சித்தர்கள் அருளிய பதினாறு வகையான தரிசனங்களில் ஐந்தாவது தரிசனமாகிய “மௌன தரிசனம்” பற்றி இன்று பார்ப்போம்.
முதல் நான்கு தரிசனங்களில் சித்தியடைந்தவர்கள் மட்டுமே இந்த முறையினை பயில வேண்டும் என்கிறார் அகத்தியர். மௌன தரிசனம் பற்றி அகத்தியர் பின் வருமாறு விவரிக்கிறார்.
உறுதியுள்ள மனமடங்குந் தெரிசனமுஞ் சொன்னேன்
உகந்துமன மடங்கினதோர் தெரிசனத்தைக்கேளு
பரிதிமதிமேற் சுடரறிந்து மவுனம்பூட்டி
பக்தியுடன் வாசிதனை வங்கென்றூணி
திருகுசுழி முனையதிலே சிங்கென்றோட்டி
தீர்க்கமுடன் தானிருந்து குருவைப்போற்றி
உறுதியுடன் சிங்குசிவாயென்றோத
உண்மையுள்ள மௌன தெரிசனமுமாமே.
ஆமப்பா தெரிசனத்தை யென்னசொல்வேன்
அதியென்ற தேகமதில் அக்கினிகொண்டேறும்
காமப்பால் கானப்பால் கனிந்தமுர்தமூறும்
கண்ணறிந்து மவுனமதாய் கனிவாய்நின்று
வாமப்பா லுருதியியனால் வரைகள்தாண்டி
மகத்தான சுழினைவழி வாசல்சென்று
தாமப்பா தனன்றிவே சாட்சியாக
தன்மயமும் விண்மயமும் தானாய்நில்லே.
இதுவரை சித்தியடைந்த தரிசனங்கள் மூலமாக சூரிய சந்திரர்களை விட சிறப்பான ஒளியை தரிசித்ததை மௌனமாக மனதில் உள்வாங்கி மூச்சை “வங்”என்று ஊன்றி, பின்னர் அந்த முச்சை சுழிமுனையில் “சிங்”என்று செலுத்தி குருவருளை வணங்கி வேண்டி "சிங்கு சிவா" என்று தினமும் நூறு முறை செபித்து வரவேண்டுமாம்.
இவ்வாறு தொடர்ந்து செபித்துவர உடலில் அக்கினி ஏறுமாம். அப்போது காமப்பால், கானப்பால், கனிந்தாமிர்தம் ஆகியவை ஊறுமாம். அப்போது அதை உணர்ந்து மௌனமாக இருந்தால், ஊறிய இம் மூன்றும் சுழிமுனை வாசல் வரை செல்லுமாம். அப்போது ஆகாயம், பூமி எங்கும் நீக்கமற பரந்து விரிந்து நிற்கும் பிரம்மம் நானே என்று உணரும் நிலை சித்திக்குமாம்.இதுவே மௌன தெரிசனமாகும் என்கிறார் அகத்தியர்.
தரிசனங்களுள் மௌன தரிசனம் மிகவும் சிறப்பாய் கூறப் பட்டிருக்கிறது. நாளைய பதிவில் ஆறாவது தரிசனமான “உள்ளமென்ற தரிசனம்” பற்றி பார்ப்போம்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment



4 comments:
உள்ளமென்ற தரிசனத்தை காண
தொடர்கிறோம் தோழி..
http://sivaayasivaa.blogspot.com
சிவயசிவ
நன்றி
Dear thozi,
This darshan symbolically represents Advaita philosophy.It is portrayed simply by the great
Ramana Maharishi.Thanks.
Dear thozi
thank-you very nice welcome.
Post a Comment