குழந்தைப் பேறு!.... தன்வந்திரியின் தீர்வு!!

Author: தோழி / Labels: ,


திருமணமான தம்பதியரிடம் இருந்து நமது சமூகம் எதிர்பார்க்கும் முதல் தகவல் குழந்தைப் பேறு பற்றியதாகவே இருக்கிறது. இது கொஞ்சம் தள்ளிப் போனாலும் கூட அந்த தம்பதியர் எதிர் கொள்ளும் மன அழுத்தமும், கவலையும் சொல்லி மாளாது. தற்போதைய நவீன அலோபதி மருத்துவம் பல தீர்வுகளை முன் வைத்தாலும் கூட அவை செலவு பிடிப்பனவாக இருக்கிறது.

சித்த மருத்துவத்தில் இதற்கு பல தீர்வுகளை சித்தர் பெருமக்கள் அருளியிருக்கின்றனர். அவற்றை தொடர்ச்சியாக பதிவுகளின் ஊடே பகிர்ந்து வருகிறேன். அந்த வரிசையில் இன்று தன்வந்திரி அருளிய வைத்திய முறை ஒன்றினை பார்ப்போம். தன்வந்திரி வைத்திய காவியம் என்னும் நூலில் இந்த முறை அருளப் பட்டிருக்கிறது. 

வாறான மங்கையர்கள் கெற்பமாக
      வறையுறேன் பசும்பாலும் வசம்புதானும்
நீறான விழுதியிலை மூலிதானும்
       நிலையான குப்பமேனி சமனாய்க்கூட்டி
காறான பால்தனிலே குழப்பியேதான்
       கனமாக விருவேளை கொண்டாயானால்
சேறான கிருமியது அற்றுப்போகும்
       செனிக்குமே பிள்ளையது செனிக்கும்பாரே.


செனிக்குமது பிள்ளையது பிறக்கும்பாரு
       தெளிவாகும் திரேகமது சொலிக்கும்பாரு
கனிக்குமே யிந்தமுறை பொய்யாதையா
       காசினியி லாருந்தான் சொல்லமாட்டார்
வனிக்குமே முறையோடே செய்தாயானால்
       மகாகோடி புண்ணியங்க ளெய்தும்பாரு
பனிக்குமே யிக்காவிய மதீதவித்தைப்
       பாடினேன் தன்வந்திரி பாடினேனே.

பசும்பால், வசம்பு, விழுதியிலை, குப்பைமேனி இவைகளை சம அளவாக சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டுமாம். பின்னர் இந்தக் கலவையை பசுப்பாலில் கலந்து காலை, மாலை என இருவேளை உட்கொண்டு வர, கர்ப்ப கிருமிகள் நீங்கி குழந்தைப்பேறு உண்டாகும் என்கிறார். 

இப்படி பிறக்கும் குழந்தையின் உடல் பொலிவாக இருப்பதுடன், சிறந்த புத்திசாலியாகவும் இருக்குமாம். மிகவும் அரிதான இந்த முறையை மற்றவர்கள் மறைத்து வைப்பார்கள் என்றும், தான் இதை பொதுவில் வைப்பதாகவும் கூறுகிறார்.

தேவையுள்ளோர் தகுதியான சித்த மருத்துவரின் ஆலோசனை பெற்று, இந்த முறையினை பயன்படுத்தி தீர்வு காணலாம். மற்றவர்கள் தேவையுள்ளோருக்கு இந்த தகவலை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

12 comments:

revathy said...

thank you mam.it is very useful to me.when you are giving tamil drugs name please add the botanical name of the drugs.why i am asking means,some of the peoples are staying out of the tamil nadu.so it is easy to get those who are staying out of tamilnadu.it is my request mam.
s.Revathy M.Pharmacy
vijayawada
9701086905

revathy said...

mam it is very useful to me mam.thank u so much.
s.revathy
vijayawada
9701086905

149 said...

நன்றி

தீனதயாள்ன்

Rathnavel said...

அருமையான தகவல்கள்.
வாழ்த்துகள்.

mathavan said...

@revathy

arul said...

thanks a lot

kimu said...

thank you - thozi.

check in this link:

http://www.logayurveda.com/plant-profiles/199-phyllanthus-fraternus.html

Sanskrit : Mahidhitriki, Bhhumyimalaki, Bahuphali
Assamese : Bhuin Amla
Bengali : Bhumamla, Bhumi amalaki
English : --
Gujrati : Bhoi Amali, Bhony amari, Bhonyamali
Hindi : Bhui Amala
Kannada : Nelanelli
Kashmiri : Kath
Malayalam : Kizanelli, Keezhanelli, Ajjhada
Marathi : Bhuiawali
Oriya : Bhuin Amla
Punjabi : Lodhar
Tamil : Kizhukai nelli, Kizanelli
Telugu : Nela usirika

narayananbalamoorthy said...

super...........continue

பாலா said...

இன்று பிறந்த நாள் காணும் எங்களது மரியாதைக்குரிய தோழி அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் .....

tamilvirumbi said...

தங்களது அறிய பகிர்வு போற்றுதலுக்கு உரியது .ஆனால் ,தற்போது ,பெண்களால் ஏற்படும் பிரச்னை குறைவு .ஆண்களால் ,பிரச்னை அதிகம்.மிக்க நன்றி .

mahadevan said...

irudaya adaipai neekka nalla marunthu sollavum

ar.sarathi said...

good information mam

Post a Comment