இந்திர சால ஞானம்48 - மின்னூல்.

Author: தோழி / Labels:


நண்பர்களே,

மிகவும் பழமையான சித்தர்களின் அரிய நூல்களை மின் நூலாக தொகுத்திடும் தொடர் முயற்சியில், பதினைந்தாவது படைப்பாக காலங்கிநாதர் அருளிய ”இந்திர சால ஞானம் 48” என்ற நூலை மின் நூலாக்கி இருக்கிறேன்.

காலங்கி நாதர் திருமூலரின் சீடர்களில் முக்கியமானவராக கருதப் படுகிறார். சொல்வதை விட கேட்பதே சிறந்தது என்ற கோட்பாட்டைக் கொண்டவர். அதனால் பல்வேறு சித்தர் பெருமக்களை தேடிச் சென்று பலதகவல்களை அறிந்தவர் என்று கூறப் படுகிறது. இவர் காஞ்சியம்பதியில் சமாதியடைந்ததாக ஒரு கருத்து நிலவுகிறது.

பதினெண் சித்தரிகளிடம் தான் கற்றறிந்தவை பற்றி காலங்கி நாதரரே பின் வருமாறு விளக்குகிறார்.

"கேளடா முக்காலும் பேச்சுப்பேசக்
கேசரமாய்ச் சரமடக்கப் பேசலாமோ
நாளடா முப்பதி ரண்டே நாளில்
நானிருந்தேன் பதினெண்பேர் பேச்சைக்கேட்டு
வேளடா மன்மதன்றன் ரூபங்கண்டு
விடமென்று உட்கொண்டு பார்த்துக்கொண்டேன்
கோளடா ஒன்றுமில்லை யில்லைபாரு
கூச்சமற்றுப் பேச்சுக்கால் காணலாமே."

குண்டலினி யோகத்தில் தேர்ந்து தெளிந்ததனால் காலங்கிநாதருக்கு கமலமுனி என்றொரு பெயரும் உண்டு என்பது போன்ற பல புதிய தகவல்கள் இந்த நூலில் உள்ளது. போகருக்கு புவனபதி சக்கரம் பற்றிய விளக்கத்தினை தான் சொன்னதாகவும் அதனை போகர் தனது போகர் 700 என்னும் நூலில் தெளிவாக பாடிவைத்திருக்கிறார் என்கிற தகவல் ஆச்சர்யமான ஒன்று.

மேலும் போகருடன் சிலகாலம் தங்கியிருந்த போது அவர் தனக்கும், கொங்கணவருக்கும் சரக்கு கட்டும் வகைகளையும், அவனாசி நுனிமூலம், மாணிமூலம், போன்றவைகளை கற்பித்த விவரங்களும் இந்த நூலில் இடம் பெற்றிருக்கிறது.

தமிழ் அறிந்த அனைவரும் இத்தகைய பெருமை வாய்ந்த நூலின் விவரங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்கிற நோக்கில் மின் நூலாக தொகுத்திருக்கிறேன். இத்தகைய முயற்சிகளின் வெற்றி என்பது இத்தகைய நூல்கள் எத்தனை பேரைச் சென்று அடைகிறது என்பதில்தான் இருக்கிறது. எனவே தயவு செய்து இந்த மின் நூலினை பார்வையிடும் நண்பர்கள் அறிந்தவர், தெரிந்தவர் என்கிற பாகுபாடு இல்லாமல் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

தொடரும் உங்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும், மேலான ஆலோசனைகளுக்கும் நன்றிகள் பல...

மேலான எனது குருவினை பணிந்து இந்த நூலை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

"காலங்கிநாதர் அருளிய இந்திர சால ஞானம் 48" மின்னூலைத் தரவிறக்க..


என்றும் நட்புடன்,

தோழி..
www.siththarkal.com



சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

10 comments:

arul said...

pagirvukku nandri

revathy said...

mam,
in poet form messages many peoples cant understand.please kindly give us with explanation.what ever u given simple explnations i am following.ex.eanthiram,simple manthiram etc.vallai amman poojai also i cant do,because i cant understand anything in poet form.please mam give simple explanations ,so that i can follow. dont get angry mam.
S.Revathy M.Pharmacy
vijayawada

tamilvirumbi said...

தோழி ,
தாங்கள் செய்யும் சீரிய பணிக்கு என்றென்றும் தலை வணங்குகிறேன் . மிக்க நன்றி.

Remanthi said...

:)

LAV said...

solla vaarthai ellai. thangal pani thodara vazhthukkal. LAV

மதுரை சரவணன் said...

nalla muyarchchi thotarattum..

kabilan siva said...

நான் இந்த தளத்திற்கு புதியவன், ஆதலால் தாங்கள் ஏத்தனை மின் நூல் தொகுத்து உள்ளிர்கள் என்றும் அதனுடைய இணைபையும் தனியே பகிர்ந்தால் நன்றாக இருக்கும்... மின் நூலின் பகிர்வு இணைப்புக்காக கதிருகுறேன்...

chandra shekaran said...

best wishes

Gokul Pong said...

Thank you for such a wonderful job...it useful for all younger generation, but one small request for u...we can read only that siddhar songs, you give the meaning of song it useful to everyone...

Thanks
Gokul...

Gokul Pong said...

fantastic work you are doing..

Post a Comment