அகத்தியர் அருளிய பதினாறு வகையான தரிசனங்களில் இதுநாள் வரையில் பதினைந்து தரிசனங்களைப் பற்றி பார்த்தோம். இந்த வரிசையில் இன்று நிறைவு தரிசனமான “சாயுச்சிய தரிசனம்” பற்றி பார்ப்போம். முதல் பதினைந்து தரிசனங்களில் சித்தியடைந்தவர்கள் மட்டுமே இந்த முறையை பயிலவோ முயற்சிக்கவோ வேண்டும்.
சாயுச்சிய தரிசனம் பற்றி அகத்தியர் பின்வருமாறு விளக்குகிறார்.
அரூபமென்ற தெரிசனங்கள் பதினைந்திற்க்கும்
இறுதிநிலை தெரிசனந் தான்மவுனபீடம்
சுரூபமென்ற சோதியிலே மனக்கண்சாத்தி
சுத்தமுடன் அந்தரத்தில் மணிநாவுன்னி
அரூபமென்ற தெரிசனங்கள் யீரட்டுந்தான்
அங்கசனையே தோணுமடா அமர்ந்துபாரு
ரூபமென்ற சோதியிலே அமர்ந்துபாரு
துலங்குமடா நினைத்தவண்ணஞ் சோதிதானே.
தானான சோதியடா உச்சிமூலம்
தனையறிந்து வாசியடா மவுனபீடம்
கோனான சுழினையடா நந்நதிக்கம்பம்
குருவான மூலமடா ஓங்காரந்தான்
வானான வட்டமடா கபாடவாசல்
வரையறிந்து திரையகத்தி மவுனங்கொண்டால்
தேனான அமுர்தரசந் தெளிவுகாணும்
தெளிவான ஒளிவரிந்து வெளியைக்காணே.
மௌனமாக அமர்ந்திருந்து சுரூபம் என்ற சோதியை மனக்கண்ணில் பார்க்க, இதற்க்கு முன் தரிசித்த பதினைந்து தரிசனங்கள் அனைத்தையும் ஒன்றாக அங்கு தரிசிக்கலாமாம். அப்படியே அமர்ந்து அதைத் தரிசித்தால் அனைத்தும் ஒன்றாகி ஒரே சோதியாக தெரியுமாம். அப்படி அந்த சோதியை தரிசித்து கொண்டே ஓங்கார மந்ந்திரமான “ஓம்” என்று மனதால் உச்சரிக்க வட்டமான கபால வாசல் திறக்குமாம். அப்போது இந்த சோதி தரிசன நிலையைக் கடந்து அண்ட வெளி ரகசியத்தை முற்றாக உணரலாமாம். இதுவே இறுதி நிலையாகும் என்கிறார் அகத்தியர்.
இத்துடன் இந்த தரிசனம் தொடர் நிறைவுக்கு வந்தது. முறையாக குருவின் வழிகாட்டுதலோடு இவற்றை மேற்கொண்டால் எல்லா தரிசனங்களும் சித்திக்கும். இந்த சாயுச்சிய தரிசனம் வரை பெற்றவர்களுக்கு மிக உயரிய நிலையான சமாதி நிலை சித்திக்குமாம். ஆர்வமுள்ளவர்கள் குருவருளை வேண்டி வணங்கி அவரின் அனுமதியோடு முயற்சிக்கலாம்.
நண்பர்களே, நாளைய பதிவு இந்த வலைப்பதிவின் முக்கியமான பதிவுகளில் ஒன்று. புதிய விவரங்களுடன் நாளை சந்திக்கிறேன்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment



4 comments:
அருமை தல
என்ன புதிர் ஆவலாக இருகேறோம்.
வணக்கம் நண்பரே
உங்கள் பதிவினை இத்தளத்திலும் இணைக்கவும்...
http://www.valaiyakam.com/
ஓட்டுப்பட்டை இணைக்க:
http://www.valaiyakam.com/page.php?page=about
Dear thozi,
Thanks a lot.
Post a Comment