நண்பர்களே!
இன்றைய தினம் குருவிற்கான தினம்.குருபூர்ணிமா என்று அழைக்கப் படும் இந்த நாளில் குருவினை பணிகிறவர்களுக்கு அவரின் பூரண ஆசி கிடைத்திடும் என்பது நம்பிக்கை.
நம்மை நல்வழி நடத்துகிற, நாம் அறிந்திராத ஒன்றை நமக்கு அருளிடும் எவரும் நமக்கு குருவே! அவரை பணிவதால் நமக்கு உயர்வே தவிர தாழ்வில்லை.
அந்த வகையில் எனது மேலான குருவின் பாதங்களை பணிந்து அவர் ஆசியும் அருளும் அனைவருக்கும் கிடைத்திட வேண்டி வணங்கிக் கொண்டு இன்றைய பதிவினை துவக்குகிறேன்.
இன்றைய தினம் குருவிற்கான தினம்.குருபூர்ணிமா என்று அழைக்கப் படும் இந்த நாளில் குருவினை பணிகிறவர்களுக்கு அவரின் பூரண ஆசி கிடைத்திடும் என்பது நம்பிக்கை.
நம்மை நல்வழி நடத்துகிற, நாம் அறிந்திராத ஒன்றை நமக்கு அருளிடும் எவரும் நமக்கு குருவே! அவரை பணிவதால் நமக்கு உயர்வே தவிர தாழ்வில்லை.
அந்த வகையில் எனது மேலான குருவின் பாதங்களை பணிந்து அவர் ஆசியும் அருளும் அனைவருக்கும் கிடைத்திட வேண்டி வணங்கிக் கொண்டு இன்றைய பதிவினை துவக்குகிறேன்.
சித்தர்கள் அருளிய ஆறாவது தரிசனமாகிய உள்ளமென்ற தரிசனம் பற்றி இன்று பார்ப்போம். முந்தைய பதிவுகளில் குறிப்பிட்டதைப் போல முதல் ஐந்து தரிசன சித்தி அடைந்தவர்களே இந்த உள்ளமென்ற தரிசனத்தை பயில வேண்டும். இந்த தரிசனம் பற்றி அகத்தியர் பின் வருமாறு விவரிக்கிறார்.
நில்லென்று மனதடங்கும் தெரிசனமும் சொன்னேன்
நிசமான புலத்தியனே யின்னங்கேளு
ஊனென்ற உள்ளமதின் தெரிசனத்தைச் சொல்வேன்
உத்தமனே சற்குருவைத் தியானம்பண்ணி
சொல்லென்று வாசிதனை வங்கென்றெழுப்பி
தீர்க்கமுடன் உங்கென்று மவுனம்பூட்டி
செல்லென்று அங்கிலிவசி வசியென்றோத
துலங்குமடா மகேஸ்பரத்தின் தெரிசனந்தான்காணே.
காணவே மயேசரத்தின் தெரிசனந்தான் மைந்தா
கருணையுடன் காணவே அரிதாம்பாரு
பூணவே புருவமப்பா சுழினைக்குள்ளே
பொருந்திநின்று வந்ததொரு வாசிதானும்
தோணவே துலங்கி நின்று அசவையாகி
சொல்நிறைந்த மந்திரமு மதுவேயாக
ஊணவே மவுனமது குருதியாகி
உள்வெளியாய் நின்றுதடா உகந்துபாரே.
குருவருளைத் தியானம் செய்து மூச்சை “வங்” என்று ஊன்றி, பின் “உங்” என்று மௌனமாக இருந்து கொண்டு "அங்கிலி வசி வசி" என்று தினமும் நூறு முறை செபித்து வரவேண்டுமாம்.
அப்படி செபித்து வரும்போது காண்பதற்க்கு மிகவும் அரியதான மகேஸ்பரத்தின் தெரிசனத்தை காணலாமாம். அப்போது சுழிமுனையுடன் பொருந்தி வரும் மூச்சானது அதுவே மந்திரமாகவும், மௌன நிலையாகவும் உடலில் ஓடும் இரத்தம் போல் ஒன்றி உள் வெளியாய் இருக்கும் நிலையை உருவாக்குமாம்.
இதையே உள்ளமென்ற தெரிசனமாகும் என்கிறார் அகத்தியர்.
நாளைய பதிவில் பூரண தரிசனம் மற்றும் நாசி நுனி தரிசனம் பற்றி பார்ப்போம்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment



8 comments:
மிகவும் அருமையான தகவல் நாளைய தரிசனதிர்க்காக காத்திருக்கிறேன் ......
நன்றி
நன்றி
நன்றி
நன்றி.
சிறப்பான செய்திகள். நன்றி தோழி.
Dear thozi,
You have neatly explained about this new darshan which I have not studied before.
Thanks a lot.
naatham enraal enna tholi
naatham endral enna tholi
ma'am, you can include the posting date also. It will help us.
regards, hariharan
Post a Comment