குண்டலினி - விசுத்தி.

Author: தோழி / Labels: ,

மூலாதாரத்திலிருந்து ஐந்தாவது சக்கரமான விசுத்தி பற்றி இன்று பார்ப்போம். இதைப் பற்றி அகத்தியர் பின் வருமாறு விளக்குகிறார்.

ஆச்சப்பா வனாகததி னொடுக்கஞ்சொன்னோம்
அறையுகிறேன் விசுத்தியி னடவைக்கேளு
மாச்சப்பா வதற்க்குமேல் பன்னிரெண்டங்குலம்
பாச்சப்பா பதினாறு யிதழ்தா னாகும்
பாலகனே அட்சரந்தான் வகாரமாகும்
வதுநடுவில் சதாசிவனும் சாகினியுமாமே.

- அகத்தியர்.

இந்த சக்தி ஆதார மையமானது நமது தொண்டையின் அடிப்பாகத்தில் சுழுமுனை நாடியில் அமைந்து இருப்பதாக குறிப்பிடுகின்றனர். நமது குரல்வளை, மூச்சுக் குழாய், தையராய்டு சுரப்பிகள், நுரையீரல், கைகள் போன்ற உறுப்புகளுடன் விசுத்தி சக்கரம் தொடர்புடையதாக குறிப்பிடப் படுகிறது.

பஞ்சாட்சர எழுத்துக்களான "சிவயநம" என்னும் எழுத்துகளில் ஒன்றான "வ" என்னும் எழுத்தையும், அதன் தத்துவத்தையும் விசுத்தி சக்கரம் விளக்குவதாக அமைகின்றது. இச்சக்கரத்தின் அதிதேவன் சதாசிவன், அதி தேவதை சாகினி. பஞ்ச பூதங்களில் ஒன்றான ஆகாசம் இதன் மூலக்கூறு. இதன் மூல மந்திரம் “ஹம்” எனப்படுகிறது.

இந்த சக்கரத்திலிருந்து தாமரை இதழ் போன்ற பதினாறு யோக நாடிகள் கிளம்புகின்றன. அவற்றின் அசைவுகளால் ஏற்படும் சப்தங்களை லுரூ, ருஊ, வஈ, இஆ, அஅ, அம்ஔ, ஓஐ, ஏலூ என்ற எழுத்துக்களால் குறிக்கப்படுகின்றன. இந்த தாமரை இதழ்களின் எண்ணிக்கையில் ஒரு சூட்சுமம் அடங்கி இருக்கிறது. இந்த தொடரின் முடிவில் அது என்ன என்பதை பகிர்ந்து கொள்கிறேன்.

அகத்தியர் தனது பாடலில் விவரித்திருக்கும் விசுத்திச் சக்கரத்தின் மாதிரி படம் இது.


இந்த சக்கர இடத்தை மனதில் நிறுத்தி, மூல மந்திரத்தினை உருவேற்றி வர அனாகத சக்கரத்தில் நிலை கொண்டிருக்கும் அக்கினி குண்டலினியானது மேலெழும்பி விசுத்தி சக்கரம் வந்தடையும். இந்த தியானத்தினை “ஆகாச தாரணை” என்கின்றனர் சித்தர் பெருமக்கள்.

இந்த சக்கரம் மலர்வதன் மூலம் தீமையை உருவாக்கும் அல்லது விளைவிக்கும் எண்ணங்கள், உணர்வுகள் எல்லாம் சாதகனை விட்டு நீங்கிடும். இதனால் எதனையும் விருப்பு வெறுப்போ அல்லது பற்றுதலோ இல்லாது சாட்சி நிலையில் இருந்து கவனிக்க முடியும். நான் என்கிற அகந்தை அழிந்து அன்பும், கருணையும் மிளிர்ந்தவனாகிடுவான் என்கின்றனர்.

இதுவரை நாம் பார்த்த இந்த ஐந்து சக்கரங்களும் ஆகாச தத்துவ ஞானம் என்ற வகையில் அடங்கும். இதற்குமேல் வரும் மற்ற இரண்டு சக்கரங்களும் மனஸ தத்துவ வகையை சார்ந்தவை.


Post a Comment

5 comments:

Rajakumaran said...

nice...

kannanvaruvan said...

தாயே நீ வணக்கதிற்குறியவள்..பெண்ணின் சிகரம் நீ.vaazhee

P.K.SELVARAAJ said...

அன்புள்ள தோழிக்கு,
தங்களின் குழந்தை இல்லாதவர்க்கு அளித்த பூஜை முறைகளை என் நண்பருக்கு தெரிவித்தேன்.அவர் பூஜை வைத்த ஒரு மாதத்தில் அவரின் மனைவி கருத்தரித்துள்ளார்.தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
வாகை பா.க.செல்வராஜ்.

தோழி said...

@P.K.SELVARAAJ

மகிழ்ச்சியான தகவல், எல்லா புகழும் குருநாதருக்கே உரியது. சிரமம் பார்க்காமல் குருவை மனதில் தியானித்து வரச் சொல்லுங்கள். நல்லதே நடக்கும்.

Statsfact said...

அன்புள்ள தோழி,

அகத்தியர் அருளிய நாவல் மரம் வைத்து பூஜை செய்து என் சகோதரி ஒருவற்கு பிள்ளை பாக்கியம் கிடைத்து உள்ளது.
ஆகஸ்ட் 31 - (ரம்ஜான) அன்று பூஜை செய்தார்கள் - அக்டோபர் 1 - டாக்டர் உறுதி படுதிள்ளர். அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளோம்.

அகத்தியற்கும் - தோழிக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

Post a Comment