ஹோமம் - நிறைவாய் சில விளக்கங்கள்!
Author: தோழி / Labels: யாகம்பத்தியுள்ள புலத்தியனே சொல்லக்கேளு
பேணவே ஓமகுண்டம் சிறப்பாய்ச் செய்து
நலமான அக்கினியை லரசால்செய்து
பூணவே புவனையுட மந்திரந்தன்னால்
புத்தியுடன் பலாசுகொண் டோமாமம்பண்ணு
வீரப்பாயு ன்னைபிடித்த நோய்களோடு
வெகுநூறு பிணிகளெல்லாம் விலகுந்தானே"
- அகத்தியர் -
அப்பனே நெய்தனிலே அருகுதோய்த்து
தெரிந்தந்த ஓமகுண்டந் தன்னில்மைந்தா
சிறப்பான ஓமமது தீர்க்கமாக
வருந்திநன்றாய் மண்டலமே செய்தாயாகில்
மகத்தான பிரமமய மாவாய்பாரு
இருந்துரெண்டு மண்டலமே ஓமஞ்செய்தால்
என்னசொல்வேன் முன்னூறு வயதாம்பாரே"
- அகத்தியர் -
"காணவே யின்னமொரு சூட்சங்கேளு
கருணையுட னுலகத்தோ டிருக்கும்போது
பூணவே கண்ணாரக் கண்டபாவம்
புத்தியுடன் மனதாரச் செய்தபாவம்
பேணவே காதாரக் கேட்டபாவம்
பெண்வகைகள் கோவதைகள் செய்தபாவம்
ஊணவே பலவுயிரைக் கொன்ற பாவம்
ஒருகோடி பாவமெல்லா மொழியக்கேளே"
- அகத்தியர் -
உனக்குறுதி சொல்லுகிறே னுண்மையாக
வழியாக ஓமகுண்டம் நன்றாய்ச்செய்து
சுழிவாக ஆலரசு சமுத்துதன்னால்
சுத்தமுட னக்கினியை வளர்த்துமைந்தா
தெளிவாகச் சொல்லுகிறேன் நன்றாயக்கேளு
மார்க்கமுடன் புவனையுட மந்திரந்தன்னால்
சிவசிவா நவதானியங்கொண் டோமஞ்செய்யே"
- அகத்தியர் -
"நீசெய்யடா சிறந்தஓமமது தீர்க்கமாக
தீராத பாவமெல்லாந் தீருந்தீரும்
மெய்யடா பிரமையொடு சகலரோகம்
விட்டுவிடும் யெக்கியஓ மங்கள்செய்தால்
மய்யமென்ற புருவநடு உச்சிமீதில்
மகத்தான கற்பூர தீபந்தன்னால்
அய்யனே உனதுடைய சமூகங்கண்டால்
அனுதினமுஞ் செல்வபதி யாவான்பாரே"
- அகத்தியர் -
யாரிந்த புவனை?,அகத்தியர் அருளிய புவனையின் அருளைப் பெறும் ஹோமம்!
Author: தோழி / Labels: அகத்தியர், யாகம்அத்தகைய ஹோமம் பற்றி அகத்தியர் பின்வருமாறு கூறுகிறார்.
"பாரப்பா யின்னமொரு பாகங்கேளு
பத்தியுடன் கோதுமைகொண் டோமம்பண்ண
வீரப்பா கொண்டதொரு அபமிருத்து
மெஞ்ஞான பூரணத்தால் விலகும்பாரே
நேரப்பா அபமிருத்து விலகித்தானால்
நினைத்தபடி முடிக்கவண்ணம் நிசந்தான்பாரு
காரப்பா கருணைவளறர் புவனைதன்னால்
கண்காண இன்னம்வெகு கடாட்சமே"
- அகத்தியர் -
"ஆமப்பா நெற்பொரியுந் தேனுங்கூட்டி
தானென்ற டோமமது அன்பாய்ச்செய்தால்
நாமப்பா சொல்லுகிறோ முன்னூருண்டு
நன்மையுடன் தானிருப்பாய் நயனம்பாரு
தாமப்பா நயனமென்ற தீபந்தன்னை
சதாகாலம் பூரணமாய்த் தானேகண்டால்
வாமப்பால் மந்திரகலை வாமபோதம்
வாமம்வளர் புவனையைநீ மகிழ்ந்துகாணே"
- அகத்தியர் -
சித்ததான சித்துகளுக் குறுதியான
சிவசிவா புவனைதிரு மந்திரந்தன்னை
பத்தாசை வைத்து மன துறுதிகொண்டு
பாலுடன் சந்தனமொடு தேனுங்கூட்டி
சுத்தான மனம்நிறுத்தி யேகமாகி
கருத்தாய்நீயும் சிறப்புட னோமம்பண்ண
வத்தாத பாக்கியசந் தான பாக்கியம்
வளருமடா ஒன்றுபத்தாய் மனங்கண்டாயே.
- அகத்தியர் -
"காணவே இன்னமொரு கருமானங்கேள்
கருணைவளர் புலத்தியனே கருணை கூர்ந்து
பேணவே ஓமகுண்டம் நன்றாய்ச் செய்து
பிலமான அக்கினியை லரசால்செய்து
பூணவே புவனையுட மந்திரந்தன்னால்
புத்தியுடன் எள்ப்பொரிகொண் டோமாமம்பண்ணு
தோணவே கிரகமதில் நின்றதோஷந்
சுத்தமுட நீக்குமடா நித்தம்பாரே"
- அகத்தியர் -
"தானான தீபமடா மந்திரபீடம்
சராசரத்துக் குயிரான மந்திரபீடம்
வானான அண்டமடா மந்திரபீடம்
மகத்தான ரவிமதியு மந்திரபீடம்
சிவாயகுரு பீடமென்ற பீடங்கள்போடே"
- அகத்தியர் -
ஹோம குண்டங்களை ஆறு வகையாக பார்த்தோம் அவையாவன...






"நாளப்பா சமுத்துவகை சொல்லக் கேளு
நலமான அரசினொடு மாவின் சுப்பி
சுப்பென்ற மாவினோடு அத்திக் கொம்பு
சொல்வெட்டி வேர் விளாமிச்சியோடு
ஆப்பென்ற ஆலுடன்மல்லிகையின் சுப்பி
அப்பனே நெல்லிசுப்பி நாவல் சுப்பி
சுப்பென்ர அத்தி சுப்பி யிலுப்பை சுப்பி
கண்மணியே பேயத்திச் சுப்பியோடு
நப்பென்ற கடுகுரோ கணியும் கூட
நலமான எருக்கினோடு கள்ளிக்கொம்பே"
- புலிப்பாணிச் சித்தர் -
"கேளப்பா மாவிலங்கு விளாஅத்தி நொச்சி
கெடியான அரசுடனே வில்வம் யெட்டி
வாளப்பா மாச்சுப்பி இதுவெட்டும்
வளமான எரிதுரும்பாம் அசுராளண்டர்
நாளப்பா துட்டகண பூதமெல்லாம்
நாடாது ஓமத்தில் வலுத்த சித்தி
மூளப்பா செபஞ்செய்து ஓம்சாந்தியென்றே
தீர்க்கமாம் ஓமத்தில் போடு போடே"
- அகத்தியர் -
ஹோமங்களின் அறிவியல் தொடர்ச்சி...
Author: தோழி / Labels: யாகம்சித்தர் பாடல்களில் ஹோமம்!
Author: தோழி / Labels: யாகம்வேள்வி, ஹோமம், யாகம் - ஓர் அறிமுகம்!
Author: தோழி / Labels: யாகம்அகத்தியரின் பாய்ச்சிகை ஆரூடம் - 6,3,1 முதல் 6,6,6 வரையிலான பலன்களும், மின்னூலும்!.
Author: தோழி / Labels: அகத்தியர், ஆரூடம், ஜோதிடம், மின் நூல்6,3,1.
பெருகிடும் குடும்பந் தன்னில் வறுமையே மிகவுண்டாச்சு
குரும்பர்கள் கலகமாச்சு கோளாறு மூன்றோன்றாச்சு
உரிமையாய் செயவியாபாரம் உனக்கிப்போ நஷ்டமாச்சு
பொருளது அழிவதற்கு பொல்லாத பிணியுண்டாச்சு
6,3,2.
ஆச்சப்பா நல்லகாலம் அப்பனே வருகலாச்சு
தாஷிதானில்லையாறும் தனிமூன்றும்ரெண்டும் வீழ்ந்தால்
போச்சப்பா கவலையெல்லாம் போனெதோர் பொருளும்சேரும்
மாஷியாய் வாழ்வாய் நீதான் மக்களை பெற்றுகந்தே
அந்தோவுன் கிரகமெல்லாம் ஆச்சுதுநீசமாக
சந்தோஷம் மழியாமலாகும் தனித்தாறு மிருமுன்றுமானால்
நிந்தைகள் மிகவுண்டாகும் நிஷ்கடூரக்காரனாகும்
வந்தநோய் வைத்தங்காட்டும் வலிசண்டை பலவுண்டாமே.
6,3,6.
புலவித கவலைவேண்டாம் பகர்ந்தாறும் மூன்றாறானால்
நலமது மிகவேயுண்டு நம்பியதெல்லாம் லாபம்
கலகங் ளொழிந்து போகும் கங்கண ப்ராப்தமாகும்
வலப்பக்க மச்சம்காணும் வர்த்தகம் விர்த்தியாமே.
விர்த்தியாய் நிலஞ்செழிக்கும் நீரதுசுரக்கும் கேணி
தற்போது ஈராறொன்றால் தழைத்துமே செழித்துவாழ்வாய்
அற்பமாய் நினைத்திடாதே அகஸ்தியா வாக்கியத்தை
சொற்படி யெல்லாம் நடக்கும் சுடடிராளி முருகன்சாக்ஷி.
6,6,2.
சாக்ஷியே சாதிப்பாகும் சங்கடம் மிகவேநேரும்
சூக்ஷியாய் துரோகம் செய்வர் ஈறாதுமிரண்டும் விழ
மாகடஷிசேர் தொழிலும் போகும் மக்கட்கு பீடைகாட்டும்
ஆக்ஷியாய் எல்லாம் நஷ்டம் அகஸ்தியருரைத்தவாக்கே.
6,6,3.
வாக்கது தப்பாதப்பா விழுந்த நீராறுமூன்றும்
போக்கிய தொழிலும் செல்வம் ஜீவனும் வந்துசேரும்
பாக்கியம் மிகவும் பெற்று பலவித மேன்மையாவாய்
நோக்குவாய் மூதோர்வாக்கை நம்பி நீ வாழ்குவாயே.
6,6,6.
வாழ்வைக் கெடுக்க வேதான் வங்சகர் கூடஞ்சேரும்
தாழ்வுகள் மிகவேநேரும் தனிவுள மூவாறானால்
சூழ்வினையாலே உந்தன் செல்வாக்கு மழிந்துபோகும்
பாழ்பட கிரகமெல்லாம் பகையாச்சு அஞ்சிடாதே.
அகத்தியரின் பாய்ச்சிகை ஆரூடம் - 6,1,1 முதல் 6,2,6 வரையிலான பலன்கள்..
Author: தோழி / Labels: அகத்தியர், ஆரூடம், ஜோதிடம்6,1,1.
கூடுமென்றே நினைத்து குதூகல மடைந்திடாதே
நாடிய வாறீரென்றும் நஷ்டமேயாகுமப்பா
பாடுபட்டே நீ சேர்த்த பொருளது ஒழியுமப்பா
வாடிடவேண்டா மின்னும் வாரமிரெண்டேக வேணும்.
6,1,2.
வேணமென்றே நீ செய்யும் வேலையில் லாபமுண்டாம்
பூணுமாரொன்றும் ரெண்டும் புகழுறவிந்தாலே
தோணுமே பலிக்குமெண்ணம் தொந்தார்த்தமொழிந்து போகும்
காணுவாயிதனினுண்மை கந்தனின் கருணையுண்டாம்.
6,1,3.
கருணையு முனக்குயேது கிரகங்களெல்லாம் தீது
ஆறு ஒன்றும் மூன்றும் விழ அதிர்ஷ்டமும் போச்சுதப்பா
பொருளது விரையமாகும் பொல்லாப்பு அதிகமாகும்
உருபடாதுந்தன் செய்தி ஒன்றுக்கும் மஞ்சிடாதே.
அஞ்சிடவேண்டாமப்பா ஆறும் ஒன்றாலும் வீழ்ந்தால்
வஞ்சகம பீடை நோயும் வறுமையும் ஒழிந்துபோகும்
துஞ்சவே தானியங்கள் துணைவரும் வந்து சேர்வார்
கொஞ்சநாள் போனதானால் கொடுக்கல்வாங்கலிலே லாபம்.
6,2,1.
பாங்கவே மனையும்மாடும் ஆறுரெண்டொன்றால் லாபம்
ஓங்குமே சிறுவர்கட்கு உயர்தரக் கல்வியெல்லாம்
பாங்குள மனையைவிட்டு பரதேசம் போனபேரும்
தேங்கிடா வந்தேசேர்வார் தீர்ந்திடும் உனது துன்பம்
6,2,2.
துன்பமே மிகவுண்டாகும் தொகுத்தாறு மீறிரெண்டால்
அன்பு பேரானால் அடுத்துமே பகையுமாவார்
நன்றி நீ செய்தபோது நலமொன்றும் ஏற்படாது
தன்மையுமழிந்து போகு தரித்திரனாக்குமாமே.
6,2,3.
ஆக்குமே தனவானாக ஆறிரெண்டு மூன்று வீந்தால்
போகுமே கவலையெல்லாம் பொன் பொருள் மிகவே சேரும்
தேக்குமே உனக்கு நன்மை தேகத்தின் பிணியும் நீங்கும்
நோக்குமே நன்மையாக நல்லதோர் கிரகமெல்லாம்.
6,2,6.
கிரகத்தின் கோளாறின்று காட்டிடும் கவலையாலே
உரமுள்ள ஆறும் ரெண்டும் உடனாறும் வீழ்ந்ததப்பா
பரபரப்பதிகமாகும் பாவியென்ற சுவர்கள்
சிறப்புடன் சிலநாள் போக சேமமே பெறுகுவாயே.
அகத்தியரின் பாய்ச்சிகை ஆரூடம் - 3,1,1 முத்ல் 3,6,6 வரையிலான பலன்கள்..
Author: தோழி / Labels: அகத்தியர், ஆரூடம், ஜோதிடம்அகத்தியர் அருளிய பாய்ச்சிகை ஆரூடத்தில் இன்று 3,1,1 முதல் 3,6,6 வரையிலான பலன்களைப் பார்ப்போம்.
3,1,1.
தெய்வீகத் தன்மையாலே தேர்ந்து நீயடைவாய் லாபம்
பையமூன்றிரொன்றாக பாலனே விழுந்ததாலே
வையகந்தனிலுனக்கு வாழ்விலே பின்னமில்லை
செய்யவே தொழிலுமோங்கும் தீர்க்கமாய் ஆயுளுண்டாம்.
ஆயுளும் அற்பமில்லை அவனியில் நன்மையில்லை
தோயமூன்றொன்று ரெண்டும் தொகுத்த தாலல்லாபமில்லை
சேயரும் பெண்டீருந்தன் சொல்தனை மதிப்பதில்லை
சகாயமு மொருவரில்லை சஞ்சலம் கொஞ்சநாளே.
3,1,3.
கொஞ்சவே மூன்றுமொன்றும் மூன்றுமே விழுந்ததாலே
சஞ்சலமொழிந்து போச்சு சகலமும் நன்மையாச்சு
வஞ்சகம் செய்தபேர்கள் வகையற்று ஒழியலாச்சு
அஞ்சாதே நீ செய்வதெல்லாம் அடைகுவாய் லாபந்தானே.
லாபமில்லை மூன்றொன்றாறில் நஷ்டமேயாகும்பாரில்
ஆபத்தும் சினேகராலேயாகிவிட மர்க்கமுண்டு
கோபத்தைக் கைக்கொள்ளாதே கொடுமைகள்மிகுமே
சோபிதம் குறைந்துபாரில் துன்பமும்மிகவுண்டாமே
3,2,1.
மிகமிக துயரங்காட்டும் மூன்றிரெண்டொன்றும் வந்தால்
பசுகமது ஒழிந்துபோகும் சொல்மொழி தவறலாகும்
கையதுமிகவே நேரும் பயங்கர நோயுண்டாகும்
வகையற்று பொருளிழந்து வறுமையால் வாடுவாயே.
வாடவே வேண்டாமப்பா வந்தது நல்லகாலம்
நீடவே மூன்றிரெண்டும் நிஷ்டூர மொழிந்து போகும்
தேடவேபோன ஜீவன் தெற்கெனும் திசையில்கிட்டும்
பாடலாமிதனை நம்பி பலன்பெற்று ஜீவிப்பாயே
ஜீவிய காலமெல்லாம் வறுமையால் வாடி நின்றாய்
பாவிகள் சிலபேராலே பலவித பொருளைத் தோற்றாய்
ஆவியை ஒழிப்பதற்கும் யோசிப்பார் கவனம் வைப்பாய்
சேவித்தே ஈசன் தன்னை ஜெகமதில் வாழ்வாய் முன்னே.
3,2,6.
முன்கால வினையிதென்று மூர்க்கமாய் திரியவேண்டாம்
உன்காலம் நல்லதாச்சு விழவும் மூன்றிரண்டுமாறும்
பின்னால் நீ வேணலாபப் பயிர்த்தொழில் செழித்துவோங்கும்
ஒன்றுக்கும் அஞ்சிடாதே ஒருவாரம் கழிந்திடாயே.
குழித்திடாய்யிரு மூன்றொன்றும் கருத்துடன் விழுந்ததால்
பத்தவர் பாழாய் போவார் இழித்தவர் இடர்க்குள்ளாவார்
செழிக்குமுன் குடும்பமப்பா சேரும் பொன் பூஷணங்கள்
அழித்ததோர் பொருளும் சேரும். அன்பு கொண்டிருந்திடவே.
கோண்டதோர் கவலையாலே குன்றியே வாடுகின்றாய்
இன்றிரு மூன்றும் ரெண்டும் வீழ்ந்ததால் பொருளும் நஷ்டம்
அண்டொணா துயர்க்குள்ளாக்கும் அபலமாய் எண்ணம்
கண்டாலும் விஷம் போல் பார்ப்பார் கஷ்டமும் துயர முண்டாம்.
3,3,3.
குண்டாலும் அஞ்சுவார்கள் கருத்துடன் முன்மூன்றானால்
விண்டாலும் சபைநடுங்க வேணவே தனமும் சேரும்
செண்டாலும் சிறுவராலே சீமான்போல் வாழ்வுண்டாகும்
கொண்டாடும் குலதெய்வங்கள் குதிகொள்ளும் உந்தனுக்கே.
3,3,6.
உந்தனின் கிரகமெல்லாம் வக்கரமாச்சுதப்பா
சொந்தமாய் தொழில் செய்தாலும் சோங்கியே போகுமப்பா
விந்தையாய் இருமூன்றாறும் வந்ததால் கவலையப்பா
சிந்தனை மிகவேநேரும் ஜீவன்கள் நஷ்டமாமே.
நஷ்டமே மிகவுண்டாகும் நலமில்லை மூன்றாரொன்றில்
இஷ்டம்போல் நடப்பாயானால் இடரது மிகவேநேரும்
கஷ்டமாம் குடும்பந்தன்னில் கைப்பொருள் விரையமாகும்
துஷ்டரால் துடுக்கும்நேரும் சலிப்பது அதிகமாகவே.
3,6,2.
அதிகமாய் கவலைவேண்டாம் அதிர்ஷ்டமுமுனக் குண்டாச்சு
பதிதனில் மிகவுமேன்மை பாக்கிய மடையப்போராய்
கதியென வடைந்தபேரை பாத்து ரஷிப்பாய் நீ தான்
நிதியுடன் ஏழைகட்கு நிகழ்த்துவாய் தர்மந்தன்னை.
3,6,3.
தன்னையே நோகச் செய்யும் தரித்திர திசையுண்டாகும்
பின்னும் மூன்றாறு மூன்றும் பிழையுற விழுந்ததாலே
ஒன்றுமே புலப்படாது உன்தொழில் பொருளும் நஷ்டம்
துன்பமாய் நோயுண்டாகும் துலைந்திடும் மாதமொன்றில்
ஒன்றுக்கு மஞ்சிடாதே ஒரு மூன்று யிராறானால்
நன்றப்பா நினைப்பதெல்லாம் நடந்திட ஜெயமேகாணும்
இன்றுடன் உனது பீடையிடர்களுமொழிந்து போச்சு
ஊன்மனைதனில் விவாகம் உறுதியாய் கூடும்பாரே.
அகத்தியரின் பாய்ச்சிகை ஆரூடம் - 2,1,1. முதல் 2,6,6. வரையிலான பலன்கள்..
Author: தோழி / Labels: அகத்தியர், ஆரூடம், ஜோதிடம்2,1,1.
செய்யவேயிரண்டு மொன்றும் சேர்ந்ததொன்று விழுமானால்
பையவே பொருளும்போகும் பயணமே போகொணாது
மெய்யதாய் கலகமாகும் மனைவி மக்களும் பகைப்பார்
ஐயமில்லாம லெண்ணம் அபலமாய் போகக்கூடும்.
2,1,2.
கூடுமேயெண்ணமெல்லாம் கூறும் ரெண்டொன்றும் ரெண்டும்
ஓடுமே வினையெல்லாம் உடன்பிறந்தோரால் நன்மை
தேடுமுன் கிடைக்குமப்பா தொழிலது நீடித்தோங்கும்
கோடுசொல் தவறிடாத கோமான் போல் வாழ்குவாயே.
2,1,3.
வாழநீ எத்தளித்தாய் வக்கரித்தானே கேது
தாழரெண்டொன்றும் மூன்றும் தடைப்பட வழுந்தபோது
சூழுமுன் குடும்பமின்று சுகங்கெட்டு சிதறிப்போகும்
கோழையாம் சில பேரால் குலக்கேடு வினையலாகுமே.
2,1,6.
விளையாது வெகுவாய் துன்பமிரண்டு ஒன்றாறுமானால்
பழைய நாள் வழக்கும் வெல்லும் பாவையும் கெர்பமாவாள்
தழைத்துமே குடும்பமோங்கும் தட்டாது உந்தன் வாக்கு
துலைந்திடும் கெண்டம் நோயும் துணையது உண்டு தெய்வம்.
2,2,1.
தெய்வத்தின் சகாயமுண்டு தென்புவி விருரெண்டான்றால்
வையகமீது துன்பம் வருந்திடா தனக்குயேதும்
செய்யவே தொலிலுமோங்கும் சந்தோச செய்தி தோன்றும்
பொய் சொல்லா புனிதனாக புவிதனில் வாழ்வாயன்றோ
அன்று நீ பாவம் அலைச்சலும் திரிச்சலாகும்
நன்றில்லை மூரெண்டானால் நயம் பேசி மோசம் செய்வார்
வென்றிடும் வழக்கானாலும் வகையற்று தோற்றுபோகும்
ஒன்றுமே பயன்படாது உருபடா முறையிதமே
2,2,3.
ஆமென விரண்டும் ரெண்டும் அடுத்தது மூன்றும் வீழ்ந்தால்
தாமதமாகா தெண்ணம் தழைத்திட செல்வமோங்கும்
போமென வெளியூர் போக பல தொழில் விர்த்தியாகும்
காமனை யெரித்தோன் மைந்தன் கந்தனும் துணையிருப்பான்
2,2,6.
துணையென நம்பிடாதே தொல்லையாம் பலபேர் நேசம்
இணைபுடனிருரெண்டாறும் இடரப்பா விழுந்ததாலே
வினையமாய் தொழிலும் நஷ்டம்வந்திடும் வழக்கரும்வம்பும்
மனையிலே களவு போகும் மனைவிக்கும் தோஷமாமே
தோஷமே நேருமப்பா இரண்டுடன் மூன்றொன்றொனால்
மோசமேயுன்னை செய்ய முழுதுமே யோசிப்பார்கள்
காசுடன் தொழிலும் போகும் கவலைகள் மிகவே தோணும்
பாசமா யுள்ளபேரும் பிரிந்திடுவாரே யுன்னை.
உன்மனம் போலேயாகும் மிரண்டு மூன்றிரண்டே வீழ்ந்தால்
பண்டைய பொருளும் சேரும் பகைவர்கள் குலமே நாசம்
பெண்டுடன் புத்திரபேரும் பெருகுவாய் வேணலாபம்
கொண்டாடும் உனது தெய்வம் கூடவே துணையிருக்கு.
2,3,3.
இருக்குமே கஷ்டமாக இரண்டுடன் யிருமூன்றானால்
உருக்குமே உள்ளந்தன்னை உலகிலே கெடுபேராகும்
பெருக்கமாய் இருந்தசெல்வம் பலவிதவிறையமாகும்
நொறுக்குமே நோய்தானுன்னை நிலையது நீங்கிப்போகும்
2,3,6.
நீங்கும் கவலையெல்லாம் இரண்டு மூன்றாறுமானால்
ஓங்கிடும் உனதுசெல்வம் உயருமே தொழில்தானப்பா
சோங்கிடும் தோஷம்நோயும் தொலைத்திடும் அஞ்சிடாதே
வாங்கிய கடன்தான் நீங்கி வறுமையுமகன்றுபோமே.
2,6,1.
போமெனதுயரம் போகும் பக்ஷமாய் ரெண்டாறொன்றில்
கோமான்போல் வாழ்வுண்டாகும் குடும்பத்தில் மணமே
தாமதமின்றி நோயும்தணிந்திடும் வெளியூர் போகக்கூடும்
ஷேமமேத மிதவுமுண்டாகும் ஜெகம் புகழடைகுவாயே.
வாயவே யிரண்டுமாறும் வருத்தமே இரண்டும் வீழந்;தால்
தோயவே பொருளும் நஷ்டம் தொழில்தனில் நிந்தையுண்டாம்
உபாயமாய் சிலபேராலே விரோதமும் கலகமாகும்
காயமே யருந்தபோதும் கடவுளை மறந்திடாதே.
2,6,3.
முறைந்திட்டோர் சேகரித்த மண்மனை வந்துசேரும்.
இரண்டுடனாறும் மூன்றும் இணங்கிட செல்வமோங்கும்
சிறந்திடும் நாற்கால் ஜீவன் சீக்கிரம் யெண்ணம் கூடும்.
துறந்துமே சென்றேபேரும் துரிதத்தில் வருகுவாரே.
2,6,6.
வாரென யிரண்டீராறும் வந்திடில் கெடுதியப்பா
நேரவே எடுத்தவேலை நிதானமே மிகந்துகூடும்
பாரது மூளுமப்பா பொரந்திய குடும்பந்தன்னில்
தேரவே வழியண்டு துதித்திடாய் தெய்வந்தன்னை
அகத்தியரின் பாய்ச்சிகை ஆரூடம் - 1,1,1 முதல் 1,6,6 வரையிலான பலன்கள்..
Author: தோழி / Labels: அகத்தியர், ஆரூடம், ஜோதிடம்பாய்ச்சிகை எனப்படும் நான்கு முக மரக் கட்டையினை மூன்று தடவைகள் உருட்டுவதன் மூலம் கிடைக்கும் எண்களைக் கொண்டு அதற்கான பலன்களை அகத்தியர் அருளியிருக்கிறார் அந்த வகையில் இன்றும் 1,1,1 முதல் 1,6,6 வரையிலான எண்களுக்கான பலனைக் காண்போம்.
1,1,1.
மூன்று முறையும் ஒன்று விழுந்தால் எண்ணிய எண்ணம் நிறைவேறும். மன்னன் போல் வாழ்வாய். பம்பு, சூனியம் நீங்கும் பலவிதத்தில் லாபமுண்டாகும். ஒருவித கவலையும் ஏற்படாது.
1,1, 2.
ஒன்றும் ஒன்றும் இரண்டும் விழுமானால் உன் குடும்பத்தில் சீரழிவும்,சிக்கல்களும் உண்டாகும். உனது புகழைக் கெடுக்க உன் மனைவியே துணையாயிருப்பாள். நீ நினைத்த எண்ணமும் முடிவதற்கு வெகுநாள் ஆகும் என்கிறார்.
1,1,3.
முதலில் ஒன்று விழுந்து, மறுபடியம் ஒன்றும் மூன்றும் விழுமானால் மனையில் ஆண் குழந்தை பிறக்கும். ஆதனால் அதிர்ஷ்டம் பெருகும். ஆபத்துக்கள் விலகும். கெண்டமும், நோயும் நீங்கும், முருகனின் கருணையால் கஷ்டம் நீங்கும் என்கிற ார்.
1,1,6.
ஒன்றின் பின் ஒன்றும், ஆறும் விழுமானால் உனது எண்ணம் பலிதமாகாது. அரசாங்க விரோதமும் அதனால் பலவிதத்தில் பொன் பொருள் விரையமாகும். உன் வாக்கு விஷம் போலிருக்கும் என்கிறார்.
1,2 ,1.
ஒன்று இரண்டு ஒன்று என விழுமானால் உன் சொந்தங்களும், நட்பும் உன்னை விஷப் பாம்பினை பார்ப்பது போல பார்ப்பார்கள்.நீ உண்மையை உரைத்தால் அது உறுதியாக இருக்காது. கடன்காரர்களின் தொல்லையும் காட்டும். கவலையும் உண்டாகும் என்கிறார் அகத்தியர்.
1,2,2.
ஒன்றும், இரண்டும், இரண்டும் விழந்தால் பலவிதமான லாபமுண்டாகும். கைவிட்டுப்போன பொருளாயினும், ஜீவனாயினும் தவணையில்லாமல் எட்டு நாளைக்குள் வந்து சேரும். உன்னை மிகவும் நல்லவனென்று புகழ்வார்கள். ஆரம்பமாகும் நோயும் நீங்கும். சினேகிதர்களால் உதவியுண்டாகும். என்கிறார்.
1 ,2,3.
ஒன்றும், இரண்டும், மூன்றும் விழுந்தால் உன் கிரகக் கோளாறினால் உன் முகமே விகாரமாகத் தோன்றும். பெயரும் புகழும் கெடும். பிறறுக்கு உதவினாலும் அதனால் அபாயமுண்டாகும். உறவினர்களுக்குள் திடீரென மரணச்சேதியும் கேட்பாய். மேலும் உனது சுகம் முற்றும் இழந்தாலும் உனது தைரியத்தை மட்டும் விடாதே என்கிறார்.
1,2,6.
ஒன்றும், இரண்டும், ஆறும் விழுந்தால் பகையாயிருப்பவர்களும் உறவாக வந்து சேருவார்கள். தொழிலில் மேன்மையான லாபமும், பிணியும் ,கெண்டமும், பலவித கவலைகளும் நீங்கும்.ஆண்குழந்தை பிறக்கும். ஆதனால் லாபமுண்டாகும் என்கிறார்.
1,3,1.
ஒன்றும், மூன்றும், ஒன்றும் விழுந்தால் நல்ல யோக பலாபலன்களைத் தரும். வேண்டிய பொருள் வீடுவந்து சேரும். எண்ணம் பலிக்கும். மரணமாக்க வந்த நோய் மருந்தினால் நீங்கும். நன்மையான செய்தியும் விர்த்திகரமான வியாபாரமும் உண்டாகும் என்கிறார் அகத்தியர்.
1,3,2.
ஒன்றும்,மூன்றும்,இரண்டு விழுமானால் உனக்கு அபிமான தாரமாகிய ஓர் மங்கை உன் பொருள்கள் அனைத்தையும் அபகரித்து உன்னை கைவிடுவாள். அதனால் உன் நலம் கெடும். உனக்கு அபகீர்த்தி உண்டாகும். பலவிதமான கவலைகளும் உண்டாகும். ஆனால் இன்று முதல் ஒன்பது நாள் நவக்கிரக பூஜை செய் என்கிறார்.
1,3,3.
ஒன்றும், மூன்றும்,மூன்றும் உதயமானால் காணமாற் போன பொருள் யாவும் கிடைக்கும். கனத்த நோயும் நீங்கும். கலியாணம் கூடும். தொழிலில் லாபமுண்டாகும். அகஸ்தியம் வாக்கை மீறாமல் தருமம் செய்து வாழ்வாய் என்கிறார்.
1,3,6.
உனக்கு ஒன்றும், மூன்றும், ஆறும் விழுமானால் மனைவியும், மக்களும் உனது வாக்கை மீறி நடப்பார்கள். நண்பர்களினால் சண்டை பொருள் நஷ்டம் ஏற்படும். கவலைகள் அதிகரிக்கும். கொடுமையான நோயும், கெட்ட செய்திகளும் வரும்.காரியம் கைகூடாது போகும் என்கிறார் அகத்தியர்.
1,6,1.
உனக்கு ஒன்றும், ஆறும், ஒன்றும் விழுந்தால் மிகவும் பகையுண்டாகும். பெரியோர்களின் பொருள் அழியும். வேடன் வைத்த கண்ணில் சிக்கிய மான் போல் கலங்கி நிற்கவும் நேரிடும். கடுமையான கஷ்டங்களை அனுபவிக்க நேரிடும்.தைரியத்தை விடாதே! சீக்கிரத்தில் நன்மையடைவாய் என்கிறார்.
1,6,2.
1,6,3.
உனக்கு ஒன்றும், ஆறும் ,மூன்றும் வந்ததால் குடும்பத்தில் கலகம் நேரும்.எதிலும் துயரமே மேலிடும். சலிப்பின் காரணமாய் இடமாறுதலும் பெரும் பொருள் சேதமும், கடுமையான நோயும் உண்டாகும். தொழில் முடக்கமாகும்,சினேகித பொல்லாப்பு மடைவாய் என்கிறார்.
1,6,6.
இப்பொழுது ஒன்றும், ஆறும், ஆறும் வந்தால் குடும்பத்தில் புத்திர பாக்கியமுண்டாகும். பந்துக்களுடனே சுகஷேமத்துடன் வாழ்வாய். இதன் நடுவிலே கொஞ்சம் கஷ்டத்தையடைந்த போதும் அக்கஷ்டம் உன்னை பாதிக்காது. உன் ஆயுள்காலம் வரையில் ஷேமமாக வாழ்வாய் என்கிறார்.
இதன் தொடர்ச்சியினை நாளைய பதிவில் காண்போம்.
அகத்தியர் அருளிய “பாய்ச்சிகை”ஆரூடம் - ஓர் அறிமுகம்
Author: தோழி / Labels: அகத்தியர், ஆரூடம், ஜோதிடம்ஆருட சமாதி...
Author: தோழி / Labels: கொங்கணவர்"அணைந்து முன்னே தேவதைகள் வந்தாலுந்தான்
அதைச்சட்டை பண்ணாதே யகண்டமாய் நில்
லணைந்து நின்ற வத்துவித நெறியிற்கூடி
யப்பனே சஞ்சார சமாதிக்குள்ளு
மணைந்து நின்று திடப்பட்டாற் பின்புகேளு
அப்பனே சகலத்தி லசத்தியம் போக்கி
யணைந்துநின்று சுட்டசட்டி விட்டாற் போலே
யாச்சரியந் தேவதைக ளசத்தாய்க் காணே"
- கொங்கணவர் -
"அசத்ததாகக்தேவதையை மனதிலெண்ணி
யசையாத மலைபோலே யசைவுமற்று
நிசத்தான காற்றுப்போல் தேவதைக ளென்று
நிச்சயித்து நன்றாக நில்லு நில்லு
பசத்தான வத்துவித நிலைநாமென்று
பாராகத் திடப்பட்டு நில்லுநில்லே
உசத்தாகச் சாதகத்தி நிலையைக் கூட்டி
யுத்தமனே யாரூட சமாதியாச்சே"
- கொங்கணவர் -
யோகத்தின் மிக உயரிய நிலையில் கூட இத்தனை படி நிலைகள் இருக்கின்றன என்பது ஆச்சர்யமான தகவல்தானே... என் வயதிற்கு இதெல்லாம் மிகப் பெரிய விஷயங்கள். இவற்றை முழுதாய் உணர்ந்து எழுதிடும் மனப் பக்குவம் எனக்கு இன்னமும் வரவில்லை. அதற்கான பயணம் மிக நீண்டது.
இத்துடன் இந்த தொடர் நிறைவுக்கு வருகிறது. வேறொரு தகவலுடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.
சஞ்சார சமாதி..
Author: தோழி / Labels: கொங்கணவர்"இருக்கிற தாகையினால் ரெண்டுக்கும் பேத
மியல்பான வகண்டவிர்த்தி சமாதி மார்க்கந்
தருக்கிறதோர் சஞ்சார சமாதி கேளு
சார்ந்து நின்ற வகண்டவிர்த்தி விட்டேயப்பா
வருக்கிறதா யெழுந்திருந்து பிரபஞ்சத்தைப் பார்த்தே
யடைவாக விவகரிக்குங் காலமெல்லா
மருக்கிறதோர் பிரபஞ்ச மெல்லாஞ் சமுத்திரத் தலைபோல்
மருவிநின்ற நுரைபோல மாயந்தானே"
- கொங்கணவர் -
"மாயமுற்றுச் சிலந்தியி னல்வலையைப்போல
மயங்கிநின்ற கூர்மத்தி னங்கம்போலத்
தோயமுற்ற வாகாச மேகம்போலச்
சொப்பனமாம் பிரபஞ்சத்தி லறிவைப் போல
வாயமுற்று நம்மிடத்தே யுண்டாச்சப்பா
வாச்சரிய நம்மிடத்தே யிருந்துகொண்டு
காயமுற்று அறிவழிந்து போறதாலே
கலந்து நம்மை விடவொன்றுங் கண்டிலேனே"
- கொங்கணவர் -
நிருவிகற்ப சமாதி மற்றும் அகண்டவிர்த்தி சமாதி..
Author: தோழி / Labels: கொங்கணவர்கொங்கணவர் தனது “கொங்கணவர் வாதகாவியம்” நூலில் அருளியிருக்கும் சமாதி வகைகளை கடந்த மூன்று பதிவுகளாய் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இன்று இரண்டு சமாதி வகைகளைப் பற்றி பார்ப்போம். ஒரு தகவல் பகிர்வாகவே இந்த தகவல்களை இங்கே பதிகிறேன்.
நிருவிகற்ப சமாதி..
நிருவிகற்ப சமாதி குறித்து கொங்கணவர் பின் வருமாறு கூறுகிறார்...
"பேரான நிருவிகற்ப சமாதிகேளு
பெருத்து நின்ற தத்துவலய சமாதிமுத்தி
தாரான சத்தானு வித்தை முத்தி
தனைமறந்து தூக்கமுற்ற மயக்கம்போல
வாரான சத்தமொன்றுங் காதிற்கேட்கா
மருவியிந்த பூரணத்தே சித்தமப்பா
நேரான சைதன்ய மாகப்போனால்
நிருவிகற்ப சமாதியென்ற நேர்மையாச்சே"
- கொங்கணவர் -
"ஆச்சப்பா சமாதிவிட்டுச் சஞ்சரிக்கி
லடவாகச் சமாதியிலே யிருக்கும்போது
காச்சப்பா காலமென்ற திரயத்தினுள்ளுங்
கண்டிருந்த பிரபஞ்சமெல்லாம் பொய் யென்றெண்ணு
வீச்சப்பா விவகாரத் தாலே தோன்றி
விரிந்துநின்ற பிரபஞ்சத்தின் பாசந்தள்ளி
ஒச்சப்பா நிருவிகற்ப மாகி நின்றா
லுத்தமனே நிருவிகற்ப மிதுவே யாச்சே."
- கொங்கணவர் -
மேலும்,சமாதியை விட்டு எழுந்த பிறகும், சமாதியிலிருக்கும் பொழுதும் காலத்திற்குட்பட்டு இயங்கும் இப் பிரபஞ்சமெல்லாம் பொய் என்றும், இவை யாவும் மாயா விகாரத்தால் தோன்றியது என எண்ணி இவற்றின் மேலுள்ள பாசத்தை நீக்கி எதையும் நினைக்காமல் இருத்தலே முழுமையான நிருவிகற்ப சாமாதியாகும் என்கிறார் கொங்கணவர்.
அகண்டவிர்த்தி சமாதி..
சமாதி வகைகளில் நாண்காவது நிலையான அகண்டவிர்த்தி சமாதி பற்றி கொங்கணவர் பின் வருமாறு கூறுகிறார்.
"நன்றான வகண்டவிர்த்தி யாவதப்பா
நலம்பெரிய காற்றில்லா விளக்குப் போல
அன்றான வலைச்சலற்றுத் தண்ணீருமுப்பு
மடங்கிநின்ற வாறதுபோன் முத்தி நிற்குந்
தன்றான பிறமனதி னுருத்தான் கெட்டுத்
தனிப்பெறவே வேற்றுருவாய்ப் பிரமந்தானாய்
பன்றான விப்படிதான்கடிகையொன்று
பருவமுடன் சமாதியற்றார் பலத்தைக் கேளே"
- கொங்கணவர் -
"பலன்கேளு அசுவமேத யாகங்கோடி
பண்ணினதற் கொக்கு மொக்கும் பரிந்துகூடு
நிலன்கேளு யிப்படிதான் சமாதி மூட்டில்
நிலையாகச் சுழுத்தியென்றேயெண்ண வேண்
தலன்கேளு சுழுத்திக்குச் சித்தந்தானுந்
தயங்கிநின்று நின்றுற்று நசித்துப் போகும்
புலன்கேளு சமாதிக்கு நாம் பிரமமென்று
புடவாக வதிலிருந்து யிருக்கும் பாரே"
- கொங்கணவர் -
கோடி அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்குமாம். மேற் சொன்னவாறு தினமும் பழகி வந்தால் மனமானது சுழித்தியில் அடங்குமாம். இதை வெறும் சுழித்தீ தானே என்று எண்ணி கைவிட்டு விடாமல் சரியாக தொடர்ந்து செய்து வந்தால் அனைத்துமே சித்தத்தில் அடங்குமாம் அப்படி சித்தத்தில் அடங்கி பின் சித்தமும் பிரம்மத்தில் அடங்குமாம். அப்போது நீயே பிரம்மம் என்பதை அறிவாய் என்கிறார். இதுவே அகண்டவிர்த்தி சமாதி யாகும்.
நாளைய பதிவில் ஐந்தாவது சமாதி வகையான “சஞ்சார சமாதி” பற்றி பார்ப்போம்.
சவிகற்ப சமாதி...
Author: தோழி / Labels: கொங்கணவர்கொங்கணவர் அருளிய ஆறு வகையான சமாதி நிலைகளில் இன்று இரண்டாவது வகையான சவிகற்ப சமாதி நிலை பற்றி பார்ப்போம். இந்த சமாதி நிலை என்பது யோகத்தின் மிக உயர்ந்த நிலையாகும். வெறும் வார்த்தைகளால் இவற்றை விவரித்து உணர்த்துவதும், உணர்வதும் கடினமானது. இவை யாவும் உணர்ந்து அறிந்து அனுபவிக்க வேண்டிய அதி உயர்நிலைகள். எனவே எனது இந்த முயற்சியினை ஒரு தகவல் பகிர்வாக மட்டும் கருதிட வேண்டுகிறேன்.
வாருங்கள்!, சவிகற்ப சமாதி பற்றி கொங்கணவர் கூறியுள்ளதைப் பார்ப்போம்.
"ஆச்சப்பா சவிகற்பச் சமாதி கேளு
அடுத்தாக்கால் ரெண்டுவகை யதிலேயுண்டு
வாச்சப்பா சத்தானு வித்தையொன்று
வரிசையுடன் திரையவித்தைச் சமாதியொன்று
போச்சப்பா சத்தானு வித்தை மார்க்கம்
பெரியதொரு தத்துவலய சமாதிக்குள்ளே
ஓச்சப்பா சத்தங்கள் பட்சியோசை
வுன்மனத்தே படுகிறது உயிர்ப்புக்கேளே"
- கொங்கணவர் -
"கேளப்பா சத்தானு வித்தையென்றுங்
கெடியான சவிகற்பச் சமாதியென்றும்
வாளப்பா திரிசானு வித்தைமார்க்கம்
வகைசொல்வே னன்றாகக் கேளுமக்காள்
நாளப்பா நின்றநிலை சமாதிக்குள்ளே
நலமாகத் தன்னையனு சந்தானித்துத்
தாளப்பா சஞ்சரிக்கில் திரிசானு வித்தை"
- கொங்கணவர் -
தத்துவலய சமாதி நிலையில் இருக்கும் போது தன்னுள்ளே பட்சியின் ஓசை எழும்புவதை உணர்ந்து அதில் லயப்பட்டிருப்பதே சத்தானு சமாதி எனப்படுமாம்.
தத்துவலய சமாதி நிலையில் தன்னைத் தானே அனுசந்தானம் செய்து நிற்றலே திரைய சமாதி என்கிறார்.
நாளைய பதிவில் அடுத்த இரு சமாதி வகைகளான “நிருவிகற்ப சமாதி” மற்றும் “அகண்டவிர்த்தி சமாதி” பற்றி பார்ப்போம்.


