நண்பர்களே,
சித்தர்களின் அரிய நூல்களை மின் நூலாக தொகுத்திடும் தொடர் முயற்சியில், பத்தாவது படைப்பாக கருவூரார் அருளிய ”கருவூரார் அருளிய கெவுன சூஸ்திரம்” என்ற நூலை மின் நூலாக தொகுத்து உங்களின் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்.
கருவூரார் போகரின் சீடர்களில் முக்கியமானவராக கருதப் படுகிறார். சோழ நாட்டில் உள்ள கருவூரில் பிறந்ததால் இவர் ஊரின் பெயராலே கருவூரார் என்றழைக்கப்பட்டார். கருவூர், திருகாளத்தி ஆகிய இடங்களில் சமாதியடைந்ததாக குறிப்புகள் காணக் கிடைக்கின்றன.
இவரது பாடல்கள் பொருளடர்ந்த வார்த்தைகளைக் கொண்டவை.இலகுவில் அவற்றின் பொருளறிவது சிரமம். இதன் பொருட்டே இவர் பாடல்களின் ஊடே விரவியிருக்கும் மறை பொருள்கள் இன்னமும் முழுமையாக அறியப் படவில்லை.
இந்த நூலைப் பற்றி கருவூரார் பின் வருமாறு விளக்குகிறார்.
"பாரப்பா யோகமொடு கண்டகங்கள்
பலகலையும் பாடினார் சித்தரெல்லாம்
நேரப்பா தொடக்கினியின் சூட்சமெல்லாம்
நிசமாக வாதகற்பந் தள்ளிச்சொன்னார்
ஆரப்பா யென்தம்பிக் கொப்புமுண்டோ
அலையாதே யிந்நூலைப் பாருபாரு"
யோகம் , கண்டகங்கள் என அனைத்தையும் பாடிய சித்தர்கள் உண்மையான வாத,கற்ப சூட்சுமங்களை மறைத்தே சொல்லியுள்ளார்கள் என குறிப்பிடும் இவர், அவற்றைத் தேடி எங்கும் அலையத்தேவையில்லை என்றும் தனது இந்த நூலை படித்தால் அவை அனைத்தும் சித்தியாகும் என்று கூறுகிறார்.
மேலும் தொடர்ந்து வாத, கற்ப செயல்முறைகள் மற்றும்
வாத,கற்ப ரகசியங்களை அறிந்து கொள்ள விரும்புவோருக்கு இந்த நூல் ஒரு வரப்பிரசாதம் என்றால் மிகையில்லை. இதற்குத் தேவையான அனைத்துவகை மூலிகை பற்றிய விவரங்கள், அவற்றின் பிரயோக முறைகள் விரிவாக இந்த நூலில் விளக்கப் பட்டிருக்கிறது.
தமிழ் அறிந்த அனைவரும் இந்த விவரங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்கிற நோக்கில் இந்த அரிய நூலை மின் நூலாக தொகுத்திருக்கிறேன்.இத்தகைய முயற்சிகளின் வெற்றி என்பது இத்தகைய நூல்கள் எத்தனை பேரைச் சென்று அடைகிறது என்பதில்தான் இருக்கிறது.எனவே தயவு செய்து இந்த மின் நூலினை பார்வையிடும் நண்பர்கள் அறிந்தவர், தெரிந்தவர் என்கிற பாகுபாடு இல்லாமல் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.
தொடரும் உங்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும், மேலான ஆலோசனைகளுக்கும் நன்றிகள் பல...
எனது மேலான குருவினை பணிந்து இந்த நூலை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
"கருவூரார் அருளிய கெவுன சூஸ்திரம்" மின்னூலைத் தரவிறக்க..
என்றும் நட்புடன்,
தோழி..
www.siththarkal.com
தொடர்புக்கு..
siththarkal@gmail.com
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment



7 comments:
"" வணக்கம் தோழி ""
உங்கள் முயற்சி மேலும் வளர ஆண்டவனை வேண்டுகிறேன்
!என்றும் அன்புடன்!
!!இறைவனடி யுவராஜா!!
இந்த மின் நூலுக்கு நன்றி. தங்களின் கடின உழைப்பு வியக்க வைக்கிறது
உங்கள் அனைத்து மின்நூல்களையும் ஒரு குறியீட்டின் கீழ் வைக்கலாமே..
நன்றி.
அறிவன்.
tharavirakkam seiyya enadhu kaniniyil mudiyavillai, udhavum. nandri - Ravi
Dear Thozi,
Thanks a lot for allowing me to download this E-book.
@subravimohan
karuvurarin gevuna nulai padithen, anal en arivukku athu antha padalgal vilangavillai, karutthurai vazhanginal nandra irukkum - Nandri thozhi
Post a Comment