தவயோகத்தில் சிறந்து தெளிந்த ஞானியரின் உடலை ஜீவ சமாதி அமைத்திட வேண்டியதன் அவசியத்தை மற்றெவரையும் விட திருமூலர் வலியுறுத்திக் கூறுகிறார். அதற்கான காரண காரியங்களும் அவரது பாடல்களின் ஊடே நாம் காணக் கூடியதாக இருக்கிறது.
அதனை அவரது வரிகளிலேயே பார்ப்போம்....
அந்தமில் ஞானி அருளை அடைந்தக்கால்
அந்த உடல்தான் குகைசெய் திருத்திடில்
சுந்தர மன்னரும் தொல்புவி யுள்ளோரும்
அந்தமில் இன்ப அருள்பெறு வாரே
புண்ணிய மாம்அவர் தம்மைப் புதைப்பது
நண்ணி அனல்கோக்கில் நாட்டில் அழிவாகும்
மண்ணி லழியில் மலங்காரப் பஞ்சமாம்
மண்ணுல கெல்லா மயங்குமனல் மண்டியே
ஜீவ சமாதி அடைந்த ஞானியரின் உடலை குழி தோண்டி அதில் இருத்தி புதைத்தலே புண்ணியம் என்கிறார். மாறாக அந்த உடலை எரித்தால் பஞ்சம் ஏற்பட்டு நாட்டில் கேடுகள் விளைந்து, மக்களுக்குள் போர் மூண்டு, ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்வர் என்கிறார்.
அந்த மிலாஞானி தன் ஆகம் தீயினில்
வெந்திடில் நாடெலாம் வெந்திடும் தீயினில்
நொந்தது நாய்நரி நுங்கிடில் நுண்செரு
வந்துநாய்ந ரிக்குண வாம்வை யகமே
எண்ணிலா ஞானி யுடல்எரி தாவிடில்
அண்ணல்தன் கோயில் அழலிட்ட தாங்கொக்கும்
மண்ணில் மழைவிழா வையகம் பஞ்சமாம்
எண்ணரு மன்னர் இழப்பர் அரசே
ஞானியரின் உடலை புதைக்காமல் நிலத்தின் மேல் கேட்பாரற்று அழிந்துப் போக விட்டாலும் அந்த நாட்டில் மழை பொய்த்து, பெரும் பஞ்சம் ஏற்படுமாம். அரசனும் தன் பதவி இழப்பான் என்கிறார்.
எனவே ஞானியரின் உடலை சமாதி கிரியை என்னும் சடங்குகளின் படி புதைத்து விடுவதே உத்தமம் . இந்த சமாதிகளை அமைப்பதற்கான இடங்களை தேர்ந்தெடுப்பது பற்றியும் திருமூலரின் பாடல்களில் குறிப்புகள் காணக் கிடைக்கின்றன.
தன்மனை சாலை குளங்கரை யாற்றிடை
நன்மலர்ச் சோலை நகரில்நற் பூமி
உன்னருங் கானம் உயர்ந்த மலைச்சாரல்
இந்நிலந் தான்குகைக் கெய்தும் இடமே
வீட்டின் அருகில், நடைபாதை, குளக் கரை, ஆற்றின் நடுப்படுகை, மலர்கள் பூத்துக் குலுங்கும் பசுஞ் சோலை, நகரின் மத்தியில் நல்லதோர் இடம், அடர்ந்த காடுகள், மலைச் சாரல் போன்ற இடங்களில் ஜீவ சமாதி அமைக்க உகந்த இடங்கள் என்கிறார் திருமூலர்.
எல்லாம் சரிதான், இப்போது எப்படி குழி தோண்டுவது?, அதில் ஞானியரின் உடலை எப்படி இருத்துவது?
விவரங்கள் நாளைய பதிவில்.....
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment



7 comments:
சுவாரஸ்யம் கூடுகிறது, காத்திருக்கிறேன் அடுத்த பாகத்திற்கு ..!
miga arumayana pathivu
arumaiyaana thagaval... :)
awaiting for tomorrow;s pathivu
this is im expacting online, im long time searching this type of website.
thanks
very nice.
good
Post a Comment