பூரண தரிசனம், நாசி நுனி தரிசனம்!

Author: தோழி / Labels: ,

பூரண தரிசனம்..

இது வரை பகிர்ந்து கொண்ட முதல் ஆறு தரிசனங்களை பெற்று சித்தியடைந்தவர்கள் இந்த ஏழாவது தரிசனமான பூரண தரிசனத்தை பயில வேண்டும். இந்த தரிசனம் பற்றி அகத்தியர் பின் வருமாறு விவரிக்கிறார்.

பாரப்பா உள்ளமென்ற தெரிசனந்தான்சொன்னேன்
பதிவான பூரணமாந் தெரிசனத்தைக்கேளு
நேரப்பா வங்கென்று வாசிதனையெழுப்பி
நிலையான சுழினையிலே அங்கென்றிருத்தி
காரப்பா ஓம்றீங் கிலிமங்கென்று
கருத்துறவே னூற்றெட்டு உருவே செய்தால்
தேரப்பா அண்டமெனும் சுழினைக்குள்ளே
தீர்க்கமுடன் சதாசிவனார் தெரிசனையாங்காணே.

காணவே அரிதாகும் தெரிசனந்தான் மைந்தா
கற்பூர தீபமதின் காந்திதன்னை
பேணவே மனம்பூண்டு காந்திதன்னால்
பேசாத மவுனரச பானமுண்டால்
தோணவே மவுனரச பானங்கொண்டால்
துலங்குமடா சிவயோகம் சுத்தமாக
ஊணவே தானிருந்து மவுனம்பூட்டி
ஓடிநின்று வாசியது ஒடுக்கமாச்சே.


“வங்” என்று மூச்சை எழுப்பி சுழுமுனையில் “அங்” என்று நிறுத்தி, மௌனமாக இருந்து "ஓம் றீங் கிலி மங்" என்ற மந்திரத்தை தினமும் நூறு முறை செபித்து வந்தால் சுழிமுனையில் சதாசிவனார் தரிசனம் காணக் கிடைக்குமாம். அப்படி தெரிந்தால் பூரண தெரிசனம் சித்தியாகுமாம்.

மேலும் இந்த தரிசனதில் கற்பூர தீபம் போன்ற ஒளியும் தென்படுமாம், அப்போது வாசியானது ஒடுக்கமாகுமாம். அத்துடன் மௌன ரச பானம் சுரக்கும் அதை உணர்ந்தால் சிவயோகம் தெளிவாகவும், முழுமையாகவும் சித்திக்குமாம் என்கிறார் அகத்தியர்.

நாசினுனி தரிசனம்..

சித்தர்களின் தரிசன வகைகளில் எட்டாவது தரிசனமான நாசி நுனி தரிசனம் பற்றி பார்ப்போம். இதை அகத்தியர் பின் வருமாறு விவரிக்கிறார்.

ஒடுக்கமுடன் பூரணமாம் தெரிசனத்தைச் சொன்னேன்
உண்மையென்ற னாசினுனி தெரிசனத்தைக்கேளு
அடுக்கநடு மனைதனில் வங்கென்றிருத்தி
ஆதியென்ற சுழிமுனையில் சிங்கென்றிருத்தி
தொடுத்துமிக சிவயவசி அம்மங்கென்று
சுத்தமுடன் னூற்றெட்டு உருவேசெய்தால்
நடுத்தமரில் னாகாந்த சோதிதொன்றி
நாலான காரியமும் நன்மையாமே.

நன்மையுடன் னாசினுனி னாட்டம்பாரு
நாதாந்த பூரணமாய் சுழினைக்கேத்தி
உண்மையென்ற வாசியிலே உகந்துநில்லு
தன்மையுடன் உலகமதில் தானேநின்று
சகலஉயிர் தாபரமும் தானேதானாய்
சின்மயமாய்த் தானிருந்து தெளிந்துகொண்டால்
சிவசிவா மவுனமது தீர்க்கமாமே.


புருவ மத்தியில் மனதை நிறுத்தி “வங்” என்று மூச்சை எழுப்பி சுழுமுனையில் “சிங்” என்று நிறுத்தி மௌனமாக கண்களால் நாசி நுனியை நோக்கியவாறு இருந்து "சிவயவசி அம் மங்" என்று தினமும் நூறு முறை செபித்துவந்தால் புருவ மையத்தில் காந்த ஜோதி தெரியுமாம். அப்படி தெரிந்தால் நாசினுனி தெரிசனம் சித்தியாகியதாக கொள்ளலாமாம்.

அப்படி நாசிநுனி தெரிசனம் சித்தியானால் சகல உயிர்களிலும் பரம்பொருளே நிறைந்திருக்கிறது என்றும், அந்த பரம்பொறுளிலில் தானும் அடக்கம் என்றும் உணர முடியுமாம். அத்துடன் மவுன சித்தும் சித்திக்குமாம் என்கிறார் அகதியர்.

எளிமையாக இருக்கிறதல்லவா!!

அடுத்த பதிவில் புருவ மைய்ய தரிசனம் பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

11 comments:

Виктор Мунивар said...
This comment has been removed by the author.
கண்ணதாசதாசன் said...

மச்சமுனி ஆங்கிலத்தில் பேசல் கண்டு
மதிமயங்கிப் போனோமே போனோம் நாமே!
அச்சமென்ன அச்சமிங்கு சித்தர் சொன்ன
அளவுகளைச் சொல்வதிலே பயமும் என்ன?
நிச்சயமாய் அனைவருக்கும் சேர்ந்தி டத்தான்
நீக்கமற எழுதிவைத்தார் சித்தர் மக்கள்
உச்சபயம் ஏதுமில்லை உவகை சொல்வேன்
உபாயமது சித்தரடி பணிந்தேன் பாரே!

Viktor Munivar said...
This comment has been removed by the author.
Viktor Munivar said...
This comment has been removed by the author.
Viktor Munivar said...
This comment has been removed by the author.
-கிமூ- said...

" Виктор Мунивар and Viktor Munivar both are same, he is posting his reply by changing the name.
email id:viktormunivar@gmail.com
http://www.blogger.com/profile/14748402318973195881 "

don't worry thozi, 1186 members are coming with you. one or two people from outside will do / talk like this.
keep on writing.

tamilvirumbi said...

Dear thozi,
Thanks a lot for your explanatory message about
purana darshan.This has been well portrayed by
vadalur vallalar in thiruarutpa and also by
Sri sivananda paramahamsar.

Vaazhga Valamudan said...

sulumunaiyil moochai eppadi konduvaruvathu?

♠புதுவை சிவா♠ said...

நன்றி தோழி

K KULANTHAIVEL PILLAI said...

very super

RAVINDRAN said...

நன்றி

Post a Comment