சித்தர்களின் அஷ்டமாகர்மங்களில் எட்டாவது கலையான மாரணம் மற்ற பிற வகைகளை விட ஆபத்தானது. தான் நினைக்கிற ஒரு மனிதனுக்கு மரணத்தை உண்டு பண்ணக் கூடிய சாத்தியமுள்ளது இந்தக் கலை. மனதளவில் உயர்ந்த பக்குவம் உடையவர்களுக்கு மட்டுமே இத்தகைய கலையினைப் பயிலவும், சித்தியடையவும் வாய்ப்புக் கிட்டும். இந்த மாந்திரிக முறைகள் எதுவும் இதுவரை அறிவியல் ரீதியாக நிருபிக்கப் படவில்லை. மிகவும் ஆபத்தான இந்த கலையின் விவரங்களை ஒரு தகவல் பகிர்வாக மட்டுமே இங்கே தருகிறேன். எனவே ஆர்வம் மிகுதியால் இங்கே தந்துள்ள தகவல்களை வைத்துக் கொண்டு யாரும் எதையும் முயற்சிக்க வேண்டாம் என தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன்.
இனி மாரண முறைக்கான யந்திரம் வரைவதைப் பற்றி பார்ப்போம். கருவூரார் தனது பாடலில் இந்த யந்திரத்தினை வடிவமைக்கும் முறையினை பின்வருமாறு விளக்குகிறார்.
பாரேநீமாரணத்தின் போக்குச்சொல்வேன்.
பாலகனேபகராதே பாரிலேதான்
சீரேநீயிருந்திடுவாய்க் கொடுமையொத்த
செய்பாகங்கைபாகங் கண்டுமேதான்
கார்மேகம்போலேநீ யாடிப்பாரு
கழறாதேகருமிகட்கு யிந்தமார்க்கம்
பேர்பெற்றஎன் சீஷா வெகுசுருக்கு
பேணிப்பாரிருபத்தந் தரைதான்போடே.
போட்டுநீஐங்கோண அறுகோணந்தான்
புகழானநாற்கோண முக்கோணந்தான்
நீட்டமாய்வட்டமது போடுபோடு
நினைவாகமசிவயந வென்றுமாட்டு
கோட்டுகளில் - ஈம - நம் - லம் - சௌம்போடு
கொகைனேஐம்என்ற பீஜம்போடு
தாட்டிகமாதய் கிலியும் - சவ்வும் - ஸ்ரீஜம்
தன்மையடன் - ஐயும் - என்ற - பீஜம்போடே.
பீசமதுபோட்டவுடன் சொல்லக்கேளு
பெருமையாம் மூன்றாவ தணைபிடித்து
வாசகமாய்மாறிவிடு முன்போலையா
வரிசையாய்பதினொன்று நாலுபதினைந்து
நேசமாய்பனிரெண்டு ஒன்பதையா
நீகுழந்தாய்நாலாவ தணைபிடித்து
கூசமின்றிமாறிவிடு அறைகடோறும்யயய
குற்றமில்லைமாரணந்தான் சித்தியாச்சே.
இந்த பாடல்களில் குறிப்பிடப்பட்ட யந்திரத்தினை படியெடுத்தால் கீழே உள்ள படத்தினைப் போல யந்திரம் அமையும்.
இந்த யந்திரத்தினை செப்பு அல்லது வெள்ளியால் ஆன தகட்டில் கீறிக் கொள்ளவேண்டும். யந்திரங்களை கீறுவதற்கென சில பிரத்யேக முறைகள் இருக்கின்றன. அதன் படியே யந்திரங்கள் கீறப்பட் வேண்டும்.இவ்வாறு கீறப்பட்ட யந்திரத்தினை வைத்து மாரண முறையில் சித்தியடையத் தேவையான தந்திரத்தை இனி பார்ப்போம்.
குருவருளுடன் கூடிய ஒரு புதன் கிழமை நாளில், நாக மணிகளால் ஆன மாலையை அணிந்து கொண்டு அத்திப் பலகையால் ஆன ஆசனத்தில் தெற்கு திசை நோக்கி அமர்ந்திருந்து செப்பு அல்லது வெள்ளி தகட்டில் கீறிய யந்திரத்தை கருப்பு வண்ணப்பட்டுத் துணியில் வைக்க வேண்டும்.
பின்னர் மாரணத்திற்கான மூல மந்திரமான “ஓம் சிவயநம சவ்வும் ஸ்ரீயும் அரிஓம் சுவாகா” என்ற மந்திரத்தை அந்தி சந்தி வேளைகளில் 108 தடவை வீதம் ஒருமண்டலம் செபித்து கடலை மலர்களால் யந்திரத்தை அர்ச்சித்துவர மாரணம் சித்தியாகுமாம் என்கிறார் கருவூரார்.
நாளையுடன் இந்த மாந்திரிகம் தொடரினை நிறைவு செய்ய இருக்கிறேன்.
Post a Comment



7 comments:
வணக்கம் தோழியே..
எங்கிருந்துதான் இதுபோன்ற செய்திகளைப் பிடித்து தருகிறீர்களோ தெரியவில்லை..
மிகவும் சிறப்பாக இருக்கிறது..
வாழ்த்துக்கள்..
உண்மையிலேயே உங்கள் பதிவு ஆச்சர்யத்தை தருகிறது.
வணக்கம் குரு..
உங்களால் இந்த உலகத்துக்கும் தமிழ் மொழிக்கும் சித்தர்கள் பெருமை என்றும் அழியா வடிவம் கிடைத்தது.
aachchariyapadutthum thakavalkalai ungkalaal mattum thara mudikirathu.. vaalththukkal
Thanks for all your writings. I am really benefited by reading. I am also asking my friend and relatives to visit and read your writings.
Dear thozi,
Thanks a lot
Dear Holistic Soul, Thanks a lot, towards your spritual service. By R.Sedouramane, No.4, Ist cross, Dr.Radhakrishnan Nagar, Oulgaret, Puducherry - 605 010. e-mail : sedouramane@yahoo.com
Post a Comment