சித்தர்கள், யோகிகள், ஞானிகள் போன்ற உயர் தவநெறியாளர்களின் உடலை அடக்கம் செய்வித்த இடமே ஜீவசமாதி என பொதுவாக அழைக்கப்படுகிறது. இந்து ஞான மரபில் இந்த ஜீவ சமாதிகள் கோவில்களுக்கு இணையான புனிதத் தன்மை உடையவையாக கருதப் படுகிறது. நம்மில் பலரும் ஜீவ சமாதி என்றால் ஞானியரை உயிருடன் புதைக்கப் படுதல் என்றே நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அது மிகவும் தவறான கருத்து என்கிறார் திருமூலர்.
ஜீவசமாதிகள் அமைந்திருக்கும் இடத்திற்குச் சென்றால் அனைத்தையும் மறந்த ஏகாந்த உணர்வு உண்டாகிறது. மனம் அமைதியில் திளைக்கிறது. சிலிர்ப்பூட்டும் அதிர்வலைகளை உணர முடிகிறது. நோயுற்றவர்களின் நோய் தீருகிறது. வேண்டுதல் நிறைவேறுகிறது. வாழ்வில் மாற்றம் உண்டாகிறது என பலரின் பல விதமான அனுபவங்களை கேட்டிருப்போம். இத்தனை சிறப்புக்களை தன்னகத்தே கொண்டிருக்கும் ஜீவசமாதியின் தத்துவம் மற்றும் அதன் அடியாதாரங்களை பகிர்வதே இந்தக் குறுந்தொடரின் நோக்கம்.
ஞானியர் மேலான தவம் மற்றும் கடுமையான ஒழுக்க நெறிகளை பின்பற்றுவதன் மூலம் தமது உடலையும், உயிரினையும் தூய்மையாக பேணி வருகிறவர்கள். இன்னும் தீர்க்கமாய் சொல்ல வேண்டுமெனில் உடலையும், உயிரையும் புனிதமான கோவிலைப் போல கருதி தனித்துவமான வாழ்வியல் கூறுகளை அனுசரிக்கிறவர்கள். இத்தகைய மேன் மக்கள், இந்த உலக வாழ்க்கையில் தங்களுடைய கடமைகள் முழுமை அடைந்ததாக கருதும் நிலையில் தம்மை இறைவனோடு ஐக்கியப்படுத்திக் கொள்கிறார்கள்.
இந்த நிலையில் அவர்களின் உடல் இயக்கமும், மன இயக்கமும் நின்று விட்டிருப்பினும், உயிர் மட்டும் உடலை விட்டு பிரியாதிருக்கும் என்கிறார் திருமூலர். இத்தகைய நிலையே ஜீவ சமாதி என்கிறார். ஜீவ சமாதி என்பதை ஜீவன் + சமம் + ஆதி. அதாவது ஆன்மா தனது ஆதி வடிவத்திற்கு சமனாக உயர்வது என பொருள் கொள்ளலாம். இந்த உயரிய நிலையில் ஞானியரின் உடல் என்றும் கெடாமல் இருக்குமாம்.
இப்படி ஆதிக்கு சமன் ஆகி விட்ட ஞானிகளை இறைவனாகவே கருத வேண்டும் என்றும், அத்தகைய மேன் மக்களை அவரின் சீடர்களின் உதவியோடு பிரத்தியேகமான சடங்குகளை செய்வித்து அவர்களின் உடலை சமாதி செய்ய வேண்டும் என்கிறார் திருமூலர். இவ்வகை சடங்கிற்கு "சமாதிக் கிரியை" என்று பெயர். இந்த சடங்கு விவரங்களை தனது திருமந்திரத்தில் விரிவாகவே கூறியிருக்கிறார்.
அவற்றை நாளைய பதிவில் பார்ப்போம்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment



17 comments:
அருமையான விளக்கம் ..!
arumayana thagaval tholi
தோழி சமாதிகளில் எத்தனை விதமான வகை உண்டு ?
You are correct Thozhi in our place Rajapalayam a lot of Jeeva Samadhi is there we will give the list in details if need.
நல்ல தகவல் தோழி அவர்களே
மிக அரூமையான பதிவு
@ArumugaPL. LIST OUT JEEVA SAMATHI AT YOUR AREA .SO THAT WE CAN VISIT THERE
@srini srirangamThanks the follwoing
Gurunathar swamy-Ambalapuli Bazaar,
Karuppagnaniar&Ponnappa Gnaniar South Vaithiyanathapurm(already telecast in Sun TV Nijangal),
Sivakami Gnaniar Ambalapuli Bazaar,
Kombusamy&Veliyangiri Swamy in Thoppupatti St,
Poona samy PACR Salai all these Jeeva Samathi is within lessthan 1000 mtr radius. There are still more will continue next
THANK U MR.ARUMUGHA.I VISITED SADHURAGIRI SEVERAL TIMES. I TRY TO VISIT THESE PLACES. THOZHI ALSO WROTE JEEVA SAMATHIS AT SADURAGIRI. DO U KNOW OR VISITED THAT?
தோழி ,
ஜீவ சமாதி குறித்து தங்களின் தொடக்க பதிவு நன்றாக உள்ளது.மிக்க நன்றி .
மிகவும் நன்று......
கோவையில் உள்ள ஜீவ சமாதிகள் பற்றி அறிய
http://spiritualcbe.blogspot.in
thanks ma... wonderful news...
Thanks for the info Saravanakumar
i would like to see the smathi
chathurakalli plant : any body can help me to see the plant
murugan.M
my sister please explain kogan kuligai my id elavarasan.d1@gmail.com
thanks for this wonderful truth information
Post a Comment