மந்திர காயகற்பம்!

Author: தோழி / Labels: , ,

மரணம்! நாம் பிறந்த அன்றே தீர்மானிக்கப் பட்ட ஒன்று. ஆனாலும் கூட நம்மில் யாரும் இதை விரும்புவதேயில்லை. மரணத்தை வெல்லவும், உயிரை தக்க வைக்கவுமே காலம் காலமாய் மனித குலம் போராடி வருகிறது.

இத்தகைய மரணத்தை வெல்லும் கலையில் குறிப்பிடத் தக்க அளவு சாதனைகளைச் செய்தவர்கள் நம்து சித்தர் பெருமக்கள். தங்களுடைய தெளிவுகளை, அனுபவங்களைத் தம்முடைய சீடர்கள் வழியே விட்டுச் சென்றிருக்கின்றனர். நாம்தான் அவற்றை தேடித் தெளியவோ அல்லது பயன்படுத்தவோ முனையவில்லை.

இப்படி மரணத்தை வெல்லும் அல்லது உடலை அழியாது காக்கும் வழிவகையினை சித்தர்கள் காயகற்பம் என்று குறிப்பிடுகின்றனர். இது பற்றி ஏற்கனவே நாம் விரிவாக பார்த்திருக்கிறோம். புதியவர்கள்/தேவையுள்ளோர் அவற்றை இந்த இணைப்பில் சென்று வாசிக்கலாம்.

சித்தர் பெருமக்கள் இரண்டு வகையான காயகற்பங்களை அருளியிருக்கின்றனர். அவை மருத்துவ காயகற்பங்கள், யோக காயகற்பங்கள் என அறியப் படுகின்றன.

அத்தகைய யோக காயற்பம் ஒன்றினை இன்று பார்ப்போம். கோரக்கர் தனது "ரவிமேகலை" என்னும் நூலில் இந்த முறையினை விளக்கி இருக்கிறார். இந்த முறை மந்திர ஜெபம் மூலம் செய்யப்படும் ஒரு காய கற்ப முறையாகும்.

பூசித்திடு மூலமுதல் மந்திரத்தைப் போற்றி
புகன்றிடுவேன் லெட்சமுரு ஆவர்த்தி கொள்போற்றி
காப்பதற்கு ஆயுள்விருத்தி மூலமந்திர மோது
காலனற்றுப் போய்விடுவா னில்லைநாளுந் தீது
ஏர்ப்பதற்காய் இன்னமுண்டு இயம்பிடுவேன் மீது
இன்பமுடன் மந்திர செபங்கள் செய் தப்பாது
பூர்த்திசெய் துகந்துகண்டு கொள்வாய் மூலத்தாது
புன்மலத்தில் ஆசையற்றுப் போய்விடும்பொய் சூது
நேர்த்தியாப்பின் அபமிருந்து மூலஞ்சொல்நீ சாது
நிலைத்திடுமுன் காயமாவி இல்லையேமன வாது.

-கோரக்கர்.

ஆயுள் விருத்தியும், உடலுக்கு பாதுகாப்பும் கிடைக்க தான் அருளும் மூல மந்திரத்தை ஒரு லட்சம் முறை செபித்தால் போதும் என்கிறார். இப்படி செய்வதன் மூலம் எமன் பயம் இனி இல்லாது போகும் என்றும் கூறுகிறார்.

மந்திரங்களை செபிப்பது ஒரு போதும் தவறாகாது, இந்த உண்மையை செபத்தை பூர்த்தி செய்வதன் மூலம் உணர்ந்து கொள்ளலாம் என்கிறார். இந்த மந்திரத்தை செபம் செய்வதால் மனதின் ஆசைகள், பொய் சூது நீங்குமாம்.

எல்லாம் சரிதான், உடல் அழியாது காத்து நிலைத்திருக்க செய்யும் மூலமந்திரம் என்ன?

"ரெக்ஷிகியே நமோ நமா பார்வதி
நீபஞ்சா க்ஷிரி ரிங் ரிங் குரு
தக்ஷணி நகு லக் ஸ்ரீரீங்
க க லுக் டங் லுங்
அக்ஷரி ஹரி பிரம விஷ்ணு
ஆத்ம ஸம்ரெக்ஷ ஆதார பீஜ
கட கட மிருத் விநாசக
இட் இட் இமாம் இமாஞ்ச
இக் ருக் மம துயிருள் நீடித்தே நமஹா."

இந்த மந்திரத்தை கிழக்கு நோக்கியிருந்து லட்சம் முறை செபிக்க மந்திரம் சித்தியாகும்.

Post a Comment

7 comments:

arul said...

is there any message about rama mantra?

Rudran said...

அப்படி என்றல் தாங்கள் வருவது யாதெனில் , இந்த மந்திரத்தை யார் ஒரு லட்சம் முறை பக்தி ஸ்திரத்தையோடு சொல்லி முடிக்கின்றார்களோ அவர்களுக்கு மரணம் ஏற்படாது சரிதானே தோழி ?


ப்ரவீன் குமார்

தங்கம்பழனி said...

எத்துணை யதார்த்தான வார்த்தைகள்..!!

தங்கம்பழனி said...

நிறைய ஆன்மீக விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது. வாழ்த்துக்கள்..!!

kimu said...

thanks :)

Remanthi said...

how can i pray this mantra continuously? or day by day to finish 1 lak time?

THIRUMAL said...

wow

Post a Comment