குண்டலினி என்றால்... ஆற்றல்?

Author: தோழி / Labels:

உடலும், உயிரும் சேர்ந்து ஒத்திசைந்து இயங்கினால்தான் உயிரினம்.இதில் ஏதேனும் ஒன்று மற்றதைப் பிரிந்து போனால் என்னவாகும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததுதான். இந்த உடலை காக்கவும்,வளர்க்கவும்தான் நம் வாழ் நாளைச் செலவு செய்கிறோம். உடலைக் காக்க இத்தனை சிரத்தை எடுக்கும் நாம், உடலின் ஆதாரமாய் இருந்து அதை இயக்கும் உயிருக்காக ஏதேனும் செய்தோமா, என்கிற கேள்வி நியாயமானதுதானே!.

உயிரின் மீது ஆசை இல்லாத மனிதர் நம்மில் யாரேனும் இருக்க முடியுமா?, அப்படி விலை மதிப்பில்லாத இந்த உயிரை போற்றி பாதுகாக்கவும், அதை வளர்த்தெடுக்கவும், அதற்கு தேவையான ஓய்வு தந்து மெருகேற்ற ஏதேனும் வழி இருக்கிறதா என்ன?

நிச்சயமாக இருக்கிறது!, அதுவும் மற்ற எந்த மரபியலையும் விட இந்திய மரபியலில் இதற்கு தெளிவான தீர்வுகள் இருக்கிறது. அதை புரிந்து கொண்டதால்தான் மற்ற நாட்டினர் இந்திய மரபியல் செல்வங்களை நாடி ஓடி வருகின்றனர்.

நமது மரபியல் அளிக்கும் தீர்வுகளை இரண்டு படி நிலைகளாக அணுகலாம். ஒன்று “பக்தி நெறி”, மற்றது “ஞான நெறி”.

இதைப் பற்றி நாம் பின்னர் பேசுவோம்.இப்போது உயிரைப் பற்றி மேலும் கொஞ்சம் பார்ப்போம். நமது உடலில் உயிர் எங்கே இருக்கிறது என்கிற கேள்வி நம் எல்லோருக்கும் வருவதுதான். என்னுடைய வாசிப்பனுபவம் மற்றும் புரிதலின் படி உயிரானது நமது உடலின் உள்ளும், உடலுக்கு வெளியிலும் நீக்கமற நிறைந்திருக்கும் ஒர் ஆற்றல் நிலை என்பதாகவே புரிந்திருக்கிறேன்.

ஆற்றல் இரண்டு வகையானது என நவீன அறிவியல் கூறுகிறது. ஒன்று “நிலை ஆற்றல்”, மற்றது “இயக்க ஆற்றல்”. நிலை ஆற்றல் கிளர்ந்து எழும் போது அது இயக்க ஆற்றலாக மாறுகிறது. தொடர்ந்து கிளராவிட்டால் இயக்க ஆற்றல் வலுவிழந்து தேய்ந்து மறைந்து விடும். இது நிரூபிக்கப் பட்ட அறிவியல் தத்துவம்.

நான் சொல்கிறேன்!, நமது உயிர்தான் இயக்க ஆற்றல்.

அப்படியானால் நிலை ஆற்றல் என்பது என்ன?

அதுதான் குண்டலினி!

புரியத் துவங்கியிருக்கும் என நம்புகிறேன்.

நாளை தொடர்கிறேன்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

8 comments:

Lakshmi said...

Ungalindam Uyirai Patrina Thagavalukka thaan neenda naal kaththirunthean.

Melum virivana thagavalai ethir parkiren

I am expecting more on this title especially.
Thank you

From
http://www.healthtips-lakshmi.blogspot.com/

Rathnavel said...

நல்ல பதிவு.
தொடருங்கள்.

naveenkumar said...

Hi thozhi,

oru topic ore nalil mudithal santhosamaga irukum.I am feeling like as waiting for lottery ticket results.

By
Naveen

நாஞ்சில் த.க. சபரிஷ் said...

அருமையான விளக்கத்துடன் கூடிய துவக்கம் ..தொடருங்கள் தோழி...

raja said...

ஆக ! என்ன ஓர் அருமையான முயற்சி! வாழ்த்துக்கள்

Venkatesh said...

i have lot of credits please solution to solve this.

vishnu

Sasikumar C said...

Wonderful...great explanation...

கோகுல் said...

Worderful explanation of Kinetic and Potential Energy with respect to Human life.

Post a Comment