குண்டலினி பற்றிய தொடர் இன்று முதல் துவங்குவதாக கொள்ளலாம். இதுவரை பார்த்த அடி ஆதார புரிதல்கள் இனி உதவியாக இருக்கும்.
சித்தரியலில் குண்டலினி பற்றி பேசாத சித்தர்கள் வெகு குறைவு. அநேகமாய் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் இந்த குண்டலினியின் மகிமையை கூறியிருக்கின்றனர். இதனை உயர்த்துவதன் மூலம் சாதாரண உணர்வினை, பரபிரம்ம உணர்வாக உயர்த்திடலாம் என்று கூறுகின்றனர்.
சுருள்சுருளாய் நெளிந்த ஒரு காதணியை குண்டலம் என வழங்குகிறோம். இப்படி சுருண்டு வளைந்து பாம்பினைப் போல இந்த நிலை சக்தி மூலாதாரத்தில் இருப்பதால் இதனை குண்டலினி என அழைப்பதாக ஒரு பெயர் காரணம் கூறுகிறது. இதை ஒரு யோக வித்தையின் மூலம் எழுப்பிடலாமாம். இதன் ஆற்றலை ஒருனியை பாம்பினை ஒத்ததாக கூறுகின்றனர்.
குண்டலினியின் இருப்பிடத்தை காகபுசண்டர் பின் வருமாறு விளக்குகிறார்.
குண்டலியைக் கண்டாக்காற் கருக்குமென்பார்
குண்டலியி னிருப்பிடமும் மூலமென்றார்
குண்டலிதா னென்றாக்கால் நரம்போதோலோ
குருந்தண்டோமுள்ளெலும்போ பிடரிமார்போ
குண்டலியே யென்றவர்கள் பெயரார் சொன்னார்
கொத்தளத்தின் பெருமைதனைச் சொல்லினார்கள்
குண்டலியே வாய்திறக்கப் பேசுமென்றார்
குருவென்றார் வாலையென்றார் குமரனென்றாரே.
- காகபுசுண்டர் -
குண்டலினியை சித்தர் பெருமக்கள் வெவ்வேறு பெயர்களில் அழைத்திருக்கின்றனர். அதைச் சொல்லும் கொங்கணவர் பாடல் ஒன்றை பார்ப்போம்.
சிறந்திட்ட குண்டலியின் பேர் செப்பக் கேளு
சிறப்பான சிவயோக மென்றுபேரு
சிறப்பான வாசி யென்று மிதுக்கே பேரு
சீரான இராச யோக மென்றுபேரு
திறப்பான யரசனென்று மிதுக்கே பேரு
சேர்ந்துணர்ந்த சபையென்று மிதற்கே பேரு
வுறப்பாக விதைபார்த்தால் ஞானசித்தி
யுத்தமனே காயசித்தி யுணந்து பாரே.
- கொங்கணவர் -
குண்டலினிக்கு, சிவயோகம் என்றும், வாசி யோகமென்றும், சுழியோகமென்றும், ராஜயோகமென்றும், அரசன் என்றும் சபையென்றும் பெயர் வழங்கப்படுகிறது. இவற்றை முறையாகச் செய்து தேர்ச்சி பெற்றால் காயசித்தியும் ஞானசித்தியும் வாய்க்கும் என்கிறார் கொங்கணவர்.
மனித உடலில் மூலாதாரம் எங்கிருக்கிறது என்பதை நேற்றைய பதிவில் பார்த்தோம். அந்த மூலாதாரத்தில் குண்டலினி எப்படி இருக்கிறது என்பதை திருமூலர் அருளிய திருமந்திரம் என்ற நூல் தெளிவாக விளக்குகிறது. அதாவது, நம் ஒவ்வொருவரின் உடம்பிலும் முதுகு தண்டின் அடியில் மூலாதாரத்தில், மூன்றரைச் சுருள்களாக முடங்கி உறங்கி கிடக்கும் பாம்பு போன்று குண்டலினி இருக்கிறது. அதன் முகம் கீழ் நோக்கி இருக்கிறது. அதன் வாலை அதன் வாய் கவ்விக்கொண்டிருக்கிறது.
இப்படி தூங்கிக் கொண்டிருக்கும் இந்த குண்டலினியை எழுப்புவதுதான் இந்த குண்டலினி யோகத்தின் நோக்கம்.
இது பற்றித்தான் இனி வரும் பதிவுகளில் பார்க்க இருக்கிறோம்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment



9 comments:
நல்ல பதிவு.
தொடர்ந்து எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்.
nice post
அன்புள்ள தோழிக்கு,
பலகாலம் பின்னூட்டம் செய்யாமைக்கு மன்னிக்கவும்,
அருமையான பதிவு ஆரம்பமாகிவுள்ளது . இதனை வாசிக்கும் அனைத்து உள்ளங்களுக்கும்
குண்டலினி சக்தி கிடைத்து நலமுடன் வாழ குருநாதரை பிரார்த்திக்கிறேன்.
அருமையான பதிவு
வாழ்த்துக்கள்
sollunga....
sollunga.....
sollikittae irunga.
-kimu-
மகிழ்ச்சி தோழி..
பொருத்தமான விளக்கங்களுடன் தொடர் வேகம் பிடிக்கின்றது..
தொடர வாழ்த்துகிறேன்
நிகழ்காலத்தில் சிவா
நல்ல ஒரு பதிவு தோழி.....
நல்ல ஒரு பதிவு தோழி.....
Nice nalla thagavalgal nanri thozhi
Post a Comment