathi adaintha idam palani entru kelvipattulen.avarudaya seedar pulipani entrum kelvipattulen.
நா. சோமசுந்தரம் avarkaluku thariyapduthavam.
thavaru irunthal mannikavum
Naveen
mathipirkuriya thozhi avargale,
nalla nija sethigalai alikkireergal.mikka nandrigal.ivattrai print out eduthu samekkathan mudiyavillai. vazhi chyungal
mathipirkuriya thozhi avargale,
nalla nija sethigalai alikkireergal.mikka nandrigal.ivattrai print out eduthu samekkathan mudiyavillai. vazhi chyungal
Post a Comment