சாயா புருஷ தரிசனம்.... தொடர்ச்சி!

Author: தோழி / Labels: ,


சாய புருஷ தரிசனம் பெறுவது பற்றிய தகவல்களை முந்தைய பதிவில் பார்த்தோம். 

போகர் தனது “போகர் 7000” நூலில் இது குறித்து விரிவாகவே கூறியிருக்கிறார். மேலும் இந்த தரிசனத்தை எளிதில் பெற உதவும் மை ஒன்றினை தயாரிக்கும் முறையினையும் அருளியிருக்கிறார்.இந்த மை குறித்து சொல்ல வரும் வேளையில் இதனை தனக்கு காலங்கி நாதர் உபதேசித்ததாக குறிப்பிடுகிறார்.

பாரேதான் சரநூலாம் பஞ்சபட்சி
     பாரினிலே மாணாக்கள் பிழைக்கஎன்று 
நேரேதான் சாத்திரத்தை பாடிவைத்தார்
     நீதியுடன் சாயாவின் தரிசனத்தை
சேரேதான் தரிசனத்தைக் காண்பதற்கு
     செம்மலுடன் வழிசொன்னார் மைதான்இல்லை
கூரேதான் மையினது மார்க்கம்தன்னை
     கூறினேன் காலங்கி கடாட்சந்தானே.

தானான சித்துமுனி கும்பயோனி
     தாரணியில் கருவுதனை மறைத்தும்போட்டார்
மானான காலங்கி எந்தன்நாதர்
     மகாதேவர் கடாட்சமது கிருபையாலே
தேனான கருக்குருவை யானும்கற்று
     தெளிவாக மாணாக்கர் பிழைக்கஎன்று
பானான சாஸ்திரங்கள் யாவும்பார்த்து
     பாருலகில் பாலகர்க்குப் பாலித்தேனே.

சித்தர் பெருமக்கள் தமது சீடர்களுக்காக சரநூல், பஞ்ச பட்சி, சாயா தரிசனம் என்று பலவகையான சாத்திரங்களை அருளியிருந்தாலும், இந்த சாயா தரிசனத்தை எளிதாய் பெற உதவும் மை பற்றிய தகவல்களை சொல்லாது மறைத்து விட்டதாகவும், அதனை தான் கூறுவதாய் தனது நூலில் குறிப்பிடுகிறார். இதன் மூலம் இந்த மையின் மகத்துவத்தை உணரலாம். 

பாலிப்பேன் இன்னமொரு மார்க்கம்கேளும்
     பாங்கான புலிப்பாணி மைந்தாகேளு
நீலியென்ற கருங்காலி மூலிதானும்
     நீட்சியுடன் கண்ணனுட மூலிவேரும்
சூலியென்ற நத்தையின் சூரியப்பா
     சூரியனார் காந்தியது மூலிவேரும்
வேலியென்ற பருத்தியப்பா இருவேலிதானும்
     வேகமுள்ள கருப்பு ஊமத்தைவேரே.

வேரான சடையனது மூலிதானும்
     வேகமுடன் பொன்னின் ஊமத்தைவேரும்
தூரான மையூரின் சிகையும்கூட்டி
     துப்புரவாய்த் தான்சுருக்கிப் பொடியதாக்கி
சேரான பொடிதனிலே ஐங்கோலத்தைச்
     செப்பமுடன் தான்உரைத்துச் சொல்லக்கேளு
கூரான புழுகுரோசனை யும்சேர்த்து
     குறிப்புடனே மைசேர்த்து அரைத்திடாயே.

சேர்த்துமே பேரண்டந் தன்னில்அப்பா
     செம்மலுடன் மையதனைப் பிடித்துக்கொண்டு
கோர்த்துமே குமரியுடமையும் கூட்டி
     கொற்றவனே தான்அரைத்துச் சிமிளில்வைத்து
பார்த்துமே நேத்திரமாம் புருவந்தன்னில்
     பாலகனே மைதீட்டி ஆகாயத்தை
தீர்த்துமே பார்க்கின்ற காலம்தன்னில்
     திறமுடனே தரிசனமும் தெரியும்தானே.

தானான சூரியனை மேகம்தானும்
     சட்டமுடன் மேகமது மறைந்திட்டாலும்
பானான மேகமதுக் குள்ளிருக்கும்
     பாலகனே சூரியனும் கண்ணில்தோற்றும்
மானான சந்திரனைக் காணும்போது
     மகத்தான தரிசனையும் கண்ணில்தோற்றும்
தேனானதே சொளிவின் மயத்தைப்போல
    ஜெகசோதி மின்னல்போல் தோற்றும்பாரே.

பாரேதான் மையினால் மேகசாலம்
     பாங்குடனே கரிசனையும் காணலாகும்
நேரேதான் இக்கருவை சித்தர்தானும்
     நெறிமுறைமை தான்அறிந்து கூறாமல்தான்
சீரேதான் கருக்குருவை மறைத்துவிட்டு
     சீர்தப்பித் தெரிசனத்தைப் பாடிவைத்தார்
ஆரோதான் எனைப்போல் சொன்னாராப்பா
     அப்பனே உண்மையது உரைத்திட்டோமே.

கருங்காலி, கண்ணை மூலிவேர், நத்தை சூரி, சூரிய காந்தி வேர், வேலிப்பருத்தி, கருஊமத்தை வேர், பொன்னூமத்தை வேர், மையூர் சிகை ஆகியவைகளை சம அளவில் எடுத்து சிறுதுண்டுகளாக நறுக்கி பொடியாக செய்து கொள்ள வேண்டுமாம். 

இந்த பொடியுடன் ஐங்கோல கருவும் சேர்த்து உரைத்து, அத்துடன் புனுகும் கோரோசனையும் சம அளவில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டுமாம். இந்த கலவையுடன் ஏரண்டதைலமும், குமரி மையும் சேர்த்து கல்வத்தில் இட்டு கடைந்து எடுத்து அதனை சிமிழில் சேகரம் செய்து கொள்ளக் கூறுகிறார்.

சாயா புருஷ தரிசனம் பெற வேண்டிய வேளைகளில் இந்த மையை எடுத்து புருவ மத்தியில் திலகமாக தீட்டிக் கொண்டு நிழலை நன்றாக உற்று பார்த்து பின்னர் அப்படியே தலையை மேலே நிமிர்த்தி சுத்த நீல ஆகாயத்தை பார்த்தால் சாயா புருஷ தரிசனத்தை எளிதாகப் பெறலாம் என்கிறார்.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

6 comments:

நாடி நாடி நரசிங்கா! said...

NICE:)

நாடி நாடி நரசிங்கா! said...

NICE:)

murugadas said...

வழுக்கை தலைக்கு ஈதேனும் தீர்வு குடுங்கள் தோழி

jana said...

nalla thagaval

tamilvirumbi said...

தோழி ,
தாங்கள் கூறிய எளிய முறை ,அனைவருக்கும் சாத்தியமே. மிக்க நன்றி .

MK Maran said...

Its really a great site to know about our traditional information including health, cook,sidharkal.

I appreciate you for spending the time to create these articles. You are doing great service by digitalizing the information.

I have placed your site on my web directory with a image. I am one of the Bhokar devotee and I created the image using by senthuram, viragu kari and outlined by ballpoint pen. The small sivalingam inside the image from some magazine.

You can view that page at:

Sidharkal Rajyam - SubmitLinkURL

Thank you Thozhi!

Post a Comment