சித்தர்களின் மாந்திரிகத்தின் கடைசி வகையான மாரணம் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். இது வரையில் பார்த்த ஏழு வகைகளை விட அதி தீவிரமானதும், உயிராபத்தை தரக் கூடியது இந்த கலை. ஆம் ஒருவருக்கு மரணத்தையே தந்துவிடும் வல்லமை கொண்டது மாரணம்.
மாரணம் என்பது மரண துன்பத்தை தருவது என்று அர்த்தமாகிறது. இத்தனை ஆபத்தான முறையில் சித்தியடைய வேண்டுமெனில் உயரிய மனப் பக்குவம் உடையவர்களாய் இருத்தல் அவசியம். குருவானவர் தனது எந்த ஒரு சீடனுக்கும் ஆகக் கடைசியில்தான் இந்த கலையினை போதிக்கிறார்.
மாரண கலையில் சித்தியடைய தேவையான முன் தயாரிப்புகளைப் பற்றி இனி பார்ப்போம்.
மாரணத்திற்கான அதி தேவதை எமன்.
மாரணத்திற்கான மூல மந்திரம் “ஓம் சிவயநம சவ்வும் ஸ்ரீயும் அரிஓம் சுவாகா” ஆகும்
ஒரு புதன் கிழமையன்றே இதற்கான பயிற்சியினை துவக்கிட வேண்டும்.
தெற்கு திசையினை நோக்கி அமர்ந்தே மாரணத்திற்கான பயிற்சியில் ஈடுபடவேண்டும்.
நாகமணி மாலையினை அணிவதற்கும், செபிக்கவும் பயன்படுத்த வேண்டும்.
அத்தி மரத்தின் பலகையினை அமரும் ஆசனமாக பயன்படுத்த வேண்டும்.
கடலை மலரைக் கொண்டு யந்திரத்தினை அர்ச்சிக்க வேண்டும்.
செப்பு அல்லது வெள்ளியிலான தகட்டில் மாரண யந்திரத்தினை கீறிட வேண்டும்.
யந்திரத்தினை வரைவதைப் பற்றியும் அதனைக் கொண்டு சித்தியடையத் தேவையான தந்திரம் பற்றியும் நாளைய பதிவில் காண்போம்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment
4 comments:
Dear Thozi,
It is highly cautious to follow.As far as I am concerned,one person to attain siddhi at the cost of others,is
intolerable one.Thanks a lot for your today's
message.
//குருவானவர் தனது எந்த ஒரு சீடனுக்கும் ஆகக் கடைசியில்தான் இந்த கலையினை போதிக்கிறார்//- சரிதான்
நல்லா இருக்கு....சீக்கிரம் ரூட்டை மாத்துங்க..
do you need death less life ?
http://meivazhi-salai-truepath.blogspot.com
Post a Comment