மனோ தரிசனம்.

Author: தோழி / Labels: ,

சித்தர் பெருமக்கள் அருளிய பதினாறு வகையான தரிசனங்களில் நான்காவது தரிசனமாகிய மனோ தரிசனம் பற்றி இன்று பார்ப்போம்.

முதல் மூன்று தரிசனங்களாகிய “ஆதார தரிசனம்”, “ஆத்ம தரிசனம்”, “அறிவு தரிசனம்” ஆகிய மூன்று தரிசனங்களில் சித்தி அடைந்தவர்களே இந்த நான்காவது தரிசனமாகிய மனோ தரிசனத்தை பயில வேண்டும் என்கிறார் அகத்தியர்.

வாருங்கள், மனோதரிசனம் பற்றி அகத்தியரின் மொழியில் என்ன கூறியிருக்கிறாரென பார்ப்போம்.

கானென்ற அறிவான தெரிசனந்தான் சொன்னேன்
கலங்காத மனமென்ற தெரிசனத்தைக்கேளு
வானென்ற பூரகத்தில் சிங்கொன்றூதி
மகத்தான சுழியினையிலே வாசிபூட்டி
பூனென்ற ஓம்அரிநம வென்றேதான்
புத்தியுடன் தினம்னூறு உருவேசெய்தால்
வானென்ற தேகம்வெகு குளிர்ச்சியாகும்
மகத்தான ஆனந்த மயமாந்தானே.

தானென்ற ஆனந்தம் தானேதானாய்
தன்மையுடன் நின்றநிலை தானேகண்டு
வானென்ற கேசரியில் மவுனம்பூட்டி
வரிசையுடன் அண்டகேசரத்தில் சென்றால்
யேனென்ற மனோன்மணிதான் முன்னேநின்று
யின்பரச அமுர்தமது யிவாள்மைந்தா
வீணென்று தெரிசனத்தை விட்டாயானால்
வேதாந்த மவுனமதுக் குறுதிபோச்சே.


குருவருளை வேண்டி வணங்கி மௌனமாக இருந்து “சிங்”என்று மனதை பூரகத்தில் நிறுத்தி, மூச்சை சுழிமுனையில் நிறுத்தி "ஓம் அரி நம" என்று தினமும் நூறு முறை செபித்துவரவேண்டுமாம். அப்படி செபித்து வந்தால் உடல் குளிர்ச்சியாகுவதுடன், மனமானது மிகவும் ஆனந்த நிலையில் இருக்குமாம்.

இவ்வாறு மனம் ஆனந்த நிலையில் இருக்கும் போது கேசரியில் மௌன நிலையை கைக்கொண்டால் மனோன்மணித் தாயின் தெரிசனம் கிடைக்குமாம். மனோன்மணி தாயின் தெரிசனம் கிடைத்தவுடன் மனமானது அனைத்தும் சித்தித்ததாக எண்ணுவதுடன், இனி தெரிசனம் எதுவும் கிட்டதேவையில்லை, இதுவே இறுதி தரிசனம் என்றும் நினைக்கவும் தோன்றுமாம். இதுவே மனோ தரிசனம் சித்தியடைந்த நிலையாக கூறுகிறார்.

இந்த மனோ தரிசனமே போதும் என நினைத்து மிச்சமிருக்கும் தரிசன முறைகளை பயிலாமல் விட்டுவிட்டால் இது வரை பெற்ற நான்கு தரிசன சித்துக்களும் வீணாகி விடுமாம். எனவே பதினாறு தரிசனங்களையும் தொடர்ந்து பயின்று சித்தியடைவதே முக்திக்கு வழி என்கிறார் அகத்தியர்.

நாளைய பதிவில் ஐந்தாவது தரிசன முறை பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

8 comments:

குணசேகரன்... said...

எப்ப வேறு டாபிக் எழுதுவீங்க?

-கிமூ- said...

" கேசரியில் மௌன நிலை " - என்றால் என்ன?

RAVINDRAN said...

நன்றி

tamilvirumbi said...

Dear thozi,
The explanation given by you to comprehend this darshan is so superb.But for,
everything, god's grace should guide us to get
guru to go further in the path of raja yoga.

Many thanks

kasi said...

hi
please give the contact no or email for a perfect jeevanaadi solution.

kasi said...

hi
please give contact no for perfect jeeva naadi

kasi
9865173291
geniusakv@gmail.com

krish said...

Nalla vidayam ellam solrinka rompa nanri

krish said...

Nalla vidayam ellam solrinka rompa nanri..

Post a Comment