பண்டைய தமிழ் சமூகத்தில் பெண்களின் வாழ்க்கையை அவர்களின் வயதை வைத்து எட்டு பருவங்களாக பிரித்து கூறியிருக்கின்றனர். ஒவ்வொரு பருவத்திலும் பெண்கள் கடந்து செல்லக் கூடிய வாழ்வியல் கூறுகளை அடிப்படையாக வைத்து இந்த வகைப் பாட்டினை நமது பெரியவர்கள் வகுத்திருக்கின்றனர்.
பிறந்ததில் இருந்து ஏழு வயது வரையிலான பெண்னை பேதை என்றும், எட்டு துவங்கி பதினோரு வயது வரை பெதும்பை என்றும், பன்னிரண்டு துவங்கி பதின்மூன்று வயதுவரை மங்கை என்றும், பதினான்கு வயதிலிருந்து பத்தொன்பது வயது வரையில் மடந்தை என்றும், இருபது வயது துவங்கி இருபத்தி ஐந்து வயது வரையில் அரிவை என்றும், இருபத்தியாறு துவங்கி முப்பத்தி ஒன்று வயது வரையிலான பெண்களை தெரிவை என்றும். முப்பத்தி இரண்டு வயதில் துவங்கி நாற்பது வயது வரையிலான பெண்களை பேரிளம் பெண்கள் என்றும், நாற்பதைக் கடந்தவர்களை விருத்தை என்றும் வகைப் படுத்திக் கூறியிருக்கின்றனர்.
இதில் இன்று பன்னிரெண்டு வயது முதல் பதின்மூன்று வயதுவரையிலான மங்கைப் பருவத்து வாழ்வியல் கூறினையும் அதற்கான சித்தர் பெருமக்களின் தெளிவு ஒன்றினையும் பார்ப்போம். இந்த கால கட்டத்தில்தான் ஒரு பெண் பருவத்திற்கு வருகிறாள். இதையே பூப்பெய்துதல் என்கிறோம். இது இயல்பாய் உடலியலில் ஏற்படும் ஒரு மாற்றம் என்றாலும் கூட, இந்த கால கட்டத்தில் பெண்ணானவள் உளவியல் ரீதியாகவும் பல குழப்பங்களுக்கு ஆளாகிறாள். எனவேதான் இந்த காலகட்டத்தில் பெண் பிள்ளைகளை பெற்றோர்கள் மிகவும் கவனமாய் கையாள வேண்டும்.
இந்த பூப்பெய்துதல் அல்லது முதல் முறையாக மாதவிலக்கு உண்டாவது என்பது சில பெண்களுக்கு தள்ளிப் போகலாம் அல்லது வராமலும் கூட போகலாம். இது அந்தந்த பெண் பிள்ளைகளின் உடலியல் ரீதியான கோளாறுகளினால் தள்ளிப் போகும். இதற்கு தற்போது அலோபதி மருத்துவத்தில் நிறைய பலன் தரும் மருந்துகள் இருக்கின்றன. எனினும் இவை பக்க விளைவைத் தரக் கூடியவை.
இப்படி பூப்பெய்துதல் தள்ளிப் போனால் அந்த பெண்ணும், அவளது பெற்றோரும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த பிரச்சினைக்கு அகத்தியர் ஒரு எளிய தீர்வினை தனது “அகத்தியர் பரிபூரணம்” என்னும் நூலில் அருளியிருக்கிறார்.
போமப்பா யின்னமொரு புதுமைகேளு
பெண்களிலே புத்தியறியா திருந்தால்
நாமப்பா சொல்லுகிறோங் காரணந்தன்னை
நாட்டமுடன் வித்துநீர் யிறக்கிக்கொண்டு
ஓமப்பா பெருங்காய முரைத்துக்கொண்டால்
உத்தமனே பெண்ருதுவாய் உண்மையாகும்.
- அகதியர்.
பூப்படைதல் தாமதமாவதற்கு வித்து நீர் கீழிறங்கி கொண்டு இருப்பதே காரணமாய் இருக்கும் என்கிறார். வித்து நீர் என்பதை தற்போதைய அறிவியலின் படி ஹார்மோன் குளறு படிக்கு இணையாக வைத்துப் பார்க்கலாம். இப்படியான பெண்களுக்கு பெருங்காயத்தை உரைத்துக் கொடுத்தால் இந்த குறை நீங்கி பூப்படைதல் நிகழும் என்கிறார்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment



5 comments:
itharuku kavalai pada mathuri enaki irukum penkalum, avainga peranusum illai, kalam nataithum velayatil... velayada paraka ielorum redi
நல்ல பகிர்வு
தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in
நல்ல தகவலுடன் ஒரு பதிவு . நன்றி
ungaludaya sevai intha ullguku thevai thozhi!!
Nalla thagaval Nanri
Post a Comment