குண்டலினி - சுவாதிஷ்டானம்.

Author: தோழி / Labels:

குண்டலினி பயிற்சியில் இரண்டாவது சக்தி ஆதார மையமான சுவாதிஷ்டானம் பற்றி இன்று பார்ப்போம். இதற்கு “நிராகுலம்” என்றொரு பெயரும் உண்டு. நிராகுலம் என்றால் துன்பமற்று ஞானமயமாக இருப்பது என பொருள்படும்.

மூலாதாரத்திற்கு மேலே இருக்கும் இரண்டாவது சக்கரம் சுவாதிஷ்டானம். நமது பிறப்பு உறுப்பிற்கு மேலே இது இருக்கிறதாம். அதாவது மூலாதார சக்கரத்தில் இருந்து நான்கு விரற்கடை அளவு மேலே இருப்பதாக கூறியிருக்கின்றனர். இந்த சக்கரமானது பஞ்சாட்சர எழுத்துக்களான "சிவயநம" என்னும் எழுத்துகளில் ஒன்றான "ந" என்னும் எழுத்தையும்,அதன் தத்துவத்தையும் விளக்குவதாக அமைகின்றது.

இச்சக்கரத்தினின்று ஆறுமுக்கிய நாடிகள் வெளிக் கிளம்புகின்றன. அவை தாமரையின் ஆறு இதழ்கள் போல் உருவகப் படுத்தி இருக்கின்றனர். ஒவ்வொரு நாடியின் அசைவினால் ஏற்படும் சப்தங்கள் "ஸ, ஹ, ம், ய, ர, ல" என்ற எழுத்துக்களால் குறிக்கப்படுகின்றன. இதன் மையத்தில் வளைந்த பிறைச் சந்திரன் ஒன்றும் குறிக்கப் படுகிறது.

அகத்தியர் தனது பாடலில் விவரித்திருக்கும் சுவாதிஷ்டான சக்கரத்தின் மாதிரி படம் இது.


சுவாதிஷ்டானத்தின் அதிதேவன் பிரம்ம தேவர். அதிதேவதை ராகிணி/சாகிணி. பஞ்ச பூதங்களில் ஒன்றான நீர் இதன் மூலக் கூறாக கூறப்பட்டிருக்கிறது. சுவாதிஷ்டானமானது நமது பிறப்பு உறுப்புகள், கருப்பை, குடல் ஆகிய உறுப்புகளுக்கு தொடர்புடையதாம்.

சுவாதிஷ்டானத்திற்கான மூல மந்திரம் “வம்” என்பதாகும். சுவாதிஷ்டானத்தை மனதில் இருத்தி மூலமந்திரத்தை உருவேற்றி வர குண்டலினி இந்த மையத்தை அடையும். இது விடாத தொடர் முயற்சி மற்றும் பயிற்சியினால் மட்டுமே சாத்தியமாகும்.

சித்தர்கள் இந்த சக்கரங்கள் ஒவ்வொன்றையும் ஆணின் அம்சமாகவே கூறியிருக்கின்றனர். குண்டலினி சக்தியை பெண் அம்சமாக அதாவது வாலையின் அம்சமாய் உருவகிக்ன்றனர். இந்த சக்கரத்தின் வழியே குண்டலினி சக்தி பாயும் போது அவை பூரணத்துவம் அடைந்து மலர்வதே சித்தியடைதல் எனப் படுகிறது.

இந்த சக்கரம் மலர்வதால் நமது சுய கட்டுப்பாட்டின் தீவிரம் தூண்டப் பட்டு விழிப்புணர்வு நிலை மிளிரும். நமது எண்ணம், செயல், சிந்தனை சார்ந்த விஷயங்களின் மீதான மேம்பட்ட பிடிப்புணர்வுக்கு இந்த சக்கரம் தூண்டப் படுவது அவசியமாகிறது.


Post a Comment

3 comments:

geethasmbsvm6 said...

அருமையாக விளக்கம் கொடுக்கிறீர்கள், உங்கள் தொண்டு தொடரட்டும். முயற்சிகள் வெற்றி அடையட்டும். வாழ்த்துகள்.

Prakash said...

Tholi sitharlkal maha purusarkal. avarkal illai yenraal namaku kadavolai kanbipavar yaarum illai. ungal anbudan S.Prakash

piravipayan said...

thozhi nalla pathivu anal ennai pondra illaravasigal kundalini seiyallama

Post a Comment