புடம் போடுவது என்பது சித்த மருந்தியலின் தனித்துவமான அறிவியல் என்பதை நேற்று பார்த்தோம். புடம் போடுவது என்பது உலை எனப்படும் அடுப்பு, அதில் உருவாக்கப் படும் வெப்பம் என இரண்டு கூறுகளை உள்ளடக்கிய செயல்பாடு.
வெப்பம் என்பது விறகு மற்றும் எரு அல்லது வறண்டு காய்ந்த பசுவின் சாணமான வறட்டிகள் மற்றும் தானியங்களை எரிப்பதன் மூலம் உருவாக்கப் படுகிறது. இவ்வாறு எரிக்கப் படும் தீயின் அளவுகளைக் கூட வரையறுத்திருக்கின்றனர். இந்த அளவுகள் எல்லாம் காலம் காலமாய் வாய்மொழியாவே அடுத்தடுத்த தலைமுறையினருக்கு கற்றுத் தரப் பட்டிருக்கிறது.
விறகினைக் கொண்டு எரிக்கும் போது உருவாகும் தீயின் அளவை நான்கு வகைகளாக குறிப்பிடுகின்றனர்.
மலர்ந்த தாமரை மலரைப் போல எரியும் தீயினை ”கமலாக்கினி” என்கின்றனர்.
துணிப் பந்தம் எரிவது போல உருவாகும் தீயினை “காடாக்கினி” என்கின்றனர்.
குவிந்த வாழைப் பூவினைப் போல எரியும் தீயினை “கதலியாக்கினி” என்கின்றனர்.
அகல் விளக்கின் சுடர் போல எரியும் தீயினை “தீபாக்கினி” என்கின்றனர்.
ஒவ்வொரு வகையான புடத்திற்கும் என்ன மாதிரியான நெருப்பு தேவை என்பது மிக முக்கியமானதாக கூறப் பட்டிருக்கிறது. இந்த பக்குவத்தில் விறகை எரித்தால் மட்டுமே புடம் போடும் செயல் வெற்றியாகும்.
எரியும் தீயின் வெப்பம் ஒரே மாதிரி சீராக இருக்கும் என எதிர்பார்க்க முடியாது. எரியும் விறகின் ஈரத்தன்மை, எரியும் சுடரின் தீவிரம், சுற்றுப் புறத்தில் வீசும் காற்று போன்ற காரணிகள் ஒரே சீரான வெப்பத்தை தராது. இதன் பொருட்டே சீரான வெப்பம் வேண்டி மற்றொரு முறையில் ஆட்டின் எரு மற்றும் மாட்டுச் சாணத்தை காய வைத்து வறட்டியாக பயன் ப்டுத்தினர்.
இந்த முறையில் வறட்டிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து தேவையான வெப்பத்தின் அளவு தீர்மானிக்கப் பட்டது.இதனை அகத்தியர் தனது “அகத்தியர் வாத சௌமியம்” என்ற நூலில் விளக்கமாய் கூறியிருக்கிறார்.
அந்த விவரங்கள் நாளை....!
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment
4 comments:
Thank u :)
புடம் போடுவதை நேரில் கண்டது போல உள்ளது உங்கள் பதிவு. அருமை...அதிலும் அந்தத் தீயின் அளவுகள்.
thanks
realey greet
Post a Comment